mannil-indha-song-lyrics

மண்ணில் இந்த

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
பாவலர் வரதராஜன்எஸ். பி. பாலசுப்ரமணியம்இளையராஜாகேளடி கண்மணி

Mannil Indha Song Lyrics in Tamil


BGM

ஆண் : மண்ணில் இந்தக் காதலன்றி யாரும் வாழ்தல் கூடுமோ…
எண்ணம் கன்னிப் பாவையின்றி ஏழு ஸ்வரந்தான் பாடுமோ…
பெண்மை இன்றி மண்ணில் இன்பம் ஏதடா…
கண்ணை மூடிக் கனவில் வாழும் மானிடா…

ஆண் : மண்ணில் இந்தக் காதலன்றி யாரும் வாழ்தல் கூடுமோ…
எண்ணம் கன்னிப் பாவையின்றி ஏழு ஸ்வரந்தான் பாடுமோ…
பெண்மை இன்றி மண்ணில் இன்பம் ஏதடா…
கண்ணை மூடிக் கனவில் வாழும் மானிடா…

BGM

ஆண் : வெண்ணிலவும் பொன்னி நதியும் கன்னியின் துணையின்றி…
என்ன சுகம் இங்கு படைக்கும் பெண்மயில் சுகமன்றி…
சந்தனமும் சங்கத்தமிழும் பொங்கிடும் வசந்தமும்…
சிந்திவரும் பொங்கும் அமுதம் தந்திடும் குமுதமும்…

ஆண் : கன்னிமகள் அருகே இருந்தால் சுவைக்கும்…
கன்னித்துணை இழந்தால் முழுதும் கசக்கும்…
விழியினில் மொழியினில் நடையினில் உடையினில்…
அதிசய சுகம் தரும் அனங்கிவள் பிறப்பிதுதான்…

ஆண் : மண்ணில் இந்தக் காதலன்றி யாரும் வாழ்தல் கூடுமோ…
எண்ணம் கன்னிப் பாவையின்றி ஏழு ஸ்வரந்தான் பாடுமோ…

BGM

ஆண் : முத்துமணி ரத்தினங்களும் கட்டிய பவழமும்…
கொத்துமலர் அற்புதங்களும் குவிந்த அதரமும்…
சிற்றிடையும் சின்ன விரலும் வில்லெனும் புருவமும்…
சுற்றிவரச் செய்யும் விழியும் சுந்தர மொழிகளும்…

ஆண் : எண்ணிவிட மறந்தால் எதற்க்கோர் பிறவி…
இத்தனையும் இழந்தால் அவன்தான் துறவி…
முடி முதல் அடிவரை முழுவதும் சுகம் தரும்…
விருந்துகள் படைத்திடும் அரங்கமும் அவளல்லவா…

ஆண் : மண்ணில் இந்தக் காதலன்றி யாரும் வாழ்தல் கூடுமோ…
எண்ணம் கன்னிப் பாவையின்றி ஏழு ஸ்வரந்தான் பாடுமோ…
பெண்மை இன்றி மண்ணில் இன்பம் ஏதடா…
கண்ணை மூடிக் கனவில் வாழும் மானிடா…

ஆண் : மண்ணில் இந்தக் காதலன்றி யாரும் வாழ்தல் கூடுமோ…
எண்ணம் கன்னிப் பாவையின்றி ஏழு ஸ்வரந்தான் பாடுமோ…


Notes : Mannil Indha Song Lyrics in Tamil. This Song from Keladi Kannmani (1990). Song Lyrics penned by Pavalar Varadarajan. மண்ணில் இந்த பாடல் வரிகள்.