பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
அறிவுமதி | பி. உன்னிகிருஷ்ணன், அருண்மொழி & எஸ்.என். சுரேந்தர் | இளையராஜா | சேது |
Maalai En Vedhanai Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : மாலை என் வேதனை கூட்டுதடி…
காதல் தன் வேலையை காட்டுதடி…
ஆண் : என்னை வாட்டும் வேலை ஏனடி…
நீ சொல்வாய் கண்மணி…
முகம் காட்டு எந்தன் பௌர்ணமி…
என் காதல் வீணை நீ…
ஆண் : வேதனை சொல்லிடும் ராகத்திலே…
வேகுதே என் மனம் மோகத்திலே… ஏ…
ஆண் : மாலை என் வேதனை கூட்டுதடி…
காதல் தன் வேலையை காட்டுதடி…
—BGM—
ஆண் : காதலில் தோற்றவர் கதை உண்டு…
இங்கே ஆயிரம்… ம்ம்ம்… ம்ம்ம்…
ஆண் : வேண்டாத பேச்சுக்கள் ஏன்டா அம்பி…
ஆண் : காதலும் பொய்யும் இல்லை…
உண்மை கதை மண்ணில் ஆயிரம்… ம்ம்ம்… ம்ம்ம்…
ஆண் : உன் காதல் சஸ்பென்ஸ் என்ன அம்பி…
ஆண் : காதல் செஞ்சா பாவம்…
அந்த ஆதாம் காலத்தில்…
ஆண் : எதுக்கு வீணா சோகம்…
கதைய முடிடா நேரத்தில்…
ஆண் : பூங்கிளி கைவரும் நாள் வருமா… ஆ…
பூமியில் சொர்கமும் தோன்றிடுமா… ஆஅ…
ஆண் : மாலை என் வேதனை கூட்டுதடி…
காதல் தன் வேலையை காட்டுதடி…
—BGM—
ஆண் : காற்று விடும் கேள்விக்கு…
மலர் சொல்லும் பதில் என்னவோ… ம்ம்ம்… ம்ம்ம்…
ஆண் : வாசங்கள் பேசாத பதிலா தம்பி…
ஆண் : மேகம் விடும் கேள்விக்கு…
வெண்ணிலவின் பதில் என்னவோ… ம்ம்ம்…ம்ம்ம்…
ஆண் : கடல் ஆடும் அலை கூட பதில்தான் தம்பி…
ஆண் : அவளின் மௌனம் பார்த்து…
பதை பதிக்கும் என் மனம்…
பெண் : வேண்டாத எண்ணம் வரும் காதல் திருமணம்…
ஆண் : மோகமுள் நெஞ்சிலே பாய்கிறதே…
என் மனம் அவள் மடி சாய்கிறதே…
ஆண் : மாலை என் வேதனை கூட்டுதடி…
காதல் தன் வேலையை காட்டுதடி…
ஆண் : என்னை வாட்டும் வேலை ஏனடி…
நீ சொல்வாய் கண்மணி…
முகம் காட்டு எந்தன் பௌர்ணமி…
என் காதல் வீணை நீ…
ஆண் : வேதனை சொல்லிடும் ராகத்திலே…
வேகுதே என் மனம் மோகத்திலே… ஏ…
ஆண் : மாலை என் வேதனை கூட்டுதடி…
காதல் தன் வேலையை காட்டுதடி…
Notes : Maalai En Vedhanai Song Lyrics in Tamil. This Song from Sethu (1999). Song Lyrics penned by Arivumathi. மாலை என் வேதனை பாடல் வரிகள்.