பாடலாசிரியர் | பாடகர்கள் | இசையமைப்பாளர் | திரைப்படம் |
நா. முத்துக்குமார் | ஜி. வி. பிரகாஷ் குமார், சைந்தவி & சத்யபிரகாஷ் | ஜி. வி. பிரகாஷ் குமார் | தாண்டவம் |
Uyirin Uyire Song Lyrics in Tamil
—BGM—
பெண் : உயிாின் உயிரே உனது விழியில்…
என் முகம் நான் காண வேண்டும்…
உறங்கும்போதும் உறங்கிடாமல்…
கனவிலே நீ தோன்ற வேண்டும்…
பெண் : காதலாகி காற்றிலாடும்…
ஊஞ்சலாய் நான் ஆகிறேன்…
காலம் தாண்டி வாழ வேண்டும்…
வேற என்ன கேட்கிறேன்…
—BGM—
பெண் : உயிாின் உயிரே உனது விழியில்…
என் முகம் நான் காண வேண்டும்…
உறங்கும்போதும் உறங்கிடாமல்…
கனவிலே நீ தோன்ற வேண்டும்…
—BGM—
பெண் : சாயங்காலம் சாயும் நேரத்தில்…
தோழி போல மாறுவேன்…
சேர்ந்து நீயும் தூங்கும் நேரத்தில்…
தாயை போல தாங்குவேன்…
பெண் : வேறு பூமி வேறு வானம்…
தேடியே நாம் போகலாம்…
சேர்த்து வைத்த ஆசையாவும்…
சேர்ந்து நாமங்கு பேசலாம்…
பெண் : அகலாமலே அணுகாமலே…
இந்த நேசத்தை யார் நெய்தது…
அறியாமலே புரியாமலே…
இரு நெஞ்சுக்குள் மழை தூவுது…
—BGM—
பெண் : உயிரின் உயிரே உனது விழியில்…
என் முகம் நான் காண வேண்டும்…
உறங்கும்போதும் உறங்கிடாமல்…
கனவிலே நீ தோன்ற வேண்டும்…
—BGM—
பெண் : தண்டவாளம் தள்ளி இருந்தது…
தூரம் சென்று சேரத்தான்…
மேற்கு வானில் நிலவு எழுவது…
என்னுள் உன்னை தேடத்தான்…
பெண் : ஐந்து வயது பிள்ளை போலே…
உன்னை நானும் நினைக்கவா…
அங்கும் இங்கும் கன்னம் எங்கும்…
செல்ல முத்தம் பதிக்கவா…
பெண் : நிகழ் காலமும் எதிா் காலமும்…
இந்த அன்பெனும் வரம் போதுமே…
இறந்தாலுமே இறக்காமலே…
இந்த ஞாபகம் என்றும் வாழுமே…
—BGM—
பெண் : உயிாின் உயிரே உனது விழியில்…
என் முகம் நான் காண வேண்டும்…
உறங்கும்போதும் உறங்கிடாமல்…
கனவிலே நீ தோன்ற வேண்டும்…
பெண் : காதலாகி காற்றிலாடும்…
ஊஞ்சலாய் நான் ஆகிறேன்…
காலம் தாண்டி வாழ வேண்டும்…
வேற என்ன கேட்கிறேன்…
—BGM—
Notes : Uyirin Uyire Song Lyrics in Tamil. This Song from Thaandavam (2012). Song Lyrics penned by Na. Muthukumar. உயிாின் உயிரே பாடல் வரிகள்.