ஆண் : தொட்டு தொட்டு என்னை… வெற்று கழி மண்ணை… சிற்பமாக யார் செய்ததோ…
குழு : சிற்பமாக யார் செய்ததோ…
பெண் : தொட்டு தொட்டு என்னை… பட்டாம்பூச்சி பெண்ணை… திட்டமிட்டு யார் வென்றதோ…
குழு : திட்டமிட்டு யார் வென்றதோ…
ஆண் : விழியில் விழுந்து… வழியினை மறக்கிறேன்…
பெண் : உனக்குள் உம்… தொலைந்து உயிரோடு கலக்கிறேன்…
—BGM—
ஆண் : தொட்டு தொட்டு என்னை… வெற்று கழி மண்ணை… சிற்பமாக யார் செய்ததோ…
குழு : சிற்பமாக யார் செய்ததோ…
பெண் : தொட்டு தொட்டு என்னை… பட்டாம்பூச்சி பெண்ணை… திட்டமிட்டு யார் வென்றதோ…
குழு : திட்டமிட்டு யார் வென்றதோ…
—BGM—
ஆண் : தாய் உடன் பேசும் வார்த்தைகள் எல்லாம்… உடனே மறக்கும்… உன்னுடன் பேசும் வார்த்தைகள் எல்லாம்… உள்ளே நிலைக்கும்…
—BGM—
பெண் : முதல் முறை உன்னை பார்த்தது எங்கே… மனதும் தேடும்… மலை நின்ற பின்னும் மரகிளை இங்கே… மெதுவாய் தூவும்…
ஆண் : இதயத்தின் உள்ளே… இமயத்தை போலே… சுமைகளை வைத்தால் காதல்…
பெண் : உலகத்தில் உள்ள… சித்ரவதைகெல்லாம் செல்ல… பெயர் வைத்தால் காதல்…
—BGM—
ஆண் : எங்கே நான் போனாலும்… என் வாழ்வில் என்றும்… உன் நிழலில் இளைப்பாற வருவேன் கண்ணே…
ஆண் : மரணம்தான் வந்தாலும் பூசெண்டு தந்து… உன் மடியில் தலைசாய்த்து… இறப்பேன் பெண்ணே…
—BGM—
ஆண் : கருவிழி ரெண்டும் கருவறைதானோ… மீண்டும் பிறந்தேன்… கங்கரூவை போல நெஞ்சுக்குள்ளே நானும்… உன்னை சுமந்தேன்…
—BGM—
பெண் : உன்னை போல யாரும்… என்னை தாண்டி போனால்… உன்னை நினைப்பேன்…
பெண் : உந்தன் ஆசை முகம்… பார்த்து கிடக்கத்தான் உயிரை சுமப்பேன்…
ஆண் : நெருங்கவும் இல்லை… விலகவும் இல்லை… நெஞ்சம் செய்யும் தொல்லை காதல்…
பெண் : தொடக்கமும் இல்லை… முடிவுகள் இல்லை… கடவுளை போலே காதல்…
—BGM—
பெண் : தொட்டு தொட்டு உன்னை… வெற்று கழி மண்ணை… சிற்பமாக யார் செய்ததோ…
குழு : சிற்பமாக யார் செய்ததோ…
ஆண் : தொட்டு தொட்டு உன்னை… பட்டாம்பூச்சி பெண்ணை… திட்டமிட்டு யார் வென்றதோ…
குழு : திட்டமிட்டு யார் வென்றதோ…
பெண் : விழியில் விழுந்து… வழியினை மறக்கிறேன்…
ஆண் : உனக்குள்… ஆ ஆ… தொலைந்து உயிரோடு கலக்கிறேன்…
—BGM—
பெண் : தொட்டு தொட்டு உன்னை… வெற்று கழி மண்ணை… சிற்பமாக யார் செய்ததோ…
ஆண் : தொட்டு தொட்டு உன்னை… பட்டாம்பூச்சி பெண்ணை… திட்டமிட்டு யார் வென்றதோ…
Notes : Thottu Thottu Ennai Song Lyrics in Tamil. This Song from Kaadhal (2004). Song Lyrics penned by Na. Muthukumar. தொட்டு தொட்டு என்னைபாடல் வரிகள்.