பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
தாமரை | சித் ஸ்ரீராம் | ஜி.வி. பிரகாஷ் குமார் | சைரன் |
Netru Varai Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : நேற்று வரை நேற்று வரை…
தனித்திருந்தேன் யாரும் இல்லை…
இன்று முதல் தொடங்கியதே…
உலகின் முதல் காதல் கதை…
ஆண் : அனலாகவே வேகும் பனிபோல மோதும்…
மழை கால மேகம் கண்டேன்…
கரை சேர வேண்டும் கடல் என்று தேயும்…
உனை தேடி கண்டு கொண்டேன்…
ஆண் : பேசும் போதிலே கேளா ஒலி…
பார்வை ஆகுமே தீபாவளி…
உன்னை போல யாருமில்லை என் இறைவி…
ஆண் : நேற்று வரை நேற்று வரை…
தனித்திருந்தேன் யாரும் இல்லை…
இன்று முதல் தொடங்கியதே…
உலகின் முதல் காதல் கதை…
—BGM—
ஆண் : மௌனம் என்னும் உன் மொழியில்…
மழலையாய் ஆகி பேசுகிறாய்…
ஒலிகளினால் நம் உலகில்…
கவிதை சாயம் பூசுகிறாய்…
ஆண் : கனவா நனவா தெரியா நிலையே…
பகலாய் இரவாய் பழகும் கலையே…
ஆண் : நேற்று வரை நேற்று வரை…
தனித்திருந்தேன் யாரும் இல்லை…
இன்று முதல் தொடங்கியதே…
உலகின் முதல் காதல் கதை…
—BGM—
ஆண் : என்னது காற்றில் நீ கரைந்தாய்…
என்னது வானம் நீ அளந்தாய்…
என்னது வாசல் நீ திறந்தாய்…
எனது ஓசை நீ உணர்ந்தாய்…
ஆண் : ஒரு நாள் நிழலாய்…
தரையில் இருந்தாய்…
பிறகு என் மனதில்
நிலவாய் நிறைந்தாய்…
ஆண் : நேற்று வரை நேற்று வரை…
தனித்திருந்தேன் யாரும் இல்லை…
இன்று முதல் தொடங்கியதே…
உலகின் முதல் காதல் கதை…
Notes : Netru Varai Song Lyrics in Tamil. This Song from Siren (2024). Song Lyrics penned by Thamarai. நேற்று வரை பாடல் வரிகள்.