kaal-mulaitha-poove-song-lyrics-in-tamil

கால் முளைத்த பூவே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மதன் கார்க்கிஜாவேத் அலி, மகாலட்சுமி ஐயர் & நின்சி வின்சென்ட்ஹாரிஸ் ஜெயராஜ்மாற்றான்

Kaal Mulaitha Poove Song Lyrics in Tamil


BGM

ஆண் : கால் முளைத்த பூவே…
என்னோடு பேலே ஆட வா வா…
வோல்கா நதி போலே…
நில்லாமல் காதல் பாட வா வா…

ஆண் : கேமமில் பூவின் வாசம் அதை…
உன் இதழ்களில் கண்டேனே…
சோவியத் ஓவியக் கவிதைகளை…
உன் விழிகளின் விளிம்பினில் கண்டேன்…

ஆண் : அசையும் அசைவில் மனதை பிசைய…
இதய இடுக்கில் மழையை பொழிய…
உயிரை உரசி அனலை எழுப்ப…
எரியும் வெறியை தெறித்தாய்…

பெண் : வால் முளைத்த காற்றே…
என்னோடு பேலே ஆட வா வா…
வோல்கா நதி போலே…
நில்லாமல் காதல் பாட வா வா…

BGM

ஆண் : நிலவுகள் தலைகள் குனிந்ததே…
மலர்களின் மமதை அழிந்ததே…
கடவுளின் கடமை முடிந்ததே…
அழகி நீ பிறந்த நொடியிலே…

பெண் : தலைகள் குனிந்ததோ…
மமதை அழிந்ததோ…
கடமை முடிந்ததோ…
பிறந்த நொடியிலே…

ஆண் : ஹே பெண்ணே… ஹே பெண்ணே…
உன் வளைவுகளில்…
தொலைவதுபோலே உணருகிறேன்…
இடையினிலே திணறுகிறேன்…
கனவிதுதானா வினவுகிறேன்…

BGM

ஆண் : கால் முளைத்த பூவே…
என்னோடு பேலே ஆட வா வா…
வோல்கா நதி போலே…
நில்லாமல் காதல் பாட வா வா…

BGM

பெண் : இரவெலாம் நிலவு எரிகையில்…
திரிகளாய் விரல்கள் திரியுதே…
அருகிலே நெருங்கி வருகையில்…
இளகியே ஒழுக்கம் உருகுதே…

ஆண் : நிலவு எரிகையில்…
விரல்கள் திரியுதோ…
நெருங்கி வருகையில்…
ஒழுக்கம் உருகுதோ…

பெண் : எனை ஏனோ… எனை ஏனோ…
உருக்குகிறாய்…
நெருப்பினை நெஞ்சில் இறக்குகிறாய்…
இடைவெளியை சுருக்குகிறாய்…
இரக்கமே இன்றி இறுக்குகிறாய்…

BGM

ஆண் : கால் முளைத்த பூவே…
என்னோடு பேலே ஆட வா வா…

பெண் : வோல்கா நதி போலே…
நில்லாமல் காதல் பாட வா வா…

ஆண் : கேமமில் பூவின் வாசம் அதை…
உன் இதழ்களில் கண்டேனே…
சோவியத் ஓவியக் கவிதைகளை…
உன் விழிகளின் விளிம்பினில் கண்டேன்…

ஆண் : அசையும் அசைவில் மனதை பிசைய…
இதய இடுக்கில் மழையை பொழிய…
உயிரை உரசி அனலை எழுப்ப…
எரியும் வெறியை தெறித்தாய்…

ஆண் : அசையும் அசைவில் மனதை பிசைய…
இதய இடுக்கில் மழையை பொழிய…
உயிரை உரசி அனலை எழுப்ப…
எரியும் வெறியை தெறித்தாய்…


Notes : Kaal Mulaitha Poove Song Lyrics in Tamil. This Song from Maattrraan (2012). Song Lyrics penned by Madhan Karky. கால் முளைத்த பூவே பாடல் வரிகள்.