Ennai Saaithaalae Song Lyrics in Tamil

என்னை சாய்த்தாலே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைஹரிஹரன் & ஸ்ரேயா கோஷல்ஹாரிஸ் ஜெயராஜ்என்றென்றும் புன்னகை

Ennai Saaithaalae Song Lyrics in Tamil


BGM

ஆண் : என்னை சாய்த்தாலே…
உயிர் தேய்த்தாலே…
இனி வாழ்வேனோ இனிதாக…

ஆண் : தடுமாறாமல் தரை மோதாமல்…
இனி மீள்வேனோ முழுதாக…

ஆண் : இதழோரத்தில் நகை பூத்தாளே…
என் பாவங்கள் தீர்த்தேன்…
மழை ஈரத்தில் நனையாமல் நான்…
வெளியேறதான் பார்த்தேன்…

ஆண் : நடக்கிற வரை நகர்கிற தரை…
அதன் மேல் தவிக்கிறேன்…
விழிகளில் பிழை விழுகிற திரை…
அதனால் திகைக்கிறேன்…

BGM

ஆண் : நேற்று போலே வானம்…
அட இன்றும் கூட நீலம்…
என் நாட்கள்தான் நீளும்…

பெண் : தள்ளிப் போக எண்ணும்…
கால் பக்கம் வந்து பின்னும்…
கேட்காதே யார் சொல்லும்…

ஆண் : பறவை நான் சிறகு நீ…
நான் காற்றை வெல்ல ஆசைக் கொண்டேன்…

பெண் : பயணம் நான் வழிகள் நீ…
நான் எல்லைத் தாண்டிச் செல்லக் கண்டேன்…

ஆண் : என்னை சாய்த்தாலே…
உயிர் தேய்த்தாலே…
இனி வாழ்வேனோ இனிதாக…

ஆண் : தடுமாறாமல் தரை மோதாமல்…
இனி மீள்வேனோ முழுதாக…

BGM

ஆண் : மாலை வந்தால் போதும்…
ஒரு நூற்றி பற்றில் தேகம்…
செங்காந்தள் போல் காயும்…

பெண் : காற்று வந்து மோதும்…
உன் கைகள் என்றே தோன்றும்…
பின் ஏமாற்றம் தீண்டும்…

ஆண் : தவிப்பதை மறைக்கிறேன்…
என் பொய்யை பூட்டி வைத்துக் கொண்டேன்…

பெண் : கனவிலே விழிக்கிறேன்…
என் கையில் சாவி ஒன்றைக் கண்டேன்…

ஆண் : என்னை சாய்த்தாலே…
ராரா ராரா ரா…
இனி வாழ்வேனோ இனிதாக…

பெண் : தடுமாறாமல் தரை மோதாமல்…
இனி மீள்வேனோ முழுதாக…

ஆண் : இதழோரத்தில் நகை பூத்தாளே…
என் பாவங்கள் தீர்த்தேன்…

பெண் : மழை ஈரத்தில் நனையாமல் நான்…
வெளியேறதான் பார்த்தாள்…

ஆண் : நடக்கிற வரை நகர்கிற தரை…
அதன் மேல் தவிக்கிறேன்…

பெண் : விழிகளில் பிழை விழுகிற திரை…
அதனால் திகைக்கிறேன்…

BGM


Notes : Ennai Saaithaalae Song Lyrics in Tamil. This Song from Endrendrum Punnagai (2013). Song Lyrics penned by Thamarai. என்னை சாய்த்தாலே பாடல் வரிகள்.