Category Archives: ஜோதா அக்பர்

வாஜா எங்கள் வாஜா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மஷூக் ரஹ்மான்ஏ.ஆர்.ரகுமான்ஏ.ஆர்.ரகுமான்ஜோதா அக்பர்

Khwajaa Endhan Khwaaja Song Lyrics in Tamil


ஆண் : வாஜா ஜி வாஜா…
வாஜா ஜி வாஜா ஜி வாஜா ஜி…

ஆண் : யா கரீப் நவாஸ்… யா கரீப் நவாஸ்…
யா கரீப் நவாஸ்… யா கரீப் நவாஸ்…
யா மொய்னுதின்… யா மொய்னுதின்…

ஆண் : யா வாஜா ஜி… யா வாஜா ஜி…
யா வாஜா ஜி… யா வாஜா ஜி…
யா வாஜா ஜி… யா வாஜா ஜி…

BGM

ஆண் : ஓ வாஜா மொய்னுதின் சிஷ்டி…

ஆண் : வாஜா எங்கள் வாஜா…
என் உயிருக்குள் வா வா…
ராஜாவின் ராஜா…
அலியாரின் அன்பாளா…

ஆண் : வாஜா எங்கள் வாஜா…
என் உயிருக்குள் வா வா…
ராஜாவின் ராஜா…
அலியாரின் அன்பாளா…

ஆண் : வாஜா எங்கள் வாஜா…
என் உயிருக்குள் வா வா… ஆஹா…
வாஜா எங்கள் வாஜா…
என் உயிருக்குள் வா வா…

ஆண் : பேதம் இன்றி கண்ணீர்…
துடைத்திடும் வினோதா…
துடைத்திடும் வினோதா…

ஆண் : பேதம் இன்றி கண்ணீர்…
துடைத்திடும் வினோதா…
துடைத்திடும் வினோதா…

ஆண் : வாஜா எங்கள் வாஜா…

BGM

ஆண் : தேடி வருவோர்க்கெல்லாம் வாஜா…
ஒளி வார்க்கும் சூரியனே தேஜா…

BGM

ஆண் : உங்கள் தர் பாரிலே வாஜா…
சிரம் பணிவாரே அவ்லியா…
எங்கள் எங்கள் ஒளி வாஜா…
குத்துபே ஜிஸ்டியாவின் ராஜா…
வாஜாவே உங்கள் அன்பிலே…
நபி முஸ்தபாவை பார்த்தோம்…

ஆண் : வாஜா எங்கள் வாஜா…
என் உயிருக்குள் வா வா…
ராஜாவின் ராஜா…
அலியாரின் அன்பாளா…

BGM

ஆண் : என் குருவின் கொடையே…
சத்குருவின் கொடையே…
சத்குரு நாதரின் கொடையே…
வாழ்வின் ஆதார தாழம் நீயே…
வாஜா ஜி…

ஆண் : சத்குரு நாதரின் கொடையே…
வாழ்வின் ஆதார தாழம் நீயே…
இருள் நீக்கும் அன்பின் பேர் ஒளியே…
நிழலாகும் கருணை கடலே…

ஆண் : உன் பாதம் சேரும் வரை…
வாழ்க்கை என்பதொரு கனவுதானே வாஜா…

{ ஆண் : வாஜா எங்கள் வாஜா…
வாஜா வாஜா…
என் உயிருக்குள் வா வா…
வா வா வா வா…
ராஜாவின் ராஜா…
அலியாரின் அன்பாளா… } * (2)

ஆண் : வாஜா எங்கள் வாஜா வாஜா…
எங்கள் வாஜா…
என் உயிருக்குள் வா வா…

ஆண் : வாஜா எங்கள் வாஜா…
வாஜா எங்கள் வாஜா…
என் உயிருக்குள் வா வா…

ஆண் : பேதம் இன்றி கண்ணீர்…
துடைத்திடும் வினோதா…
பேதம் இன்றி கண்ணீர்…
துடைத்திடும் வினோதா…

ஆண் : வாஜா எங்கள் வாஜா…
வாஜா எங்கள் வாஜா…
என் உயிருக்குள் வா வா…
ராஜாவின் ராஜா…
அலியாரின் அன்பாளா…

ஆண் : வாஜா ஜி வாஜா ஜி வாஜா ஜி வாஜா ஜி…
வாஜா ஜி வாஜா ஜி வாஜா ஜி வாஜா ஜி…
வாஜா ஜி வாஜா ஜி வாஜா ஜி வாஜா ஜி…
வாஜா ஜி வாஜா ஜி வாஜா ஜி…


Notes : Khwajaa Endhan Khwaaja Song Lyrics in Tamil. This Song from Jodhaa Akbar (2008). Song Lyrics penned by Mashook Rahman. வாஜா எங்கள் வாஜா பாடல் வரிகள்.


மன மோகனா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்சாதனா சர்கம்ஏ.ஆர்.ரகுமான்ஜோதா அக்பர்

Manmohana Song Lyrics in Tamil


பெண் : மன மோகனா… ஆஆ…
மன மோகனா… ஆஆ…
என் உயிர் கண்ணா… ஆஹா…
கார்முகில் வண்ணா வாராயோ…
கோதையின் குரலை கேளாயோ…

பெண் : விடை பெற்று வாராய் காசி மதுரா…
விடை சொல்ல வாராய் வாழ்க்கை புதிரா…

பெண் : நீயின்றி சுயம் வரமா…
கார்முகில் வண்ணா வாராயோ…
கண்ணா கோதையின் குரலை கேளாயோ…

BGM

பெண் : துவாரகனே இருளும் ஒளியும்…
இரு விழி அருகே துரத்திடுதே…
இருதயத்தில் துணையாக நீ இருக்க மாட்டாயா…

பெண் : இரு வழிகள் சந்திக்கும் இடத்தில்…
கால்கள் ரெண்டும் குழம்பிடுதே…
என் பாதை சொல்வாயா…

பெண் : தேவகியின் நாதலாலா…
திசை ஏது சொல்வாயா…

BGM

பெண் : பிருந்தாவன நந்தகுமாரா…
சகியின் வேண்டுதல் அறிவாயா…
நீங்காமல் வருவாயா…
நகம் போல பிரிவாயா…

பெண் : நவனீதா முரளி மனோகரா…
நங்கையின் மனதை புரிவாயா…
புறக்கணித்தே செல்வாயா…

பெண் : என் சோகங்கள் தீர்ப்பாயா…
நீ ராகங்கள் தீர்ப்பாயா…

பெண் : மன மோகனா… ஆஆ…
மன மோகனா… ஆஆ…
மன மோகனா… ஆஆ…
மன மோகனா… ஆஆ…

பெண் : என் உயிர் கண்ணா… ஆஹா…
கார்முகில் வண்ணா வாராயோ…
கோதையின் குரலை கேளாயோ…

பெண் : புருஷோத்தமனே உன் உதட்டில்…
புல்லாங்குழலாய் தவழ்வேனா…
உன் சுவாச காற்றாகி…
உயிர் பெற்று வாழ்வேனா…

பெண் : பார்த்திபனே உன் பார்வையிலே…
பார் கடல் அமுதம் பெறுவேனா…
பசி தாகம் மறப்பேனா…
கோகுல தோட்டத்திலே கோபியர் ஆவேனா…
உன் கோகுல தோட்டத்திலே கோபியர் ஆவேனா…

BGM

பெண் : வாழ்க்கை என்னும் கடலில் தினமும்…
வலையின் மேலே அலை அடிக்க…
இதயம் என்னும் படகு அதில்…
தடுமாறி மோதிடுதே…

பெண் : தூயவனே துடுப்புகள் போட்டு…
கரையினில் ஏற்றி விடுவாயா…
நடு கடலில் விடுவாயா…
வசீகரா மன்னவனே…
என் வேதனை தீராயோ…


Notes : Manmohana Song Lyrics in Tamil. This Song from Jodhaa Akbar (2008). Song Lyrics penned by Na Muthukumar. மன மோகனா பாடல் வரிகள்.


இதயம் இடம் மாறியதே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா முத்துக்குமார்கே.எஸ். சித்ரா & கார்த்திக்ஏ.ஆர்.ரகுமான்ஜோதா அக்பர்

Idhayam Idam Maariyadhe Song Lyrics in Tamil


BGM

ஆண் : இதயம் இடம் மாறியதே…
விழிகள் வழி மாறியதே…
இதுதானே காதல் என்று அசரீரி கேட்கின்றதே…

ஆண் : இந்த பூமி முழுவதும் அழகாய்…
மாறி போனதேனோ…
என் வானின் மீது புதிதாய்…
ஒரு மேகம் மிதப்பதேனோ…

ஆண் : மனமே மனமே…
எதனால் இத்தனை உற்சாகம்…
உனக்குள்ளே புது வித தடுமாற்றம்…
உனக்கென்ன நடந்தது சொல்வாயோ…

ஆண் : ஓஹோ… மனமே மனமே…
எதனால் இத்தனை கொண்டாட்டம்…
கண்ணுக்குள் கனவுகள் குடியேற்றம்…
உனக்கென்ன நடந்தது சொல்வாயோ…

BGM

ஆண் : சென் சூரியன் ஜோதியில்…
சந்திரன் ஒளி சேர்ந்ததோ…
அசைந்தாடும் ஆழியில்…
அழகிய நதி கலந்ததோ…

குழு : சென் சூரியன் ஜோதியில்…
சந்திரன் ஒளி சேர்ந்ததோ…
அசைந்தாடும் ஆழியில்…
அழகிய நதி கலந்ததோ…

குழு : காலம் என்னும் நதியில் விழுந்து…
இரவும் நகர்ந்தது பகலும் நகர்ந்தது…
இதயம் நகர்ந்தது… ஓ…

ஆண் : இதயம் இடம் மாறியதே…
விழிகள் வழி மாறியதே…
இதுதானே காதல் என்று அசரீரி கேட்கின்றதே…

BGM

பெண் : ஹ்ம்ம்… அலைபாயும் காதலே அணையாத தீயா…
வலித்தாலும் காதலே இனிக்கின்ற நோயா…

பெண் : இசையோடு சேரும் தாளம்…
சுதியோடு பாடும் ராகம்…
அதைப்போல எந்தன் நெஞ்சம் உன்னை சேர்ந்ததே…

பெண் : உள்ளம் சாய்ந்ததே காதலின் கால்தடம்…
தந்ததும் தீயா தந்ததும் தீயா…
தீயை தொட்டு ரசித்தால் வந்ததும் நீயா…

ஆண் : ஹ்ம்ம்… எந்தன் கனவில் பூந்தோட்டம்…
பூக்கள் பூக்கும் பெண்ணே உன்னாலே…
பூவின் வண்ணம் மட்டும் என் சொந்தம்…
பூவின் வாசம் எல்லாமே உன் சொந்தமே…

{ குழு : புது யுகமே பிறந்ததோ…
பரிமாற்றம் நிகழ்ந்ததோ…
இரு துருவம் இணைந்ததோ…
இரு விழிகள் தொலைந்ததோ… } * (2)

குழு : காலம் என்னும் நதியில் விழுந்து…
இரவும் நகர்ந்தது பகலும் நகர்ந்தது…
இதயம் நகர்ந்தது… ஓ…

ஆண் : இதயம் இடம் மாறியதே…
விழிகள் வழி மாறியதே…
இதுதானே காதல் என்று அசரீரி கேட்கின்றதே…

ஆண் : மனமே மனமே…
எதனால் இத்தனை உற்சாகம்…
உனக்குள்ளே புது வித தடுமாற்றம்…
உனக்கென்ன நடந்தது சொல்வாயோ…
உனக்கென்ன நடந்தது சொல்வாயோ…


Notes : Idhayam Idam Maariyadhe Song Lyrics in Tamil. This Song from Jodhaa Akbar (2008). Song Lyrics penned by Na Muthukumar. இதயம் இடம் மாறியதே பாடல் வரிகள்.


அசீம் ஓ ஷான்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா முத்துக்குமார்முகமது அஸ்லாம் & போனி சக்கரவர்த்திஏ.ஆர்.ரகுமான்ஜோதா அக்பர்

Azeem O Shaan Shahehshah Song Lyrics in Tamil


BGM

ஆண் : அசீம் ஓ ஷான் ஷஹென்ஷா…
அசீம் ஓ ஷான் ஷஹென்ஷா…
வாழ்க வாழ்க வாழ்கவே…

ஆண் : அன்பாளன் பண்பாளன் அஸ்சலாம் அழைக்கும்…
பொன்னாகும் ஹிந்துஸ்தான் உன் பாதம் பட்டதாலே…
கொண்டாடும் ஹிந்துஸ்தான் உன் அன்பை கண்டதாலே…

குழு : மர்ஹபா ஓஓ மர்ஹபா…
மர்ஹபா ஓஓ மர்ஹபா…

BGM

ஆண் : அசீம் ஓ ஷான் ஷஹென்ஷா…
வாழ்க வாழ்க வாழ்கவே…

ஆண் : அன்பாளன் பண்பாளன் அஸ் சலாம் அழைக்கும்…
பொன்னாகும் ஹிந்துஸ்தான் உன் பாதம் பட்டதாலே…
கொண்டாடும் ஹிந்துஸ்தான் உன் அன்பை கண்டதாலே…

குழு : மர்ஹபா ஓஓ மர்ஹபா…
மர்ஹபா ஓஓ மர்ஹபா…

BGM

ஆண் : பல நேரங்களில் உன் கொடி பறக்கும்…
பல அரண்மனைகள் உன் புகழ் உரைக்கும்…

BGM

பெண் : கருணையின் வடிவம்…
ஆண் : நீயே ராஜா…
பெண் : எங்கள் உள்ளத்தின் வீட்டிலும்…
நீயே ராஜா…

BGM

குழு : மர்ஹபா ஓஓ மர்ஹபா…
மர்ஹபா ஓஓ மர்ஹபா…

ஆண் : அசீம் ஓ ஷான் ஷஹென்ஷா…
வாழ்க வாழ்க வாழ்கவே…

BGM

ஆண் : மண்ணில் தோன்றிடும் இறைவனின் நிழல் எது…
அன்புள்ள மனிதனின் இதயம்தான் அது…
உன் திரு நாட்டில் வறுமைகள் இல்லை…
நெஞ்சம் தோறும் தங்கத்தின் மழைதான்…

BGM

குழு : மர்ஹபா ஓஓ மர்ஹபா…
மர்ஹபா ஓஓ மர்ஹபா…

ஆண் : அசீம் ஓ ஷான் ஷஹென்ஷா…

BGM

ஆண் : அகிலம் முழுவதும் உந்தன் இனமே…
அன்பின் மனம் தான் உந்தன் மனமே…

BGM

ஆண் : அரசவை திறனை அனைவரும் போற்ற…
வார்த்தைகள் இல்லை உன்னை வாழ்த்த…

BGM

குழு : மர்ஹபா ஓஓ மர்ஹபா…
மர்ஹபா ஓஓ மர்ஹபா…

ஆண் : அசீம் ஓ ஷான் ஷஹென்ஷா…
அசீம் ஓ ஷான் ஷஹென்ஷா…
வாழ்க வாழ்க வாழ்கவே…

ஆண் : அன்பாளன் பண்பாளன் அஸ் சலாம் அழைக்கும்…
பொன்னாகும் ஹிந்துஸ்தான் உன் பாதம் பட்டதாலே…
கொண்டாடும் ஹிந்துஸ்தான் உன் அன்பை கண்டதாலே…

குழு : மர்ஹபா ஓஓ மர்ஹபா…
மர்ஹபா ஓஓ மர்ஹபா…
மர்ஹபா ஓஓ மர்ஹபா…
மர்ஹபா ஓஓ மர்ஹபா…
மர்ஹபா ஓஓ மர்ஹபா…
மர்ஹபா ஓஓ மர்ஹபா…


Notes : Azeem O Shaan Shahehshah Song Lyrics in Tamil. This Song from Jodhaa Akbar (2008). Song Lyrics penned by Na Muthukumar. அசீம் ஓ ஷான் பாடல் வரிகள்.


mulumathy-avalathu-mugamaagum-song-lyrics

முழுமதி அவளது முகமாகும்

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்ஸ்ரீனிவாஸ்ஏ.ஆர்.ரகுமான்ஜோதா அக்பர்

Mulumathy Avalathu Mugamaagum Song Lyrics in Tamil


BGM

ஆண் : முழுமதி அவளது முகமாகும்…
மல்லிகை அவளது மணமாகும்…
மின்னல்கள் அவளது விழியாகும்…
மௌனங்கள் அவளது மொழியாகும்…

ஆண் : மார்கழி மாதத்து பனித்துளி அவளது குரலாகும்…
மகரந்த காட்டின் மான்குட்டி அவளது நடையாகும்…

ஆண் : அவளை ஒரு நாள் நான் பார்த்தேன்…
இதயம் கொடு என வரம் கேட்டேன்…
அதை கொடுத்தாள் உடனே எடுத்தே சென்றுவிட்டாள்… ஓஹோ…

ஆண் : ஓஹோ… முழுமதி அவளது முகமாகும்…
மல்லிகை அவளது மணமாகும்…
மார்கழி மாதத்து பனித்துளி அவளது குரலாகும்…
மகரந்த காட்டின் மான்குட்டி அவளது நடையாகும்…

BGM

ஆண் : கால்தடமே பதியாத…
கடல்தீவு அவள்தானே…
அதன் வாசனை மணலில் பூச்செடி ஆக நினைத்தேன்…

ஆண் : கேட்டதுமே மறக்காத…
மெல்லிசையும் அவள்தானே…
அதன் பல்லவி சரணம் புரிந்தும் மௌனத்தில் இருந்தேன்…

ஆண் : ஒரு கரையாக அவளிருக்க…
மறுகரையாக நான் இருக்க…
இடையில் தனிமை தளும்புதே நதியாய்…

ஆண் : கானல் நீரில் மீன் பிடிக்க…
கைகள் நினைத்தால் முடிந்திடுமா…
நிகழ்காலம் நடுவே வேடிக்கை பார்க்கிறதே…

ஆண் : ஓஹோ… முழுமதி அவளது முகமாகும்…
மல்லிகை அவளது மணமாகும்…
மார்கழி மாதத்து பனித்துளி அவளது குரலாகும்…
மகரந்த காட்டின் மான்குட்டி அவளது நடையாகும்…

BGM

ஆண் : அமைதியுடன் அவள் வந்தாள்…
விரல்களை நான் பிடித்து கொண்டேன்…
பல வானவில் பார்த்தே வழியில் தொடர்ந்தது பயணம்…

ஆண் : உறக்கம் வந்தே தலைகோத…
மரத்தடியில் இளைப்பாறி…
கண் திறந்தேன் அவளும் இல்லை கசந்தது நிமிடம்…

ஆண் : அருகில் இருந்தால் ஒரு நிமிடம்…
தொலைவில் தெரிந்தால் மறு நிமிடம்…
கண்களில் மறையும் பொய்மான் போல் ஓடுகிறாள்…

ஆண் : அவளுக்கும் எனக்கும் நடுவினிலே…
திரையொன்று தெரிந்தது எதிரினிலே…
முகம் மூடி அணிந்தால் முகங்கள் தெரிந்திடுமா…

ஆண் : ஓஹோ… முழுமதி அவளது முகமாகும்…
மல்லிகை அவளது மணமாகும்…
மார்கழி மாதத்து பனித்துளி அவளது குரலாகும்…
மகரந்த காட்டின் மான்குட்டி அவளது நடையாகும்…

BGM


Notes : Mulumathy Avalathu Mugamaagum Song Lyrics in Tamil. This Song from Jodhaa Akbar (2008). Song Lyrics penned by Na. Muthukumar. முழுமதி அவளது முகமாகும் பாடல் வரிகள்.