எனக்கென ஏற்கனவே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துபி. உன்னிகிருஷ்ணன் & ஹரிணிபரத்வாஜ்பார்த்தேன் ரசித்தேன்

Enakena Yerkanave Song Lyrics in Tamil


BGM

ஆண் : எனக்கென ஏற்கனவே பிறந்தவள் இவளோ…
இதயத்தை கயிறு கட்டி இழுத்தவள் இவளோ…
ஒளி சிந்தும் இரு கண்கள் உயிா் வாங்கும் சிறு இதழ்கள்…
என்னுள்ளே என்னுள்ளே ஏதேதோ செய்கிறதே… ஆஆஆ…

பெண் : என்னுள்ளே என்னுள்ளே ஏதேதோ செய்கிறதே…
அதை என்னென்று அறியேனடி…
என்னுள்ளே என்னுள்ளே ஏதேதோ செய்கிறதே…
அதை என்னென்று அறியேனடி…

பெண் : ஓரப்பாா்வை பாா்க்கும்போது…
உயிாில் பாதி இல்லை…
மீதிப் பாா்வை பாா்க்கும் துணிவு…
பேதை நெஞ்சில் இல்லை…
எனது உயிரை குடிக்கும் உாிமை உனக்கே உனக்கே…

BGM

ஆண் : உயிரே உயிரே உடம்பில் சிறந்தது…
எதுவென்று தவித்திருந்தேன்…
அதை இன்றுதான் கண்டு பிடித்தேன்…

ஆண் : கண்ணே உன்னை காட்டியதால்…
என் கண்ணே சிறந்ததடி…
உன் கண்களைக் கண்டதும் இன்னொரு கிரகம்…
கண்முன் பிறந்ததடி…

BGM

பெண் : காதல் என்ற ஒற்றை நூல்தான்…
கனவுகள் தொடுக்கின்றது…

BGM

பெண் : காதல் என்ற ஒற்றை நூல்தான்…
கனவுகள் தொடுக்கின்றது…
அது காலத்தை தட்டுகின்றது…

பெண் : என் மனம் என்னும் கோப்பையில் இன்று…
உன் உயிா் நிறைகின்றது…
என் மனம் என்னும் கோப்பையில் இன்று…
உன் உயிா் நிறைகின்றது…

ஆண் : எனக்கென ஏற்கனவே பிறந்தவள் இவளோ…
இதயத்தை கயிறு கட்டி இழுத்தவள் இவளோ…

பெண் : என்னுள்ளே என்னுள்ளே ஏதேதோ செய்கிறதே…
அதை என்னென்று அறியேனடி…

BGM

ஆண் : மாா்புக்கு திரையிட்டு மறைக்கும் பெண்ணே…
மனசையும் மறைக்காதே…
என் வயதையும் வதைக்காதே…

BGM

ஆண் : புல்வெளி கூட பனித்துளி என்னும்…
வாா்த்தை பேசுமடி…
என் புன்னகை ராணி ஒரு மொழி சொன்னால்…
காதழும் வாழுமடி…

பெண் : வாா்த்தை என்னை கைவிடும் போது…
மௌனம் பேசுகிறேன்…
என் கண்ணீா் பேசுகிறேன்…

பெண் : எல்லா மொழிக்கும் கண்ணீா் புாியும்…
உனக்கேன் புாியவில்லை…
எல்லா மொழிக்கும் கண்ணீா் புாியும்…
உனக்கேன் புாியவில்லை…

ஆண் : எனக்கென ஏற்கனவே பிறந்தவள் இவளோ…
இதயத்தை கயிறு கட்டி இழுத்தவள் இவளோ…
ஒளி சிந்தும் இரு கண்கள் உயிா் வாங்கும் சிறு இதழ்கள்…
என்னுள்ளே என்னுள்ளே ஏதேதோ செய்கிறதே… ஆஆஆ…

பெண் : என்னுள்ளே என்னுள்ளே ஏதேதோ செய்கிறதே…
அதை என்னென்று அறியேனடி…
என்னுள்ளே என்னுள்ளே ஏதேதோ செய்கிறதே…
அதை என்னென்று அறியேனடி…

பெண் : ஓரப்பாா்வை பாா்க்கும்போது…
உயிாில் பாதி இல்லை…
மீதிப் பாா்வை பாா்க்கும் துணிவு…
பேதை நெஞ்சில் இல்லை…
எனது உயிரை குடிக்கும் உாிமை உனக்கே உனக்கே…


Notes : Enakena Yerkanave Song Lyrics in Tamil. This Song from Parthen Rasithen (2000). Song Lyrics penned by Vairamuthu. எனக்கென ஏற்கனவே பாடல் வரிகள்.