ஆறாத கோபம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைராமன் மகாதேவன் & மகாலட்சுமி ஐயர்தேவன் ஏகாம்பரம்பலே பாண்டியா (2010)

Aaradha Kobam Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஆறாத கோபமில்லை…
என் அருகினிலே வா…
இனி நானாக பிரிவதில்லை…
என் வாழ்வினிலே வா…

பெண் : என் வார்த்தையை அன்பின்…
சிறையில்தான் அடைத்தேன்…
நீ தொட்டதும் அன்பே…
உடையும் ஆசையின் வெள்ளமே…

ஆண் : நாட்கள் போனதே காதல் நின்றதே…
பிரிவிலே உருகினேன்…
தினம் தினம் அணுகினேன்…

பெண் : இது ஆறாத கோபமில்லை…
என் அருகினிலே வா…
இனி நானாக பிரிவதில்லை…
என் வாழ்வினிலே வா…

BGM

பெண் : நேற்று வரையில்…
உன்னை நீங்கி இருந்தேனே…
நெஞ்சின் திரையில்…
உன்னை வைத்து ஏங்கினேனே…

ஆண் : தூரம் குறையும் என நம்பி நகர்ந்தேனே…
தோன்றி மறையும் ஒரு கானல் நீரிலே…
பருகிட சென்றேன் பிறகும் தாகத்தில் நின்றேன்…

பெண் : குளிர் நீருடன் வந்தேன்…
இதழால் நிரப்பிட நின்றேன்…

பெண் : ஆறாத கோபமில்லை…
என் அருகினிலே வா…

ஆண் : இனி நானாக பிரிவதில்லை…
என் வாழ்வினிலே வா…

BGM

ஆண் : பேசும்பொழுதே சில வாரத்தை தடுமாறும்…
தென்றல் நடுவே…

பெண் : தலை நீட்டி பேச பார்க்கும்…
பார்க்கும் பொழுதே…
இருகண்கள் கவிபாடும் நானும் அதிலே…

ஆண் : இடைவந்து போகுமே…
ஆண் & பெண் : அனுபவமில்லை…
அதனால் ஆயிரம் தொல்லை…
இந்த அன்பொரு தொல்லை…
எதிலும் அனுபமில்லை…

ஆண் : ஆறாத கோபமில்லை…
என் அருகினிலே வா…

பெண் : இனி நானாக பிரிவதில்லை…
என் வாழ்வினிலே வா…

ஆண் : என் வார்த்தையை அன்பின்…
சிறையில்தான் அடைத்தேன்…

பெண் : நீ தொட்டதும் அன்பே…
உடையும் ஆசையின் வெள்ளமே…

ஆண் : நாட்கள் போனதே காதல் நின்றதே…
பிரிவிலே உருகினேன்…
தினம் தினம் அணுகினேன்…

BGM


Notes : Aaradha Kobam Song Lyrics in Tamil. This Song from Bale Pandiya (2010). Song Lyrics penned by Thamarai. ஆறாத கோபம் பாடல் வரிகள்.


Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Scroll to Top