பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
மு. மேத்தா | மனோ & கே.எஸ். சித்ரா | இளையராஜா | பெரியவீட்டுப் பண்ணக்காரன் |
Nikkattumaa Pogattuma Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : நிக்கட்டுமா போகட்டுமா…
நீலக்கருங்குயிலே நீலக்கருங்குயிலே…
தாவணி போய் சேலை வந்து…
சேலைத் தொடும் வேளை வந்து தாவுதடி…
பெண் : சொல்லட்டுமா தள்ளட்டுமா…
சோலைக் கருங்குயிலே சோலைக் கருங்குயிலே…
—BGM—
பெண் : ஓடையில் நான் அமர்ந்தேன்…
அதில் என் முகம் பார்த்திருந்தேன்…
ஓடையில் பார்த்த முகம்…
அது உன் முகம் ஆனதென்ன…
வாடையில் மாறிடும் பூவினைப்போல்…
என் நெஞ்சமும் ஆனதென்ன…
ஆண் : தேரடி வீதியிலே ஒரு தோரணம் நான் தொடுத்தேன்…
தோரண வாசலிலே ஒரு சோடியை கைப்பிடித்தேன்…
பிடித்த கரம் இணைந்திடுமா…
இணைந்திடும் நாள் வருமா…
பெண் : சொல்லட்டுமா தள்ளட்டுமா…
சோலைக் கருங்குயிலே சோலைக் கருங்குயிலே…
தாவணி போய் சேலை வரும்…
சேலையுடன் மாலை வரும் நான் வரட்டும்…
ஆண் : நிக்கட்டுமா போகட்டுமா…
நீலக்கருங்குயிலே நீலக்கருங்குயிலே…
—BGM—
ஆண் : ராத்திரி நேரத்திலே ஒரு ராகமும் கேட்டதடி…
கேட்டது கிடைக்குமென்று ஒரு சேதியும் சொன்னதடி…
மல்லிகை பூச்செடி பூத்தது போல்…
என் உள்ளமும் பூத்ததடி…
பெண் : அம்மனின் கோவிலிலே…
அன்று ஆசையில் நான் நடந்தேன்…
உன் மனக் கோவிலிலே…
மெட்டி ஓசையில் பின் தொடர்ந்தேன்…
நாடியது நடந்திடுமா
நடந்திடும் நாள்வருமா…
ஆண் : நிக்கட்டுமா போகட்டுமா…
நீலக்கருங்குயிலே நீலக்கருங்குயிலே…
பெண் : தாவணி போய் சேலை வந்து…
சேலையுடன் மாலை வரும் நான் வரட்டும்…
ஆண் : நிக்கட்டுமா போகட்டுமா…
நீலக்கருங்குயிலே நீலக்கருங்குயிலே…
பெண் : சோலை கருங்குயிலே சோலை கருங்குயிலே…
Notes : Nikkattumaa Pogattuma Song Lyrics in Tamil. This Song from Periya Veetu Pannakkaran (1990). Song Lyrics penned by Mu. Metha. நிக்கட்டுமா போகட்டுமா பாடல் வரிகள்.