karuva-karuva-payale-song-lyrics-in-tamil

கருவா கருவா பயலே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிஷங்கர் மகாதேவன் & ஷாஷா திருப்பதிடி. இமான்கருப்பன்

Karuva Karuva Payale Song Lyrics in Tamil


BGM

பெண் : கருவா கருவா பயலே…
என கேட்காம தொட வாயா…
சூட்ட ஏத்தாம…

ஆண் : வரவா வரவா புயலே…
உன்ன தாக்காம விடமாட்டேன்…
ஆட்டம் பார்க்காம…

பெண் : என்ன வேண்ணா என்ன நீ செஞ்சிக்கோயா…
நிதம் பூக்குறேன் தாமரையா…

ஆண் : இப்போ பாரு உன்ன நானும் முட்டப்போறேன்…
அடி ஆத்தி நீ தாங்குவியா…

பெண் : நெருப்பா… என ஆக்குறியே செவப்பா…

பெண் : கருவா கருவா பயலே…
என கேட்காம தொட வாயா…
சூட்ட ஏத்தாம…

ஆண் : ஓ… வரவா வரவா புயலே…
உன்ன தாக்காம விடமாட்டேன்…
ஆட்டம் பார்க்காம…

BGM

ஆண் : வெளஞ்ச காட்ட…
வெறிக்கும் மாட்ட…
விரட்ட நெனெச்சா…
பாயும் உன்மேல…

பெண் : கொதிக்கும் சூட்ட…
நெதைக்கும் ஆத்த…
துணிஞ்சி வருவேன்…
ஆட்டாத வால…

ஆண் : விஷ காத்தா…
மோதாத மூச்சோட…

பெண் : வெறி ஏற…
வாரேனே கூத்தாட…

ஆண் : வெட கோழி ருசி ஏத்தி…
விருந்து போடேண்டி நா சாப்பிட…

பெண் : கருவா கருவா பயலே…
என கேட்காம தொட வாயா…
சூட்ட ஏத்தாம…

BGM

பெண் : அடுக்கு பாண…
முறுக்கு போல…
எனையும் நொறுக்க…
நேரம் பாக்காத…

ஆண் : அலுப்பு தீர…
அணைக்க போறேன்…
ஒடம்பு வலிச்சா…
ஊர கூட்டாத…

பெண் : கருப்பா வா…
பேசாத வாய்யால…

ஆண் : அடி போடி…
பாப்பேண்டீ ஊடால…

பெண் : பொலிகாளை உனைநானே…
அடக்க போறேனே மாராப்புல…

பெண் : கருவா கருவா பயலே…
என கேட்காம தொட வாயா…
சூட்ட ஏத்தாம…

ஆண் : ஓ… வரவா வரவா புயலே…
உன்ன தாக்காம விடமாட்டேன்…
ஆட்டம் பார்க்காம…

பெண் : என்ன வேண்ணா என்ன நீ செஞ்சிக்கோயா…
நிதம் பூக்குறேன் தாமரையா…

ஆண் : இப்போ பாரு உன்ன நானும் முட்டப்போறேன்…
அடி ஆத்தி நீ தாங்குவியா…

பெண் : நெருப்பா… என ஆக்குறியே செவப்பா…
செவப்பா… செவப்பா…


Notes : Karuva Karuva Payale Song Lyrics in Tamil. This Song from Karuppan (2017). Song Lyrics penned by Yugabharathi. கருவா கருவா பயலே பாடல் வரிகள்.