innisai-paadivarum-song-lyrics

இன்னிசை பாடிவரும்

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துபி. உன்னிகிருஷ்ணன்எஸ். ஏ. ராஜ்குமார்துள்ளாத மனமும் துள்ளும்

Innisai Paadivarum Song Lyrics in Tamil


BGM

ஆண் : இன்னிசை பாடிவரும்…
இளம் காற்றுக்கு உருவமில்லை…
காற்றலை இல்லையென்றால்…
ஒரு பாட்டொலி கேட்பதில்லை…

ஆண் : ஒரு கானம் வருகையில்…
உள்ளம் கொள்ளை போகுதே…
ஆனால் காற்றின் முகவரி…
கண்கள்அறிவதில்லையே…

ஆண் : இந்த வாழ்க்கையே ஒரு தேடல்தான்…
அதை தேடித் தேடி தேடும் மனது தொலைகிறதே…

ஆண் : இன்னிசை பாடிவரும்…
இளம் காற்றுக்கு உருவமில்லை…
காற்றலை இல்லையென்றால்…
ஒரு பாட்டொலி கேட்பதில்லை…

BGM

ஆண் : கண் இல்லையென்றாலோ…
நிறம் பார்க்கமுடியாது…
நிறம் பார்க்கும் உன் கண்ணை…
நீ பார்க்கமுடியாது…

ஆண் : குயிலிசை போதுமே…
அட குயில் முகம் தேவையா…
உணா்வுகள் போதுமே…
அதன் உருவம் தேவையா…

ஆண் : கண்ணில் காட்சி தோன்றிவிட்டால்…
கற்பனை தீா்ந்துவிடும்…
கண்ணில் தோன்றா காட்சியில்தான்…
கற்பனை வளா்ந்துவிடும்…
அட பாடல் போல தேடல் கூட ஒரு சுகமே…

ஆண் : இன்னிசை பாடிவரும்…
இளம் காற்றுக்கு உருவமில்லை…
காற்றலை இல்லையென்றால்…
ஒரு பாட்டொலி கேட்பதில்லை…

BGM

ஆண் : உயிர் ஒன்று இல்லாமல்…
உடல் இங்கு நிலையாதே…
உயிர் என்ன பொருள் என்று…
அலைபாய்ந்து திரியாதே…

ஆண் : வாழ்க்கையின் வோ்களோ…
மிக ரகசியமானது…
ரகசியம் காண்பதே…
நம் அவசியமானது…

ஆண் : தேடல் உள்ள உயிர்களுக்கே…
தினமும் பசியிருக்கும்…
தேடல் என்பது உள்ளவரை…
வாழ்வில் ருசியிருக்கும்…
அட பாடல் போல தேடல் கூட ஒரு சுகமே…

ஆண் : இன்னிசை பாடிவரும்…
இளம் காற்றுக்கு உருவமில்லை…
காற்றலை இல்லையென்றால்…
ஒரு பாட்டொலி கேட்பதில்லை…

ஆண் : ஒரு கானம் வருகையில்…
உள்ளம் கொள்ளை போகுதே…
ஆனால் காற்றின் முகவரி…
கண்கள் அறிவதில்லையே…

ஆண் : இந்த வாழ்க்கையே ஒரு தேடல்தான்…
அதை தேடித் தேடி தேடும் மனது தொலைகிறதே…

ஆண் : இன்னிசை பாடிவரும்…
இளம் காற்றுக்கு உருவமில்லை…
காற்றலை இல்லையென்றால்…
ஒரு பாட்டொலி கேட்பதில்லை…

BGM


Notes : Innisai Paadivarum Song Lyrics in Tamil. This Song from Thullatha Manamum Thullum (1999). Song Lyrics penned by Vairamuthu. இன்னிசை பாடிவரும் பாடல் வரிகள்.