kannaana-kanney-song-lyrics

கண்ணான கண்ணே

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைசித் ஶ்ரீராம்டி. இமான்விஸ்வாசம்

Kannaana Kanney Song Lyrics in Tamil


BGM

ஆண் : கண்ணான கண்ணே…
கண்ணான கண்ணே…
என் மீது சாய வா…
புண்ணான நெஞ்சை…
பொன்னான கையால்…
பூ போல நீவ வா…

ஆண் : நான் காத்து நின்றேன்…
காலங்கள் தோறும்…
என் ஏக்கம் தீருமா…

ஆண் : நான் பார்த்து நின்றேன்…
பொன் வானம் எங்கும்…
என் மின்னல் தோன்றுமா…

ஆண் : தண்ணீராய் மேகம் தூறும்…
கண்ணீர் சேரும்…
கற்கண்டாய் மாறுமா…

ஆண் : ஆராரி… ராரோ ராரோ ராரோ ஆராரி ராரோ…
ஆராரி… ராரோ ராரோ ராரோ ஆராரி ராரோ…

ஆண் : ஆராரி… ராரோ ராரோ ராரோ ஆராரி ராரோ…
ஆராரி… ராரோ ராரோ ராரோ ஆராரி ராரோ…

ஆண் : கண்ணான கண்ணே…
கண்ணான கண்ணே…
என் மீது சாய வா…
புண்ணான நெஞ்சை…
பொன்னான கையால்…
பூ போல நீவ வா…

BGM

ஆண் : ஆஆ… ஆஅ… ஆஅ… ஆஅ…
ஆஅ…. ஆஅ…. ஆஅ…. ஆ..

ஆண் : அலை கடலின் நடுவே…
அலைந்திடவா தனியே…
படகெனவே உனையே…
பார்த்தேன் கண்ணே….

ஆண் : புதை மணலில் வீழ்ந்து…
புதைந்திடவே இருந்தேன்…
குறு நகை எரிந்தே…
மீட்டாய் என்னை…

ஆண் : விண்ணோடும் மண்ணோடும் வாடும்…
பெரும் ஊஞ்சல்… மனதோரம்…
கண்பட்டு நூல் விட்டு போகும்…
என ஏதோ… பயம் கூடும்…

ஆண் : மயில் ஒன்றை பார்க்கிறேன்…
மழையாகி ஆடினேன்…
இந்த உற்சாகம் போதும்…
சாக தோன்றும்… இதே வினாடி…

ஆண் : கண்ணான கண்ணே…
கண்ணான கண்ணே…
என் மீது சாய வா…
புண்ணான நெஞ்சை…
பொன்னான கையால்…
பூ போல நீவ வா…

ஆண் : நீ தூங்கும் போது…
உன் நெற்றி மீது…
முத்தங்கள் வைக்கணும்…

ஆண் : போர்வைகள் போர்த்தி…
போகாமல் தாழ்த்தி…
நான் காவல் காக்கணும்…
எல்லோரும் தூங்கும் நேரம்…
நானும் நீயும் மௌனத்தில் பேசணும்…

ஆண் : ஆராரி ராரோ ராரோ ராரோ ஆராரி ராரோ…
ஆராரி ராரோ ராரோ ராரோ ஆராரி ராரோ…

ஆண் : ஆராரி… ராரோ ராரோ ராரோ ஆராரி ராரோ…
ஆராரி… ராரோ ராரோ ராரோ ஆராரி ராரோ…

ஆண் : கண்ணான கண்ணே…
கண்ணான கண்ணே…


Notes : Kannaana Kanney Song Lyrics in Tamil. This Song from Viswasam (2019). Song Lyrics penned by Thamarai. கண்ணான கண்ணே பாடல் வரிகள்.