கானக் கருங்குயிலே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்மனோ & கே.எஸ். சித்ராஇளையராஜாபொன்மன செல்வன்

Kaana Karunguyile Song Lyrics in Tamil


பெண் : கானக் கருங்குயிலே…
காதல் ஓர் பாவமடி…

BGM

பெண் : கானக் கருங்குயிலே காதல் ஓர் பாவமடி…
காதல் கணக்கினிலே கண்ணீர்தான் லாபமடி…

பெண் : ஆசை உண்டானது…
அதில் வீடு ரெண்டானது…

பெண் : அடி கானக் கருங்குயிலே…
காதல் ஓர் பாவமடி…

BGM

ஆண் : பூமியில் நாம் பிறந்த ஜாதகம் மாறுது…
என் விதி மேடை கட்டி நாடகம் ஆடுது…

ஆண் : வஞ்சியே உன் மனம் என்னிடம் ஏன் வந்தது…
வந்ததால் இத்தனை துன்பமும் வாய்ந்தது…
வேதனை சோதனை யாரிடம் நான் சொல்வது…
என் மனம் இன்றுதான் அம்பலம் ஆனது…

ஆண் : நீயும் இந்த துக்கத்திலே…
நில்லு மறு பக்கத்திலே…
நேரம் ஒரு காலம் வரக் கூடும்…
அன்று ஒண்ணாகலாம்…

பெண் : கானக் கருங்குயிலே…
காதல் ஓர் பாவமடி…
ஆசை உண்டானது…
அதில் வீடு ரெண்டானது…

BGM

பெண் : கண்களில் நீர் வழிந்து கன்னத்தில் ஓடுது…
கற்பனை ஆயிரம்தான் எண்ணத்தில் ஓடுது…

பெண் : வானமே இல்லையே வெண்ணிலா என்னாவது…
வளர்வதா தேய்வதா யாரிடம் கேட்பது…
பூ மரம் இல்லையே பூங்கொடி என்னாவது…
வாழ்வதா வீழ்வதா யாரிடம் கேட்பது…

பெண் : இருந்தால் இனி உன்னோடுதான்…
இல்லையேல் உடல் மண்ணோடுதான்…
மாலை இடும் வேளை வரும் நாளை…
என்றுதான் வாழ்கிறேன்…

ஆண் : கானக் கருங்குயிலே காதல் ஓர் பாவமடி…
ஆசை உண்டானது…
அதில் வீடு ரெண்டானது…

பெண் : அடி கானக் கருங்குயிலே காதல் ஓர் பாவமடி…
ஆண் : காதல் கணக்கினிலே கண்ணீர்தான் லாபமடி…


Notes : Kaana Karunguyile Song Lyrics in Tamil. This Song from Ponmana Selvan (1989). Song Lyrics penned by Gangai Amaran. கானக் கருங்குயிலே பாடல் வரிகள்.


Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Scroll to Top