ஆண் : அழைகட்டுமா தாயே அழைகட்டுமா… அந்த அருகம்புல்லு மாலைகாரி அழைகட்டுமா… அழைகட்டுமா தாயே அழைகட்டுமா நம்ம வெயிலு வந்த மாரியம்மன அழைக்கட்டுமா… ஓடியா ஆத்தா…
—BGM—
ஆண் : வன்னி மரம்பிழந்து… என் ஆத்தாளுக்கு வன்னி ஒன்னு மரம்பிழந்து… என் தாய கொண்டு செல்ல… வாகான பெட்டி செஞ்சான்… அந்த வனபெட்டிக்குள்ள… என் அஞ்சனமையில் காரியே… அங்க அடங்காத கோவக்காரி…
ஆண் : எங்க சோழவந்தான் மாரியம்மன… எப்படி அடசான் தெரியுமா…
ஆண் : அங்க மச்சனம்மா பூசிகாரி அழைக்கட்டுமா… அந்த மரிகொழுந்து ஆட்டக்காரி அழைக்கட்டுமா… அங்க செப்பு நல்ல சிலை அழகி அழைக்கட்டுமா… அந்த சிங்கார உடை அழகி அழைக்கட்டுமா… ஓடியா ஆத்தா…
—BGM—
ஆண் : நாட்டுல பஞ்சம் பசின்னு ஏதும் இல்லாம… பட்டினியா கெடந்திருக்கும் வேலையில… இந்த மக்கள் எல்லாம் கூடி நிற்கும் போது… என்ன செய்வோம் என்று சொல்லி… அன்று யோசித்து பார்க்கும்போது… அந்த அனந்த மல மாய கண்ணன்… அந்த வர்ண பகவான அழைச்சி… டோய் அடிச்சு பெய்த மழையின்னு சொல்றான்…
ஆண் : அங்க அடிச்சதோர் புயல் மழையாம்… என் ஆத்தாள் பெட்டி மேல் கிளம்ப… அந்த பால் ஆத்து தண்ணியில… அந்த தேன் ஆத்து தண்ணியில… நம்ம சோழவந்தான் ஆத்துகுள்ள… உன் பெட்டியுமே ஒதுங்குதம்மா… என்ன இது பெட்டி என்று… ஏறிட்டு பார்க்கும் போது… என் செல்ல மக மாரியம்மா பெட்டியம்மா…
ஆண் : பெட்டியில வந்தவளே அழைக்கட்டுமா… அந்த பேரும் புகழ் பெற்றவளே அழைக்கட்டுமா… பெட்டியில வந்தவளே அழைக்கட்டுமா… அந்த பேரும் புகழ் பெற்றவளே அழைக்கட்டுமா…
ஆண் : பெட்டி வந்துருச்சு அப்பா… என் மக்கள் எல்லாம் கூடி நின்னுருச்சு அப்பா… என்ன இது பெட்டின்னு சொல்லி… பாக்க பயமா இருக்குன்னு சொல்லி… யோசிச்சு பார்க்கும்போது… ஆஹா பெட்டியில தங்கம் இருக்குமோ… இல்ல வைரம் இருக்குமோ… இல்ல ஏதோ இருக்கும்னு சொல்லி… யோசித்து பார்க்கும் போது… நம்ம தாய் பெட்டிடா… நம்ம சோழவந்தான் காத்த… மாரி பெட்டிடான்னு சொல்லி…
ஆண் : எடுத்து நம்ம மக்கள் எல்லாம்… சாதிசனம் எல்லாம் கூடி வெச்சு பார்க்கும் போது… வருஷ வருஷம் கெளரிக்கு… ஆத்தாளுக்கு கொழுவாக அமர்ந்திருக்கும் வெளியில… இந்த மக்களுக்கெல்லாம் எப்படி காட்சி தர தெரியுமா…
ஆண் : அவளுக்கு 21 தெய்வங்களும் ஹேய்… அங்க 61 பந்திகளும்… அத்தனைக்கும் காவக்காரன்… எங்க 18ஆம் படி கருப்பன்… எப்படி காவகாக்குறான் தெரியுமா…
ஆண் : அங்க பாக்க பயமா இருக்குது கருப்ப சாமி… பக்கம் வந்தா புல்லரிக்குது… அங்க பாக்க பயமா இருக்குது கருப்ப சாமி… பக்கம் வந்தா புல்லரிக்குது…
—BGM—
ஆண் : வெள்ள நல்ல குதிரையில வீச்சருவா கொண்டுகிட்டு… வெள்ள நல்ல குதிரையில வீச்சருவா கொண்டுகிட்டு… வெள்ள நல்ல குதிரையில வீச்சருவா கொண்டுகிட்டு… வெளையாடி ஆடி வாரான்… வெளையாடி ஆடி வாரான்… கோட்ட கருப்ப சாமி… பாக்க பாக்க பாக்க பாக்க பயமா இருக்குது… கருப்ப சாமி பக்கம் வந்து புல்லரிக்குது…
ஆண் : ஓடி வா கருப்பா…
—BGM—
Notes : Azhaikkatuma Song Lyrics in Tamil. This Song from Kanne Kalaimaane (2019). Song Lyrics penned by Mathichiyam Bala. அழைகட்டுமா பாடல் வரிகள்.
ஆண் : வா வெள்ளை ராசத்தியே… மேகம் இறங்கி வந்தால்… மண்ணில் பசை இருக்கும்… சொந்தம் இறங்கி வந்தால்… வாழ்வில் ருசி இருக்கும்…
ஆண் : நேசம் கொண்ட நெஞ்சம் நிலை பாடு மாறாதடி… வானத்தின் உயரம் கூடுமா குறையுமா…
ஆண் : மேகம் இறங்கி வந்தால்… மண்ணில் பசை இருக்கும்… ம்ம்ம்…
—BGM—
ஆண் : அன்பின் கண்ணில் குற்றம் இல்லை… குற்றம் பார்த்தால் அங்கே அன்பில்லை… பார்க்கும் எதுவும் சிறிது இல்லை… பனித்துளி கூட எறும்பின் கடல்தானே… அன்பில் சிறிது பெரிது கிடையாதே… ஆற்றில் சகல துளியும் சமமே…
—BGM—
ஆண் : வேதம் சொல்ல ஒருவர் போதும்… பாசம் சொல்ல பலபேர் வேண்டாமா… எங்கோ பிறந்தோம் இங்கே சேர்ந்தோம்… நிறங்கள் கூடி ஓவியம் ஆவோமா… பச்சை கிளியின் சிறகு நரைக்காதே… அன்பில துடிக்கும் இதயம் உறுமும்…
ஆண் : மேகம் இறங்கி வந்தால்… மண்ணில் பசி இருக்கும்… சொந்தம் இறங்கி வந்தால்… வாழ்வில் ருசி இருக்கும்…
ஆண் : நேசம் கொண்ட நெஞ்சம் நிலை பாடு மாறாதடி… வானத்தின் உயரம் கூடுமா குறையுமா…
Notes : Vaa Vellai Raasathi Song Lyrics in Tamil. This Song from Kanne Kalaimaane (2019). Song Lyrics penned by Vairamuthu. வா வெள்ளை ராசத்தியே பாடல் வரிகள்.