பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
நா. காமராசன் | கே.ஜே. யேசுதாஸ் & கே.எஸ். சித்ரா | இளையராஜா | பெரியவீட்டுப் பண்ணக்காரன் |
Malligaiye Malligaiye Song Lyrics in Tamil
—BGM—
பெண் : மல்லிகையே மல்லிகையே தூதாகப் போ…
துள்ளி வரும் தென்றலையே நீ சேர்த்துப் போ…
நோய் கொண்டு நான் சிறு நூலாகினேன்…
தேயாமலே பிறை போல் ஆகிறேன்…
தாங்காது இனி தாங்காது…
பெண் : மல்லிகையே மல்லிகையே தூதாகப் போ…
துள்ளி வரும் தென்றலையே நீ சேர்த்துப் போ…
—BGM—
ஆண் : சந்திரனும் சுட்டது இங்கே…
சந்தனமும் போனது எங்கே…
சந்திரனும் சுட்டது இங்கே…
சந்தனமும் போனது எங்கே…
ஆண் : ஒத்தையிலே நிக்கிறேன் கண்ணே…
நித்திரையும் கெட்டது பெண்ணே…
ஒத்தையிலே நிக்கிறேன் கண்ணே…
நித்திரையும் கெட்டது பெண்ணே…
பெண் : மணிக் குயில் பாடும் குரல் கேட்டு வருவாயா…
தனிமையில் வந்து ஒன்று கேட்டால் தருவாயா…
ஆண் : மீண்டும் மீண்டும் நீ அதைக் கேட்டுப் பாரம்மா…
ஆண் : மல்லிகையே மல்லிகையே தூதாகப் போ…
துள்ளி வரும் தென்றலையே நீ சேர்த்துப் போ…
நோய் கொண்டு நான் சிறு நூலாகினேன்…
தேயாமலே பிறை போல் ஆகிறேன்…
தாங்காது இனி தாங்காது…
ஆண் : மல்லிகையே மல்லிகையே தூதாகப் போ…
துள்ளி வரும் தென்றலையே நீ சேர்த்துப் போ…
—BGM—
குழு : தனதந்த தனதந்த தனதந்த தனதந்த தனானா…
தனதந்த தனதந்த தனதந்த தனதந்த தனானா…
—BGM—
பெண் : என் மனசு என்னிடம் இல்லை…
ராத்திரியில் எத்தனை தொல்லை…
என் மனசு என்னிடம் இல்லை…
ராத்திரியில் எத்தனை தொல்லை…
பெண் : செண்பகமும் மல்லிகை மொட்டும்…
வந்து வந்து வாட்டுது என்னை…
செண்பகமும் மல்லிகை மொட்டும்…
வந்து வந்து வாட்டுது என்னை…
ஆண் : கனவுகள் போலே கண்ணில் நீயே வரும் நேரம்…
மனதினில் பாலும் இன்பத் தேனும் கலந்தோடும்…
பெண் : ஆடிப் பாடத்தான் வரும் ஆசைத் தேரும் நீ…
பெண் : மல்லிகையே மல்லிகையே தூதாகப் போ…
ஆண் : துள்ளி வரும் தென்றலையே நீ சேர்த்துப் போ…
பெண் : நோய் கொண்டு நான் சிறு நூலாகினேன்…
ஆண் : தேயாமலே பிறை போல் ஆகிறேன்…
ஆண் & பெண் : தாங்காது இனி தாங்காது…
ஆண் & பெண் : மல்லிகையே மல்லிகையே தூதாகப் போ…
துள்ளி வரும் தென்றலையே நீ சேர்த்துப் போ…
Notes : Malligaiye Malligaiye Song Lyrics in Tamil. This Song from Periya Veetu Pannakkaran (1990). Song Lyrics penned by Na. Kamarasan. மல்லிகையே மல்லிகையே பாடல் வரிகள்.