பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
டி.ராஜேந்தர் | கே.ஜே. யேசுதாஸ் | டி.ராஜேந்தர் | உயிருள்ளவரை உஷா |
Vaigai Karai Katre Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : வைகைக் கரை காற்றே நில்லு…
வஞ்சிதனைப் பார்த்தால் சொல்லு…
வைகைக் கரை காற்றே நில்லு…
வஞ்சிதனைப் பார்த்தால் சொல்லு…
ஆண் : மன்னன் மனம் வாடுதென்று…
மங்கை தனைத் தேடுதென்று…
காற்றே பூங்காற்றே…
என் கண்மணி அவளைக் கண்டால் நீயும்…
காதோரம் போய் சொல்லு…
—BGM—
ஆண் : வைகைக் கரை காற்றே நில்லு…
வஞ்சிதனைப் பார்த்தால் சொல்லு…
வைகைக் கரை காற்றே நில்லு…
வஞ்சிதனைப் பார்த்தால் சொல்லு…
ஆண் : மன்னன் மனம் வாடுதென்று…
மங்கை தனைத் தேடுதென்று…
காற்றே பூங்காற்றே…
என் கண்மணி அவளைக் கண்டால் நீயும்…
காதோரம் போய் சொல்லு…
—BGM—
ஆண் : திருக்கோவில் வாசல் அது திறக்கவில்லை…
தெருக்கோடி பூஜை அது நடக்கவில்லை…
தேவதையைக் காண்பதற்கு வழியுமில்லை…
தேன்மொழியைக் கேட்பதற்கு வகையுமில்லை…
ஆண் : காதலில் வாழ்ந்த கன்னி மனம்…
காவலில் வாடையில் கண்ணிவிடும்…
ஆண் : கூண்டுக்குள்ளே அலைமோதும்…
காதல் கிளி அவள் பாவம்…
கூண்டுக்குள்ளே அலைமோதும்…
காதல் கிளி அவள் பாவம்…
காதல் கிளி அவள் பாவம்…
ஆண் : காற்றே பூங்காற்றே…
என் கண்மணி அவளைக் கண்டால் நீயும்…
காதோரம் போய் சொல்லு…
—BGM—
ஆண் : மாக்கோலம் போடுதற்கு வரவில்லையே…
அவள் கோலம் பார்ப்பதற்கு வழியில்லையே…
ஜன்னலுக்குள் நிலவு அவள் தோன்றவில்லையே…
ஜாடையொலி சிந்த அவள் இன்று இல்லையே…
ஆண் : நிலவினை மேகம் வானில் மறைக்க…
அவளினை யாரோ வீட்டில் தடுக்க…
மேகமது விலகாதோ சோகமது நீங்காதோ…
மேகமது விலகாதோ சோகமது நீங்காதோ…
சோகமது நீங்காதோ…
ஆண் : காற்றே பூங்காற்றே…
என் கண்மணி அவளைக் கண்டால் நீயும்…
காதோரம் போய் சொல்லு…
—BGM—
ஆண் : வைகைக் கரை காற்றே நில்லு…
வஞ்சிதனைப் பார்த்தால் சொல்லு…
வைகைக் கரை காற்றே நில்லு…
வஞ்சிதனைப் பார்த்தால் சொல்லு…
ஆண் : மன்னன் மனம் வாடுதென்று…
மங்கைதனைத் தேடுதென்று…
காற்றே பூங்காற்றே…
என் கண்மணி அவளைக் கண்டால் நீயும்…
காதோரம் போய் சொல்லு…
ஆண் : நீ காதோரம் போய் சொல்லு…
நீ காதோரம் போய் சொல்லு…
Notes : Vaigai Karai Katre Song Lyrics in Tamil. This Song from Uyirullavarai Usha (1983). Song Lyrics penned by T. Rajendar. வைகைக் கரை காற்றே பாடல் வரிகள்.