பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
தாமரை | ஹரிஹரன் & சாதனா சர்கம் | தேவா | எங்கள் அண்ணா |
Mudhan Mudhalaga Song Lyrics in Tamil
குழு : சாயோ சாயோ சாயோ சாயோ…
சாயோ சாயோ…
சாயோ சாயோ சாயோ சாயோ…
சாயோ சாயோ…
—BGM—
ஆண் : முதல் முதலாக ஜன்னலோரத்தில்…
நிலாவை நான் கண்டேன்…
சில் என்று என்னை சீண்டிச் சென்றிடும்…
மேகத்தை நான் பார்த்தேன்…
ஆண் : மௌனங்களால் என்னை நீ தாக்கினாய்…
மோஹங்களால் என்னை கைதாக்கினாய்…
இது நியாயம்தானா சொல்லு கண்ணே…
பெண் : முதல் முதலாக ஜன்னலோரத்தில்…
நிலாவை நான் கண்டேன்…
சில்லென்று என்னை சீண்டிச் சென்றிடும்…
மேகத்தை நான் பார்த்தேன்…
—BGM—
ஆண் : மார்கழியின் ராத்திரியில் மனசுக்குள் மல்லிகைப்பூ…
மூடி வைத்த உதடுகளில் முத்தங்களின் முணுமுணுப்பு…
பெண் : தூக்கத்தை தூக்கத்தை தூக்கிலே போடணும்…
கனவிலும் வந்து நீ இம்சைகள் செய்கிறாய்…
ஆண் : உன் ஜன்னல்களை மூடாதே…
என் தென்றலுக்கு வேர்க்கிறதே…
பெண் : என் கைப்பிடிக்க வருவாயா…
கை ரேகை என்னை கேட்கிறதே…
ஆண் : முதல் முதலாக ஜன்னலோரத்தில்…
நிலாவை நான் கண்டேன்…
சில் என்று என்னை சீண்டிச் சென்றிடும்…
மேகத்தை நான் பார்த்தேன்…
—BGM—
குழு : சாயோ சாயோ சாயோ சாயோ…
சாயோ சாயோ…
சாயோ சாயோ சாயோ சாயோ…
சாயோ சாயோ…
பெண் : தோற்கவில்லை தோகை மயில்…
இத்தனை நாள் ஏங்கியதே…
மேகத்திடம் அடம் பிடித்து…
மழைத் துளி வாங்கியதே…
ஆண் : ஏக்கங்கள் தீர்ந்ததா என்னுயிர்க்காதலி…
உன்னிடம் சாய்ந்ததே இந்த என் ஆறடி…
பெண் : உன் சட்டைக்குள்ளே இடம் தேடி…
என் மூச்சுக் காற்று அலைகிறதே…
ஆண் : உன் சேலை வாசம் வந்த பின்னே…
என் காலைகளும் விடிகிறதே…
பெண் : முதல் முதலாக ஜன்னலோரத்தில்…
நிலாவை நான் கண்டேன்…
சில்லென்று என்னை சீண்டிச் சென்றிடும்…
மேகத்தை நான் பார்த்தேன்…
பெண் : மௌனங்களால் என்னை நீ தாக்கினாய்…
மோஹங்களால் என்னை கைதாக்கினாய்…
இது நியாயம்தானா சொல்லு கண்ணே…
பெண் : முதல் முதலாக ஜன்னலோரத்தில்…
நிலாவை நான் கண்டேன்…
சில்லென்று என்னை சீண்டிச் சென்றிடும்…
மேகத்தை நான் பார்த்தேன்…
Notes : Mudhan Mudhalaga Song Lyrics in Tamil. This Song from Engal Anna (2004). Song Lyrics penned by Thamarai. முதல் முதலாக பாடல் வரிகள்.