பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
தாமரை | ராமன் மகாதேவன் & மகாலட்சுமி ஐயர் | தேவன் ஏகாம்பரம் | பலே பாண்டியா (2010) |
Aaradha Kobam Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : ஆறாத கோபமில்லை…
என் அருகினிலே வா…
இனி நானாக பிரிவதில்லை…
என் வாழ்வினிலே வா…
பெண் : என் வார்த்தையை அன்பின்…
சிறையில்தான் அடைத்தேன்…
நீ தொட்டதும் அன்பே…
உடையும் ஆசையின் வெள்ளமே…
ஆண் : நாட்கள் போனதே காதல் நின்றதே…
பிரிவிலே உருகினேன்…
தினம் தினம் அணுகினேன்…
பெண் : இது ஆறாத கோபமில்லை…
என் அருகினிலே வா…
இனி நானாக பிரிவதில்லை…
என் வாழ்வினிலே வா…
—BGM—
பெண் : நேற்று வரையில்…
உன்னை நீங்கி இருந்தேனே…
நெஞ்சின் திரையில்…
உன்னை வைத்து ஏங்கினேனே…
ஆண் : தூரம் குறையும் என நம்பி நகர்ந்தேனே…
தோன்றி மறையும் ஒரு கானல் நீரிலே…
பருகிட சென்றேன் பிறகும் தாகத்தில் நின்றேன்…
பெண் : குளிர் நீருடன் வந்தேன்…
இதழால் நிரப்பிட நின்றேன்…
பெண் : ஆறாத கோபமில்லை…
என் அருகினிலே வா…
ஆண் : இனி நானாக பிரிவதில்லை…
என் வாழ்வினிலே வா…
—BGM—
ஆண் : பேசும்பொழுதே சில வாரத்தை தடுமாறும்…
தென்றல் நடுவே…
பெண் : தலை நீட்டி பேச பார்க்கும்…
பார்க்கும் பொழுதே…
இருகண்கள் கவிபாடும் நானும் அதிலே…
ஆண் : இடைவந்து போகுமே…
ஆண் & பெண் : அனுபவமில்லை…
அதனால் ஆயிரம் தொல்லை…
இந்த அன்பொரு தொல்லை…
எதிலும் அனுபமில்லை…
ஆண் : ஆறாத கோபமில்லை…
என் அருகினிலே வா…
பெண் : இனி நானாக பிரிவதில்லை…
என் வாழ்வினிலே வா…
ஆண் : என் வார்த்தையை அன்பின்…
சிறையில்தான் அடைத்தேன்…
பெண் : நீ தொட்டதும் அன்பே…
உடையும் ஆசையின் வெள்ளமே…
ஆண் : நாட்கள் போனதே காதல் நின்றதே…
பிரிவிலே உருகினேன்…
தினம் தினம் அணுகினேன்…
—BGM—
Notes : Aaradha Kobam Song Lyrics in Tamil. This Song from Bale Pandiya (2010). Song Lyrics penned by Thamarai. ஆறாத கோபம் பாடல் வரிகள்.