mazhaiyin-saaralil-song-lyrics

மழையின் சாரலில்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைநரேஷ் ஐயர் & ஸ்வேதா மோகன்தரண் குமார்ஆஹா கல்யாணம்

Mazhaiyin Saaralil Song Lyrics in Tamil


BGM

பெண் : மழையின் சாரலில் மழையின் சாரலில்…
நனைய தோன்றுது நடுங்க தோன்றுது…
பிழைகள் என்றே தெரிந்தும் கூட…
பிடித்துப் போனது புதையல் ஆனது…

பெண் : விருப்பம் பாதி தயக்கம் பாதி…
கடலில் ஒரு கால் கரையில் ஒரு கால்…
அலைகள் அடித்தே கடலில் விழவா…
துரும்பை பிடித்தே கரையில் எழவா…

பெண் : இதுவரை இது போலே…
இருமனம் கொண்டு தவித்ததில்லை…
அதிலுமே எனக்காக…
திருமணம் வரை நினைத்ததில்லை… ஓஹோ… ஓஹோ…
ஹ்ம்ம்… ஹ்ம்ம்… ஹ்ம்ம்… ஹ்ம்ம்… ஆஆஹா…

பெண் : மழையின் சாரலில் மழையின் சாரலில்…
நனைய தோன்றுது நடுங்க தோன்றுது…
பிழைகள் என்றே தெரிந்தும் கூட…
பிடித்துப் போனது புதையல் ஆனது…

ஆண் : சம்டைம்ஸ் ஐ நீட் யுவர் லவ்…
சம்டைம்ஸ் ஐ நீட் யுவர் ஹக்…
வாட் வுட் ஐ டூ நௌ…
வாட் வுட் ஐ டூ நௌ…
சம்டைம்ஸ் ஐ நீட் யூ…
சம்டைம்ஸ் ஐ பீல் யூ…
வாட் வுட் ஐ டூ நௌ…
வாட் வுட் ஐ டூ நௌ…

ஆண் : மழையின் சாரலில் மழையின் சாரலில்…
நனைய தோன்றுது நடுங்க தோன்றுது…

BGM

பெண் : யார் யாரோ பூச்சூட…
பூமாலை நான் வாங்க…
நான் சூடும் பூமாலை…
நாள் பார்த்து யார் வாங்க…

ஆண் : கண் பார்த்து நீ பேசும்…
போதெல்லாம் நான் ஏங்க…
மண் பார்த்து என்னோடு…
நீ பேசும் நாள் காண…

பெண் : வரைந்து பழகும் நிறங்கள் புழங்கும்…
ஓவியன் விரலின் கிறுக்கல் இதுவா…
நடந்து பழகும் விழுந்து அழுகும்…
குழந்தை வயதின் சறுக்கல் இதுவா…
ஆமாம்… ஆமாம்…

ஆண் : இருவர் சேர்ந்து ஒருவர் ஆனோம்…
தெரிந்து கொண்டே தொலைந்து போனோம்…
வா… ஆஆ… ஆஆ… ஆஆ… ஆஆ…

பெண் : ஓஓஓ… ஓஓஓ… ஓஓ… ஓஓ…

ஆண் : விருப்பம் பாதி தயக்கம் பாதி…
கடலில் ஒரு கால் கரையில் ஒரு கால்…
அலைகள் அடித்தே கடலில் விழவா…
துரும்பை பிடித்தே கரையில் எழவா…

பெண் : இதுவரை இது போலே…
இருமனம் கொண்டு தவித்ததில்லை…
அதிலுமே எனக்காக…
திருமணம் வரை நினைத்ததில்லை…

பெண் : மழையின் சாரலில் மழையின் சாரலில்…
நனைய தோன்றுது நடுங்க தோன்றுது…
பிழைகள் என்றே தெரிந்தும் கூட…
பிடித்துப் போனது புதையல் ஆனது…

பெண் : மழையின் சாரலில் மழையின் சாரலில்…
நனைய தோன்றுது நடுங்க தோன்றுது…
பிழைகள் என்றே தெரிந்தும் கூட…
பிடித்துப் போனது புதையல் ஆனது…

BGM


Notes : Mazhaiyin Saaralil Song Lyrics in Tamil. This Song from Aaha Kalyanam (2014). Song Lyrics penned by Thamarai. மழையின் சாரலில் பாடல் வரிகள்.