Category Archives: ஜெய் பீம்

Manniley Eeramundu Song Lyrics in Tamil

மண்ணிலே ஈரமுண்டு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிவைக்கம் விஜயலட்சுமிசீன் ரோல்டன்ஜெய் பீம்

Manniley Eeramundu Song Lyrics in Tamil


BGM

பெண் : மண்ணிலே ஈரமுண்டு…
முள்காட்டில் பூவும் உண்டு…
நம்பினால் நாளை உண்டு…
கை தாங்க ஜீவன் உண்டு…

பெண் : எங்கே போனாலும் பொன்வானம் கண்ணோடு…
எல்லை இங்கில்லை வா காலம் நம்மோடு…

பெண் : மண்ணிலே ஈரமுண்டு…
முள்காட்டில் பூவும் உண்டு…

BGM

பெண் : உள்ளுறுதி காண்பதுதான் பூமியிலே உன் உயரம்…
எண்ணம் செயல் ஆகிவிட்டால் எல்லாமே தேடி வரும்…
உண்மை வழி நீ நடந்தே போவது தான் வாழ்வின் அறம்…
அன்பின் கொடி ஏற்றி வைக்க துணை சேரும் கோடி தரம்…

பெண் : தேடல் இல்லாத உயிர் உண்டோ சொல்லம்மா…
எல்லாம் உன்னுள்ளே அதை தேடு கண்ணம்மா…

BGM

பெண் : மண்ணிலே ஈரமுண்டு…
முள்காட்டில் பூவும் உண்டு…
நம்பினால் நாளை உண்டு…
கை தாங்க ஜீவன் உண்டு…

பெண் : எங்கே போனாலும் பொன்வானம் கண்ணோடு…
எல்லை இங்கில்லை வா காலம் நம்மோடு…

பெண் : மண்ணிலே ஈரம் உண்டு…
முள்காட்டில் பூவும் உண்டு…
நம்பினால் நாளை உண்டு…
கை தாங்க ஜீவன் உண்டு…


Notes : Manniley Eeramundu Song Lyrics in Tamil. This Song from Jai Bhim (2021). Song Lyrics penned by Yugabharathi. மண்ணிலே ஈரமுண்டு பாடல் வரிகள்.


வேட்டைக்கார கூட்டம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிஅந்தோனிதாசன் & நிரஞ்சனா ரமணன்சீன் ரோல்டன்ஜெய் பீம்

Vettakaara Kootam Song Lyrics in Tamil


BGM

ஆண் : வேட்டைக்கார கூட்டம் நாங்க…
வில்லியரும் நாங்கதாங்க…
ஓட்ட கூரையில் வானத்தை பாக்குற…
ராஜா தேசிங்கு நாங்க…

ஆண் : அந்த காட்டு மேட்ட காப்போம் நாங்க…
போட்டி போட்டு உழைப்போம்தாங்க…
பொட்ட காட்டிலும் ஊத்தா சுரக்கிற…
வித்தைகாரங்க நாங்க…

ஆண் : வாழ பொறந்த கூட்டம் நாங்க…
வெகுளியான ஜனங்கதாங்க…
கூட குறைய இருந்தா கூட…
பங்கு போடுவோம் நாங்க…

ஆண் : அந்த வேட்டைக்காரன்…
அந்த வில்லியரும்…

ஆண் : ஹே… வேட்டைக்கார கூட்டம் நாங்க…
வில்லியரும் நாங்கதாங்க…
ஓட்ட கூரையில் வானத்தை பாக்குற…
ராஜா தேசிங்கு நாங்க…

ஆண் : அந்த காட்டு மேட்ட காப்போம் நாங்க…
போட்டி போட்டு உழைப்போம் தாங்க…
பொட்ட காட்டிலும் ஊத்தா சுரக்கிற…
வித்தைகாரங்க நாங்க… ஆஹா…

BGM

ஆண் : ஆளான உன் பேச்சிலே…
ஆகாசத்தை காணோம்…
பூ போல உன் கை தொட…
பூலோகத்தை காணோம்…

பெண் : என் மாருல சாஞ்சிட…
உன் தூக்கத்தை காணோம்…
சூட உன் மூச்சில் என் கூச்சத்தை காணோம்…

ஆண் : பொட்ட கோழி நீ மேஞ்சிட…
மொத்த காட்டையும் காணோம்…

பெண் : கட்டி போட்டு நீ தாங்கிட…
ஜென்மம் ஏழையும் காணோம்…

ஆண் & பெண் : காணாததை கண்டுவிட நிக்காம…
நீ நித்தம் போடு கூத்து…

BGM

ஆண் : ஹே… வேட்டைக்கார கூட்டம் நாங்க…
வில்லியரும் நாங்கதாங்க…
ஓட்ட கூரையில் வானத்தை பாக்குற…
ராஜா தேசிங்கு நாங்க…

ஆண் : அந்த காட்டு மேட்ட காப்போம் நாங்க…
போட்டி போட்டு உழைப்போம் தாங்க…
பொட்ட காட்டிலும் ஊத்தா சுரக்கிற…
வித்தைகாரங்க நாங்க…

ஆண் : வாழ பொறந்த கூட்டம் நாங்க…
வெகுளியான ஜனங்க தாங்க…
கூட குறைய இருந்தா கூட…
பங்கு போடுவோம் நாங்க…

குழு : வேட்டைக்காரன்…
அந்த வில்லியரும்…

குழு : வேட்டைக்காரன் கூட்டம்…
அந்த வில்லியரும் கூட்டம்…
வேட்டைக்காரன் கூட்டம்…
அந்த வில்லியரும் கூட்டம்…
அந்த வேட்டைக்காரன் கூட்டம்…
அந்த வில்லியரும் கூட்டம்…


Notes : Vettakaara Kootam Song Lyrics in Tamil. This Song from Jai Bhim (2021). Song Lyrics penned by Yugabharathi. வேட்டைக்கார கூட்டம் பாடல் வரிகள்.


செண்டு மல்லியா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிஅனந்து & கல்யாணி நாயர்சீன் ரோல்டன்ஜெய் பீம்

Sendumalli Song Lyrics in Tamil


BGM

பெண் : செண்டு மல்லியா மனசுல மணக்குற நீ…
அடிகரும்பா உசுருல இனிக்குற நீ…
செண்டு மல்லியா மனசுல மணக்குற நீ…
அடிகரும்பா உசுருல இனிக்குற நீ…

பெண் : தெருவுல நூறு பூ கட…
எனக்கு நீ வாசம் சேர்த்திட…
போதும் தங்கம்…

பெண் : செண்டு மல்லியா மனசுல மனக்குற நீ…
குழு : மனசுல மணக்குற நீ…

பெண் : அடிகரும்பா உசுருல இனிக்குற நீ…
குழு : உசுருல இனிக்குற நீ…

ஆண் : கனவுல நானும் கண்ட மயில் தோகை…
நிழலென சேர்ந்தே வந்த துணையாக…
கருவேலங்காட்டு ஓரம் முசலாக நீயும் நானும்…
விளையாடவே பொறந்தோமடி…
எச காத்துமே சுகம்தானடி…

பெண் : செண்டு மல்லியா மனசுல மனக்குற நீ…
குழு : மனசுல மணக்குற நீ…

பெண் : அடிகரும்பா உசுருல இனிக்குற நீ…
குழு : உசுருல இனிக்குற நீ…

BGM

பெண் : இருளடஞ்ச வீட்டிலும் நிலவோளியா…
பொழங்கிட நீயும் சேரவே கவலை இல்லை…

ஆண் : குடம் குடமா வியர்வையில் குளிக்கையிலும்…
துடைத்திட நீளும் கைகளால் அசதியில்ல…

ஆண் : நெஞ்ச நான் கிழிச்சா அங்க நீ இருப்ப…
கந்தல் சேலையிலும் தங்கமா ஜொலிப்ப…
அட உனை விட ஒரு புனிதம் ஏது உலகிலே…
அட கடவுளின் நிறம் தெரிந்திடாதோ கனவிலே…

ஆண் & பெண் : ஒரு காம்பிலே இரு தாமர…
கொண்ட பாசமோ பசும்பால் நுர…

BGM

பெண்: செண்டு மல்லியா மனசுல மணக்குற நீ…
அடிகரும்பா உசுருல இனிக்குற நீ…
தெருவுல நூறு பூ கட…
எனக்கு நீ வாசம் சேர்த்திட…
போதும் தங்கம்…

பெண் : செண்டு மல்லியா மனசுல மணக்குற நீ…
குழு : மனசுல மணக்குற நீ…

ஆண் : கனவுல காணும் கண்ட மயில் தொகை…
நிழலென சேர்ந்தே வந்த துணையாக…
கருவேலங்காட்டு ஓரம் முசலாக நீயும் நானும்…
விளையாடவே பொறந்தோமடி…
எச காத்துமே சுகம்தானடி…

ஆண் : செண்டு மல்லியே… செண்டு மல்லியே…
மனசுல நீ… மணக்குற நீ…
செண்டு மல்லியே… செண்டு மல்லியே…


Notes : Sendumalli Song Lyrics in Tamil. This Song from Jai Bhim (2021). Song Lyrics penned by Yugabharathi. செண்டு மல்லியா பாடல் வரிகள்.


தல கோதும் இளங்காத்து

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
ராஜுமுருகன்பிரதீப் குமார்சீன் ரோல்டன்ஜெய் பீம்

Thala Kodhum Song Lyrics in Tamil


ஆண் : தல கோதும் இளங்காத்து சேதி கொண்டு வரும்…
மரமாகும் விதை எல்லாம் வாழ சொல்லித்தரும்…

BGM

ஆண் : கலங்காத கலங்காத நீயும் நெஞ்சுக்குள்ள…
இருளாத விடியாத நாளும் இங்கு இல்ல…

BGM

ஆண் : தல கோதும் இளங்காத்து சேதி கொண்டு வரும்…
மரமாகும் விதை எல்லாம் வாழ சொல்லித்தரும்…
கலங்காத கலங்காத நீயும் நெஞ்சுக்குள்ள…
இருளாத விடியாத நாளும் இங்கு இல்ல…

ஆண் : ரொம்ப பக்கம்தான் பக்கம்தான்…

BGM

ஆண் : நிழல் நிக்குதே நிக்குதே…

ஆண் : ரொம்ப பக்கம்தான் பக்கம்தான்…
நிழல் நிக்குதே நிக்குதே…
உன்ன நம்பி நீ முன்ன போகையில…
பாத உண்டாகும்…

ஆண் : நிக்காம முன்னேறு…
கண்ணோரம் ஏன் கண்ணீரு…
நிக்காம முன்னேறு…
அன்பால நீ கைசேரு… கைசேரு…

BGM

ஆண் : நீல வண்ண கூரை இல்லாத…
நிலம் இங்கு ஏது…
காலம் என்னும் தோழன் உன்னோடு…
தடைகளை மீறு…

ஆண் : மாறுமோ தானா நிலை எல்லாமே தன்னாலே…
போராடு நீயே அறம் உண்டாகும் மண்மேலே…

ஆண் : மீதி இருள் நீ கடந்தால்…
காலை ஒளி வாசல் வரும்…
தோளில் நம்மை ஏந்தி கொள்ளும்…
நமக்கான நாள் வரும்…

ஆண் : தல கோதும் இளங்காத்து சேதி கொண்டு வரும்…
மரமாகும் விதை எல்லாம் வாழ சொல்லித்தரும்…
கலங்காத கலங்காத நீயும் நெஞ்சுக்குள்ள…
இருளாத விடியாத நாளும் இங்கு இல்ல…

ஆண் : ரொம்ப பக்கம்தான் பக்கம்தான்…
நிழல் நிக்குதே நிக்குதே…
உன்ன நம்பி நீ முன்ன போகையில…
பாத உண்டாகும்…

ஆண் : நிக்காம முன்னேறு…
கண்ணோரம் ஏன் கண்ணீரு…
நிக்காம முன்னேறு…
அன்பால நீ கைசேரு…

ஆண் : நிக்காம முன்னேறு…
கண்ணோரம் ஏன் கண்ணீரு…
நிக்காம முன்னேறு…
அன்பால நீ கைசேரு…


Notes : Thala Kodhum Song Lyrics in Tamil. This Song from Jai Bhim (2021). Song Lyrics penned by Rajumurugan. தல கோதும் இளங்காத்து பாடல் வரிகள்.


பொல்லாத உலகத்திலே

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிசீன் ரோல்டன்சீன் ரோல்டன்ஜெய் பீம்

Polladha Ulagathiley Song Lyrics in Tamil


BGM

இந்த பொல்லாத உலகத்திலே…
ஏன் என்னை படைத்தாய் இறைவா…
வலி தாங்காமல் கதறும் கதறல்…
உனக்கே கேட்கவில்லையா…

எட்டு திக்கோடும் போய் இருப்பவன் நீ…
எங்கு போய் தொலைந்தாய் இறைவா…
கரும் கல்லான உன்னை நான்…
பொழுதும் தொழுதேன் போதவில்லையா…

வாடி வதங்கும் ஏழையை…
நீயும் வதைத்தால் ஆகுமா…
கோடி விளக்கை ஏற்றி நீ…
ஊதியணைத்தால் நியாயமா…

கண்ணீரே வழித்துணையா…
நின்றேனே இது விதியா…
எல்லாமே தெரிந்தவன் நீ…
காப்பாற்ற மனம் இல்லையா…

BGM

வேதனை மேலும் வேதனை…
தருவதும் உன் வேலை ஆனதோ…
உறவின்றி என் உயிர் நோவதோ…

கேட்டு நான் வாங்கவில்லையே…
கொடுத்த நீ வாங்கி போவதோ…
துணை இன்றி நான் தனியாவதோ…

காணாத கனவை நீ காட்ட…
வாழ்வு வந்ததே…
கை சேர்ந்த நிலாவை பாராமல்…
வானம் சோர்ந்ததே…

வரம் தராமல் நீ போனால் என்ன…
சோராமல் போர் இடுவேன்…
என்ன ஆனாலுமே ஓயாமலே…
என் பாதை நான் தொடர்வேனே…

கண்ணீரே வழித்துணையா…
நின்றேனே இது விதியா…
எல்லாமே தெரிந்தவன் நீ…
காப்பாற்ற மனம் இல்லையா…

BGM

தேடியே கால்கள் ஓய்ந்ததே…
திசைகளும் வீழ்ந்து போனதே…
இரு கண்ணிலும் புகை சூழ்ந்ததே…

வேர்வரை தீயும் பாய்ந்ததே…
வெறுமையில் நாட்கள் நீளுதே…
அதிகாரமோ விளையாடுதே…

ஊர் ஓரம் ஆனதை மேல் ஏற…
ஏணி இல்லையே…
வீழ்ந்தாலும் விடாமல் தோள்தாங்க…
நாதி இல்லையே…

ஒரு நூலே இல்லா காத்தாடி போல்…
தள்ளாடுதே இதயம்…
இனி என்னாகுமோ ஏதாகுமோ…
பதில் சொல்லாமல் போகாது காதல்…

இந்த பொல்லாத உலகத்திலே…
ஏன் என்னை படைத்தாய் இறைவா…
வலி தாங்காமல் கதறும் கதறல்…
உனக்கே கேட்கவில்லையா…

எட்டு திக்கோடும் போய் இருப்பவன் நீ…
எங்கு போய் தொலைந்தாய் இறைவா…
கரும் கல்லான உன்னை நான்…
பொழுதும் தொழுதேன் போதவில்லையா…

வாடி வதங்கும் ஏழையை…
நீயும் வதைத்தால் ஆகுமா…
கோடி விளக்கை ஏற்றி நீ…
ஊதியணைத்தால் நியாயமா…

BGM


Notes : Polladha Ulagathiley Song Lyrics in Tamil. This Song from Jai Bhim (2021). Song Lyrics penned by Yugabharathi. பொல்லாத உலகத்திலே பாடல் வரிகள்.