kaatre-en-vasal-song-lyrics

காற்றே என் வாசல்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துகவிதா பவுட்வல் & பி.உன்னிகிருஷ்ணன்ஏ.ஆர்.ரகுமான்ரிதம்

Kaatre En Vasal Song Lyrics in Tamil


BGM

ஆண் : காற்றே என் வாசல் வந்தாய்…
மெதுவாக கதவு திறந்தாய்…
காற்றே உன் பேரை கேட்டேன் காதல் என்றாய்…

ஆண் : நேற்று நீ எங்கு இருந்தாய்…
காற்றே நீ சொல்வாய் என்றேன்…
சுவாசத்தில் இருந்ததாக சொல்லி சென்றாய்…

ஆண் : துள்ளி வரும் காற்றே துள்ளி வரும் காற்றே…
தாய் மொழி பேசு…
நிலவுள்ள வரையில் நிலமுள்ள வரையில்…
நெஞ்சினில் வீசு…
துள்ளி வரும் காற்றே துள்ளி வரும் காற்றே…
தாய் மொழி பேசு…

பெண் : காற்றே என் வாசல் வந்தாய்…
மெதுவாக கதவு திறந்தாய்…
காற்றே உன் பேரை கேட்டேன் காதல் என்றாய்…

பெண் : நேற்று நீ எங்கு இருந்தாய்…
காற்றே நீ சொல்வாய் என்றேன்…
சுவாசத்தில் இருந்ததாக சொல்லி சென்றாய்…

பெண் : துள்ளி வரும் காற்றே துள்ளி வரும் காற்றே…
தாய் மொழி பேசு…
நிலவுள்ள வரையில் நிலமுள்ள வரையில்…
நெஞ்சினில் வீசு…
துள்ளி வரும் காற்றே துள்ளி வரும் காற்றே…
தாய் மொழி பேசு…

பெண் : காற்றே என் வாசல் வந்தாய்…
மெதுவாக கதவு திறந்தாய்…
காற்றே உன் பேரை கேட்டேன் காதல் என்றாய்…

BGM

ஆண் : கார்காலம் அழைக்கும் போது…
ஒளிந்துகொள்ள நீ வேண்டும்…
தாவணி குடை பிடிப்பாயா… ஆ…

பெண் : அன்பே நான் உறங்க வேண்டும்…
அழகான இடம் வேண்டும்…
கண்களில் இடம் கொடுப்பாயா…

ஆண் : நீ என்னருகில் வந்து நெளிய…
நான் உன் மனதில் சென்று ஒளிய…
நீ உன் மனதில் என்னுருவம் கண்டுபிடிப்பாயா… ஆஆ…

பெண் : பூக்களுக்குள்ளே தேன் உள்ள வரையில்…
காதலர் வாழ்க…
பூக்களுக்குள்ளே தேன் உள்ள வரையில்…
காதலர் வாழ்க…

ஆண் : பூமிக்கு மேலே வானுல வரையில்…
காதலும் வாழ்க…

ஆண் : காற்றே என் வாசல் வந்தாய்…
மெதுவாக கதவு திறந்தாய்…
காற்றே உன் பேரை கேட்டேன் காதல் என்றாய்…

பெண் : ம்ம்ம்… நேற்று நீ எங்கு இருந்தாய்…
காற்றே நீ சொல்வாய் என்றேன்…
சுவாசத்தில் இருந்ததாக சொல்லி சென்றாய்…

BGM

பெண் : நெடுங்காலம் சிப்பிக்குள்ளே…
உருண்டு நிற்க்கும் முத்து போல்…
என் பெண்மை திரண்டு நிற்கிறதே… ஏ…

ஆண் : திறக்காத சிப்பி என்னை…
திறந்து கொள்ள சொல்கிறதா…
என் நெஞ்சம் மருண்டு நிற்கிறதே… ஏ…

பெண் : நான் சிறு குழந்தை என்று நினைத்தேன்…
உன் வருகையினால் வயதறிந்தேன்…
என்னை மறுபடியும் சிறு பிள்ளையாய் செய்வாயா… ஆ ஆ…

ஆண் : கட்டிலிடும் வயதில் தொட்டிலிட சொன்னால்…
சரியா சரியா…
கட்டிலிடும் வயதில் தொட்டிலிட சொன்னால்…
சரியா சரியா…

பெண் : கட்டிலில் இருவரும் குழந்தைகள் ஆனால்…
பிழையா பிழையா…

ஆண் : காற்றே என் வாசல் வந்தாய்…
மெதுவாக…

பெண் : காற்றே உன் பேரை கேட்டேன்…
காதல் என்றாய்…

பெண் : துள்ளி வரும் காற்றே துள்ளி வரும்…
காற்றே தாய் மொழி பேசு…
நிலவுள்ள வரையில் நிலமுள்ள வரையில்…
நெஞ்சினில் வீசு…

பெண் : துள்ளி வரும் காற்றே துள்ளி வரும் காற்றே…
தாய் மொழி பேசு…
துள்ளி வரும் காற்றே துள்ளி வரும் காற்றே…
தாய் மொழி பேசு…


Notes : Kaatre En Vasal Song Lyrics in Tamil. This Song from Rhythm (2000). Song Lyrics penned by Vairamuthu. காற்றே என் வாசல் பாடல் வரிகள்.