பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
கங்கை அமரன் | மனோ & கே.எஸ். சித்ரா | இளையராஜா | பொன்மன செல்வன் |
Kaana Karunguyile Song Lyrics in Tamil
பெண் : கானக் கருங்குயிலே…
காதல் ஓர் பாவமடி…
—BGM—
பெண் : கானக் கருங்குயிலே காதல் ஓர் பாவமடி…
காதல் கணக்கினிலே கண்ணீர்தான் லாபமடி…
பெண் : ஆசை உண்டானது…
அதில் வீடு ரெண்டானது…
பெண் : அடி கானக் கருங்குயிலே…
காதல் ஓர் பாவமடி…
—BGM—
ஆண் : பூமியில் நாம் பிறந்த ஜாதகம் மாறுது…
என் விதி மேடை கட்டி நாடகம் ஆடுது…
ஆண் : வஞ்சியே உன் மனம் என்னிடம் ஏன் வந்தது…
வந்ததால் இத்தனை துன்பமும் வாய்ந்தது…
வேதனை சோதனை யாரிடம் நான் சொல்வது…
என் மனம் இன்றுதான் அம்பலம் ஆனது…
ஆண் : நீயும் இந்த துக்கத்திலே…
நில்லு மறு பக்கத்திலே…
நேரம் ஒரு காலம் வரக் கூடும்…
அன்று ஒண்ணாகலாம்…
பெண் : கானக் கருங்குயிலே…
காதல் ஓர் பாவமடி…
ஆசை உண்டானது…
அதில் வீடு ரெண்டானது…
—BGM—
பெண் : கண்களில் நீர் வழிந்து கன்னத்தில் ஓடுது…
கற்பனை ஆயிரம்தான் எண்ணத்தில் ஓடுது…
பெண் : வானமே இல்லையே வெண்ணிலா என்னாவது…
வளர்வதா தேய்வதா யாரிடம் கேட்பது…
பூ மரம் இல்லையே பூங்கொடி என்னாவது…
வாழ்வதா வீழ்வதா யாரிடம் கேட்பது…
பெண் : இருந்தால் இனி உன்னோடுதான்…
இல்லையேல் உடல் மண்ணோடுதான்…
மாலை இடும் வேளை வரும் நாளை…
என்றுதான் வாழ்கிறேன்…
ஆண் : கானக் கருங்குயிலே காதல் ஓர் பாவமடி…
ஆசை உண்டானது…
அதில் வீடு ரெண்டானது…
பெண் : அடி கானக் கருங்குயிலே காதல் ஓர் பாவமடி…
ஆண் : காதல் கணக்கினிலே கண்ணீர்தான் லாபமடி…
Notes : Kaana Karunguyile Song Lyrics in Tamil. This Song from Ponmana Selvan (1989). Song Lyrics penned by Gangai Amaran. கானக் கருங்குயிலே பாடல் வரிகள்.