Category Archives: காதல்

இவன்தான்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்சுனிதா சாரதிஜோஷ்வா ஸ்ரீதர்காதல்

Ivanthan En Kanavodu Song Lyrics in Tamil


BGM

பெண் : இவன்தான்…
என் கனவோடு வருபவனோ…
என் மனதோடு வாழ்பவனோ…
என் உயிரோடு கலந்தவனோ…
என் வயதோடு கரைந்தவனோ…

பெண் : இவன்தான்…
என் இதழோடு சிரிப்பவனோ…
என் இரவோடு விழிப்பவனோ…
என் இமையாக துடிப்பவனோ…
என் சுமையாக இருப்பவனோ…

பெண் : என் கூந்தல் காட்டில் தொலைந்திடுவானோ…
என்னை கூறு போட வருபவனோ…
இந்த சிறுக்கி மனசை பிடித்திடுவானோ…
என் ஆசை பொறுக்கி ஆயுள் வரை இவன் இவன்தான்…

பெண் : இவன்தான்…
என் பாவாடை பூக்களிலே ஒரு தேன் தேட பிறந்தவனோ…
என் தேய்கின்ற நினைவுகளை தேன் நிலவாக்க பிறந்தவனோ…

பெண் : லலலலல்லா தரராரா…
தர ர ர ரா ரா ர ர ர ரா ராரா…
இந்த சிறுக்கி மனசை பிடித்தவனோ…
தரராரா தர ர ர ரா…
ரா ர ர ர ரா ராரா தர ர ர ர ரா…

BGM


Notes : Ivanthan En Kanavodu Song Lyrics in Tamil. This Song from Kaadhal (2004). Song Lyrics penned by Na. Muthukumar. இவன்தான் பாடல் வரிகள்.


கிறு கிறு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்கார்த்திக் & பாப் ஷாலினிஜோஷ்வா ஸ்ரீதர்காதல்

Kiru Kiru Song Lyrics in Tamil


BGM

ஆண் : கிறு கிறு கிறு வென கெறங்குறேன்…
நான் நொறு நொறு நொறு என நொறுங்குறேன்…
பெண் : கெறங்குற நொறுங்குற…

ஆண் : திரு திரு திரு வென முழிக்கிறேன்…
நான் தரையில நூல இழுக்குறேன்…
பெண் : முழிக்கிற இழுக்கற…

ஆண் : திக்கி தடவி தவிக்கிறேன்…
நான் தீ கோழியா துடிக்கிறேன்…
பெண் : தவிக்கிற துடிக்கிற…

ஆண் : விக்கி விக்கி வழுகிறேன்…
நான் வில்ல போல வளையுறேன்…
பெண் : வழுக்கற வளையற…

BGM

ஆண் : குறுக்கும் நெடுக்கும் பாத்து பாத்து…
கிறுக்கு புடிச்சு அலையுறேன்…
குலுக்கி போட்ட சோழிய போல…
கண்ணு அடிச்சு சொருகுறேன்…
பெண் : அலையுற சொருகுற…

ஆண் : முறுக்கி வச்ச தாம்பு கயிற…
மடங்கி மடங்கி மருகுறேன்…
மந்திரிச்ச ஆட்ட போல…
எந்திரிச்சு மொணங்குறேன்…
பெண் : மருகுற மொணங்குற…

ஆண் : ஈரவானம் மேல ஏறும் எலி போல நொலையுறேன்…
திரை போட்டு தங்க சிலைய திருடத்தானே திரியுறேன்…
பெண் : நொழையுற திரியுற…

BGM

ஆண் : கொட்ட கொட்ட கண் முழிச்சு ஆந்த போல ஏங்குறேன்…
கிட்ட தட்ட வௌவாலாக தலை கீழாக தொங்குறேன்…
பெண் : ஏங்குற தொங்குற…

ஆண் : குட்டி போட்ட பூன போல…
கூச்சம் விட்டு சிணுங்குறேன்…
பூட்டு போட்ட பொட்டிய போல…
பத்திரமாக பதுங்குறேன்…
பெண் : சிணுங்குற பதுங்குற…

ஆண் : நீ சிரிக்கும் நேரம் பாத்து…
பசியினு கெஞ்சுறேன்…
நீயும் கொஞ்சம் சம்மதிச்சா…
பாத்திரத்த முழுங்குறேன்…
பெண் : கெஞ்சுற முழுங்குற…

ஆண் : கிறு கிறு கிறு வென கெறங்குறேன்…
நான் நொறு நொறு நொறு என நொறுங்குறேன்…

BGM

ஆண் : திரு திரு திரு வென முழிக்கிறேன்…
நான் தரையில நூல இழுக்குறேன்…

BGM

ஆண் : திக்கி தடவி தவிக்கிறேன்…
நான் தீ கோழியா துடிக்கிறேன்…

BGM

ஆண் : விக்கி விக்கி வழுகிறேன்…
நான் வில்ல போல வளையுறேன்…

BGM


Notes : Kiru Kiru Song Lyrics in Tamil. This Song from Kaadhal (2004). Song Lyrics penned by Na. Muthukumar. கிறு கிறு பாடல் வரிகள்.


Thottu Thottu Ennai Song Lyrics in Tamil

தொட்டு தொட்டு என்னை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்ஹரிசரண் & ஹரிணி சுதாகாஜோஷ்வா ஸ்ரீதர்காதல்

Thottu Thottu Ennai Song Lyrics in Tamil


ஆண் : தொட்டு தொட்டு என்னை…
வெற்று கழி மண்ணை…
சிற்பமாக யார் செய்ததோ…

குழு : சிற்பமாக யார் செய்ததோ…

பெண் : தொட்டு தொட்டு என்னை…
பட்டாம்பூச்சி பெண்ணை…
திட்டமிட்டு யார் வென்றதோ…

குழு : திட்டமிட்டு யார் வென்றதோ…

ஆண் : விழியில் விழுந்து…
வழியினை மறக்கிறேன்…

பெண் : உனக்குள் உம்…
தொலைந்து உயிரோடு கலக்கிறேன்…

BGM

ஆண் : தொட்டு தொட்டு என்னை…
வெற்று கழி மண்ணை…
சிற்பமாக யார் செய்ததோ…

குழு : சிற்பமாக யார் செய்ததோ…

பெண் : தொட்டு தொட்டு என்னை…
பட்டாம்பூச்சி பெண்ணை…
திட்டமிட்டு யார் வென்றதோ…

குழு : திட்டமிட்டு யார் வென்றதோ…

BGM

ஆண் : தாய் உடன் பேசும் வார்த்தைகள் எல்லாம்…
உடனே மறக்கும்…
உன்னுடன் பேசும் வார்த்தைகள் எல்லாம்…
உள்ளே நிலைக்கும்…

BGM

பெண் : முதல் முறை உன்னை பார்த்தது எங்கே…
மனதும் தேடும்…
மலை நின்ற பின்னும் மரகிளை இங்கே…
மெதுவாய் தூவும்…

ஆண் : இதயத்தின் உள்ளே…
இமயத்தை போலே…
சுமைகளை வைத்தால் காதல்…

பெண் : உலகத்தில் உள்ள…
சித்ரவதைகெல்லாம் செல்ல…
பெயர் வைத்தால் காதல்…

BGM

ஆண் : எங்கே நான் போனாலும்…
என் வாழ்வில் என்றும்…
உன் நிழலில் இளைப்பாற வருவேன் கண்ணே…

ஆண் : மரணம்தான் வந்தாலும் பூசெண்டு தந்து…
உன் மடியில் தலைசாய்த்து…
இறப்பேன் பெண்ணே…

BGM

ஆண் : கருவிழி ரெண்டும் கருவறைதானோ…
மீண்டும் பிறந்தேன்…
கங்கரூவை போல நெஞ்சுக்குள்ளே நானும்…
உன்னை சுமந்தேன்…

BGM

பெண் : உன்னை போல யாரும்…
என்னை தாண்டி போனால்…
உன்னை நினைப்பேன்…

பெண் : உந்தன் ஆசை முகம்…
பார்த்து கிடக்கத்தான் உயிரை சுமப்பேன்…

ஆண் : நெருங்கவும் இல்லை…
விலகவும் இல்லை…
நெஞ்சம் செய்யும் தொல்லை காதல்…

பெண் : தொடக்கமும் இல்லை…
முடிவுகள் இல்லை…
கடவுளை போலே காதல்…

BGM

பெண் : தொட்டு தொட்டு உன்னை…
வெற்று கழி மண்ணை…
சிற்பமாக யார் செய்ததோ…

குழு : சிற்பமாக யார் செய்ததோ…

ஆண் : தொட்டு தொட்டு உன்னை…
பட்டாம்பூச்சி பெண்ணை…
திட்டமிட்டு யார் வென்றதோ…

குழு : திட்டமிட்டு யார் வென்றதோ…

பெண் : விழியில் விழுந்து…
வழியினை மறக்கிறேன்…

ஆண் : உனக்குள்… ஆ ஆ…
தொலைந்து உயிரோடு கலக்கிறேன்…

BGM

பெண் : தொட்டு தொட்டு உன்னை…
வெற்று கழி மண்ணை…
சிற்பமாக யார் செய்ததோ…

ஆண் : தொட்டு தொட்டு உன்னை…
பட்டாம்பூச்சி பெண்ணை…
திட்டமிட்டு யார் வென்றதோ…


Notes : Thottu Thottu Ennai Song Lyrics in Tamil. This Song from Kaadhal (2004). Song Lyrics penned by Na. Muthukumar. தொட்டு தொட்டு என்னை பாடல் வரிகள்.


உனக்கென இருப்பேன்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்ஹரிசரண்ஜோஷ்வா ஸ்ரீதர்காதல்

Unakena Irupen Song Lyrics in Tamil


ஆண் : உனக்கென இருப்பேன்…
உயிரையும் கொடுப்பேன்…
உன்னை நான் பிரிந்தால்…
உனக்கு முன் இறப்பேன்…

ஆண் : கண்மணியே… கண்மணியே…
அழுவதேன்… கண்மணியே…
வழித்துணை நான் இருக்க…

ஆண் : உனக்கென இருப்பேன்…
உயிரையும் கொடுப்பேன்…
உன்னை நான் பிரிந்தால்…
உனக்கு முன் இறப்பேன்…

BGM

ஆண் : கண்ணிர் துளிகளை…
கண்கள் தாங்கும்…
கண்மணி காதலின்…
நெஞ்சம்தான் தாங்கிடுமா…

ஆண் : கல்லறை மீதுதான்…
பூத்த பூக்கள்…
என்றுதான் வண்ணத்து…
பூச்சிகள் பார்த்திடுமா…

ஆண் : மின்சார கம்பிகள் மீது…
மைனாக்கள் கூடுகட்டும்…
நம் காதல் தடைகளை தாண்டும்…

ஆண் : வளையாமல் நதிகள் இல்லை…
வலிக்காமல் வாழ்க்கை இல்லை…
வருங்காலம் காயம் ஆற்றும்…

ஆண் : நிலவொளியை மட்டும் நம்பி…
இலை எல்லாம் வாழ்வதில்லை…
மின்மினியும் ஒளிகொடுக்கும்…

BGM

ஆண் : தந்தையும் தாயயும்…
தாண்டி வந்தாய்…
தோழியே இரண்டுமாய்…
என்றுமே நான் இருப்பேன்…

ஆண் : தோளிலே நீயுமே சாயும்போது…
எதிர்வரும் துயரங்கள்…
அனைத்தையும் நான் எதிா்ப்பேன்…

ஆண் : வெந்நீரில் நீ குளிக்க…
விறகாகி தீ குளிப்பேன்…
உதிரத்தில் உன்னை கலப்பேன்…

ஆண் : விழிமூடும் போதும் உன்னை…
பிரியாமல் நான் இருப்பேன்…
கனவுக்குள் காவல் இருப்பேன்…

ஆண் : நான் என்றால் நானே இல்லை…
நீதானே நானாய் ஆனேன்…
நீ அழுதால் நான் துடிப்பேன்…

ஆண் : உனக்கென இருப்பேன்…
உயிரையும் கொடுப்பேன்…
உன்னை நான் பிரிந்தால்…
உனக்கு முன் இறப்பேன்…

ஆண் : கண்மணியே… கண்மணியே…
அழுவதேன்… கண்மணியே…
வழித்துணை நான் இருக்க…


Notes : Unakena Irupen Song Lyrics in Tamil. This Song from Kaadhal (2004). Song Lyrics penned by Na. Muthukumar. உனக்கென இருப்பேன் பாடல் வரிகள்.