ennai-aalum-pennilave-song-lyrics

என்னை ஆளும் பெண்ணிலாவே

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
உமா தேவிபிரதீப் குமார் & பிரியங்கா என் கேகோபி சுந்தர்வேலன்

Ennai Aalum Pennilave Song Lyrics in Tamil


BGM

ஆண் : என்னை ஆளும் பெண்ணிலாவே…
உனது வானம் நானே…
உன்னைத் தாண்டி எந்தன் வாழ்வு…
ஒன்றும் இல்லை வா வா…

ஆண் : இரவை நனைக்கும் பனியே…
பகலைத் திறக்கும் கதிரே…
விழியைத் தாண்டும் அழுகை போதும்…
நமது பாலை வசந்தம் ஆகும்…
வாழ்வே வா வா…

ஆண் : அன்னை தேடும் பிள்ளை போல நானும் உன்னை தேட…
அன்பின் காட்டில் காதல் ஊற்றில் நாளும் மூழ்கி போக…
உணர்வில் கலந்தாய் உயிரே…
உனை நான் பிரியேன் இனியே…

BGM

ஆண் : அலை கடல் சேர்க்கும் குளிர் மணல் போல…
உன்னை ஏந்திக் கொள்ள ஏங்கும் காதல்…
உனக்கென நானும் எனக்கென நீயும்…
பிறந்த பிறகு பிரிதல் என்பதேது…

ஆண் : இரவை நனைக்கும் பனியே…
பகலைத் திறக்கும் கதிரே…
விழியின் ஈரம் தொலைந்து போகும்…
நமது பாலை வசந்தம் ஆகும்…
வாழ்வே வா வா…

BGM

பெண் : அன்னை தேடும் பிள்ளை போல நானும் உன்னை தேடி…
உன்னைத் தாண்டி எந்தன் வாழ்வு ஒன்றும் இல்லை வாழா…
உணர்வில் கலந்தாய் உயிரே…
உனை நான் பிரியேன் இனியே…

ஆண் : விழியைத் தாண்டும் அழுகை போதும்…
நமது பாலை வசந்தம் ஆகும்…
வாழ்வே வா வா…


Notes : Ennai Aalum Pennilave Song Lyrics in Tamil. This Song from Velan (2021). Song Lyrics penned by Yugabharathi. என்னை ஆளும் பெண்ணிலாவே பாடல் வரிகள்.