கானக் கருங்குயிலே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்மனோ & கே.எஸ். சித்ராஇளையராஜாபொன்மன செல்வன்

Kaana Karunguyile Song Lyrics in Tamil


பெண் : கானக் கருங்குயிலே…
காதல் ஓர் பாவமடி…

BGM

பெண் : கானக் கருங்குயிலே காதல் ஓர் பாவமடி…
காதல் கணக்கினிலே கண்ணீர்தான் லாபமடி…

பெண் : ஆசை உண்டானது…
அதில் வீடு ரெண்டானது…

பெண் : அடி கானக் கருங்குயிலே…
காதல் ஓர் பாவமடி…

BGM

ஆண் : பூமியில் நாம் பிறந்த ஜாதகம் மாறுது…
என் விதி மேடை கட்டி நாடகம் ஆடுது…

ஆண் : வஞ்சியே உன் மனம் என்னிடம் ஏன் வந்தது…
வந்ததால் இத்தனை துன்பமும் வாய்ந்தது…
வேதனை சோதனை யாரிடம் நான் சொல்வது…
என் மனம் இன்றுதான் அம்பலம் ஆனது…

ஆண் : நீயும் இந்த துக்கத்திலே…
நில்லு மறு பக்கத்திலே…
நேரம் ஒரு காலம் வரக் கூடும்…
அன்று ஒண்ணாகலாம்…

பெண் : கானக் கருங்குயிலே…
காதல் ஓர் பாவமடி…
ஆசை உண்டானது…
அதில் வீடு ரெண்டானது…

BGM

பெண் : கண்களில் நீர் வழிந்து கன்னத்தில் ஓடுது…
கற்பனை ஆயிரம்தான் எண்ணத்தில் ஓடுது…

பெண் : வானமே இல்லையே வெண்ணிலா என்னாவது…
வளர்வதா தேய்வதா யாரிடம் கேட்பது…
பூ மரம் இல்லையே பூங்கொடி என்னாவது…
வாழ்வதா வீழ்வதா யாரிடம் கேட்பது…

பெண் : இருந்தால் இனி உன்னோடுதான்…
இல்லையேல் உடல் மண்ணோடுதான்…
மாலை இடும் வேளை வரும் நாளை…
என்றுதான் வாழ்கிறேன்…

ஆண் : கானக் கருங்குயிலே காதல் ஓர் பாவமடி…
ஆசை உண்டானது…
அதில் வீடு ரெண்டானது…

பெண் : அடி கானக் கருங்குயிலே காதல் ஓர் பாவமடி…
ஆண் : காதல் கணக்கினிலே கண்ணீர்தான் லாபமடி…


Notes : Kaana Karunguyile Song Lyrics in Tamil. This Song from Ponmana Selvan (1989). Song Lyrics penned by Gangai Amaran. கானக் கருங்குயிலே பாடல் வரிகள்.