Category Archives: காக்க காக்க

காக்க காக்க

என்னை கொஞ்சம்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைதிப்பு & பாப் ஷாலினிஹாரிஸ் ஜெயராஜ்காக்க காக்க

Ennai Konjam Song Lyrics in Tamil


ஆண் : சிறகுகள் நீளுதே…
பறவைகள் போலவே…
விண்வெளி தாண்டியே துள்ளி துள்ளி போகுதே…

ஆண் : புதுவித அனுபவம்…
நொடியினில் பெருகிடும்…
இருவரின் உயிரையும் அள்ளி அள்ளி போகுதே…

BGM

ஆண் : என்னை கொஞ்சம் மாற்றி…
என் நெஞ்சில் உன்னை ஊற்றி…
நீ மெல்ல மெல்ல என்னை கொல்லாதே…

ஆண் : நேற்றும் இன்றும் வேறா…
இன்று காணும் நானும் நானா…
உன் பேச்சில் என்னை வீழ்த்தி செல்லாதே…

BGM

பெண் : ஒன்னே ஒன்னு சொல்லணும்… யே ஹே…
ஒன்னே ஒன்னு சொல்லணும்…
உன் முகத்தை பாத்து சொல்லணும்…
தனிமை கொஞ்சம் கிடைக்க கூடாதா…

பெண் : நானும் மாறி போனதே…
என் நளினம் கூடி போனதே…
அது தெரிந்தால் நீயே சொல்ல கூடாதா…

பெண் : யாரை நான் கேட்பேன்…
நீ சொல்வாயா…
யாரை நான் கேட்பேன்…
நீ சொல்வாயா…

ஆண் : என்னை கொஞ்சம் மாற்றி…
என் நெஞ்சில் உன்னை ஊற்றி…
நீ மெல்ல மெல்ல என்னை கொல்லாதே…

ஆண் : நேற்றும் இன்றும் வேறா…
இன்று காணும் நானும் நானா…
உன் பேச்சில் என்னை வீழ்த்தி செல்லாதே…

BGM

ஆண் : வருகிற வழிகளில் மலர்களின் கூட்டமுண்டு…
ஒரு முறை கூட நின்று ரசித்ததில்லை…

ஆண் : இன்று மட்டும் கொஞ்சம் நின்று…
ஒரு பூவை கிள்ளி கொண்டு…
சிரிப்புடன் செல்வேன் என்று நினைத்ததில்லை… இல்லை…

பெண் : நீ கிள்ளும் பூக்களை நான் சூடி கொள்ளவே…
என்றே எண்ணம் இன்று வந்தாச்சே…
ஆனாலும் நேரிலே எப்போதும் போலவே…
இயல்பாக பேசி போவது என்றாச்சே… ஹே…

BGM

பெண் : என்னை கொஞ்சம் மாற்றி…
என் நெஞ்சில் உன்னை ஊற்றி…
நீ மெல்ல மெல்ல என்னை கொல்லாதே…

பெண் : நேற்றும் இன்றும் வேறா…
இன்று காணும் நானும் நானா…
ஒரு சொல்லால் என்னை வீழ்த்தி செல்லாதே…

ஆண் : சிறகுகள் நீளுதே…
பறவைகள் போலவே…
விண்வெளி தாண்டியே…
துள்ளி துள்ளி போகுதே…

ஆண் : புதுவித அனுபவம்…
நொடியினில் பெருகிடும்…
இருவரின் உயிரையும்…
அள்ளி அள்ளி போகுதே…

BGM

ஆண் : என்னை இங்கே வர செய்தாய்…
என்னனவோ பேச செய்தாய்…
புன்னகைகள் பூக்க செய்தாய்…
இன்னும் என்ன…

ஆண் : அருகினில் அமர்ந்து என்னை…
உற்று உற்று பார்க்கும் உந்தன்…
துரு துரு பார்வைக்கும்தான்…
அர்த்தம் என்ன என்ன…

பெண் : என் பார்வை புதுசுதான்…
என் பேச்சும் புதுசுதான்…
உன்னாலே நானும் மாறி போனேனே…

பெண் : கூட்டத்தில் என்னைதான் உன் கண்கள் தேடனும்…
என்றெல்லாம் எண்ணும் பைத்தியம் ஆனேனே…
லா லா லா லா லா லா லா…

BGM

ஆண் : என்னை கொஞ்சம் மாற்றி…
என் நெஞ்சில் உன்னை ஊற்றி…
நீ மெல்ல மெல்ல என்னை கொல்லாதே… ஹேஹேஹே…

ஆண் : நேற்றும் இன்றும் வேறா…
இன்று காணும் நானும் நானா…
உன் பேச்சில் என்னை வீழ்த்தி செல்லாதே…

பெண் : ஒன்னே ஒன்னு சொல்லணும்…
உன் முகத்தை பாத்து சொல்லணும்…
தனிமை கொஞ்சம் கிடைக்க கூடாதா…

பெண் : நானும் மாறி போனதே…
என் நளினம் கூடி போனதே…
அது தெரிந்தால் நீயே சொல்ல கூடாதா…

பெண் : யாரை நான் கேட்பேன்…
நீ சொல்வாயா…
யாரை நான் கேட்பேன்…
நீயே சொல்வாயா…

பெண் : நீயே சொல்வாயா…
நீயே சொல்வாயா…
நீயே சொல்வாயா…
நீயே சொல்வாயா…


Notes : Ennai Konjam Song Lyrics in Tamil. This Song from Kaakha Kaakha (2003). Song Lyrics penned by Thamarai. என்னை கொஞ்சம் பாடல் வரிகள்.


ஒரு ஊரில் அழகே

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைகார்த்திக்ஹாரிஸ் ஜெயராஜ்காக்க காக்க

Oru Ooril Song Lyrics in Tamil


BGM

குழு : ஷி இஸ் எ பான்டஸி…
ஷான நான் நாநா ஓ ஹோ…
ஸ்வீட் அஸ் எ ஹார்மோனி…
ஷான நான் நாநா ஓ ஹோ ஹோ நோ..
.
குழு : ஒன் நோஸ் ஷி இஸ் எ மிஸ்டரி…
ஷான நான் நாநா ஓ ஹோ ஹோ…
பில்ஸ் யுவர் ஹார்ட் வித் எக்ஸ்டஸி…
வோகு வோகு யேகி யே ஹே…

BGM

ஆண் : லா லாலா லாலா லா லா லாலா…
லா லா லா லாலா லா லா லாலா லா லா லாலா…

BGM

ஆண் : ஒரு ஊரில் அழகே உருவாய் ஒருத்தி இருந்தாளே…
அழகுக்கே இலக்கணம் எழுத அவளும் பிறந்தாளே…

ஆண் : அவள் பழகும் விதங்களை பார்க்கையிலே…
பல வருட பரிட்சையம் போலிருக்கும்…
எதிலும் வாஞ்சைகள் தான் இருக்கும்…
முதலாம் பார்வையிலே மனதை ஈர்ப்பாளே…
முதலாம் பார்வையிலே மனதை ஈர்ப்பாளே…

ஆண் : ஒரு ஊரில் அழகே உருவாய் ஒருத்தி இருந்தாளே…
அழகுக்கே இலக்கணம் எழுத அவளும் பிறந்தாளே…

BGM

ஆண் : மரகத சோம்பல் முறிப்பாளே…
புல்வெளி போலே சிலிர்ப்பாளே…
விரல்களை ஆட்டி ஆட்டி பேசும் போதிலே…
காற்றிலும் வீணை உண்டு என்று தோன்றுமே…

ஆண் : அவள் கன்னத்தின் குழியிலே…
சிறு செடிகளும் நடலாம்…

ஆண் : அவள் கன்னத்தின் குழியிலே…
குழு : அழகழகாய்…
ஆண் : சிறு செடிகளும் நடலாம்…
குழு : விதவிதமாய்…

ஆண் : ஏதோ ஏதோ தனித்துவம்…
அவளிடம் ததும்பிடும் ததும்பிடுமே…

ஆண் : ஒரு ஊரில் அழகே அழகே…

ஆண் : ஒரு ஊரில் அழகே உருவாய் ஒருத்தி இருந்தாளே… ஹே…
அழகுக்கே இலக்கணம் எழுத அவளும் பிறந்தாளே…

BGM

ஆண் : மகரந்தம் தாங்கும் மலர் போலே…
தனியொரு வாசம் அவள் மேலே…
புடவையின் தேர்ந்த மடிப்பில் விசிறி வாழைகள்…
தோள்களில் ஆடும் கூந்தல் கரிசல் காடுகள்…

ஆண் : அவள் கடந்திடும் போது…
தலை அனிச்சையாய் திரும்பும்…

ஆண் : அவள் கடந்திடும் போது…
குழு : நிச்சயமாய்…
ஆண் : தலை அனிச்சையாய் திரும்பும்…
குழு : அவள் புறமாய்…

ஆண் : என்ன சொல்ல என்ன சொல்ல…
இன்னும் சொல்ல மொழியினில் வழி இல்லையே…

BGM

குழு : நோ ஒன் நோஸ் ஷி இஸ் எ மிஸ்டரி…
ஷான நான் நாநா…

ஆண் : அவள் பழகும் விதங்களை பார்க்கையிலே…
குழு : பார்க்கையிலே…
ஆண் : பல வருட பரிட்சையம் போலிருக்கும்…
குழு : போலிருக்கும்…

ஆண் : எதிலும் வாஞ்சைகள் தான் இருக்கும்…
முதலாம் பார்வையிலே மனதை ஈர்ப்பாளே…
முதல் முதல் பார்வையிலே மனதை ஈர்ப்பாளே…


Notes : Oru Ooril Song Lyrics in Tamil. This Song from Kaakha Kaakha (2003). Song Lyrics penned by Thamarai. ஒரு ஊரில் அழகே பாடல் வரிகள்.


thoodhu-varuma-song-lyrics-in-tamil

தூது வருமா

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைசுனிதா சாரதி & ஃபெபி மணிஹாரிஸ் ஜெயராஜ்காக்க காக்க

Thoodhu Varuma Song Lyrics in Tamil


BGM

பெண் : தூது வருமா தூது வருமா…
காற்றில் வருமா கரைந்துவிடுமா…

BGM

பெண் : தூது வருமா தூது வருமா…
கனவில் வருமா கலைந்து விடுமா…

பெண் : நீ சொல்ல வந்ததை சொல்லி விடுமா…
நீ சொல்ல வந்ததை சொல்லி விடுமா…
பாதி சொன்னதும் அது ஓடி விடுமா…

குழு : டியூரா…
பெண் : முத்தங்கள் அள்ளி வீசவே…
வெட்கம் என்னடா…
குழு : டியூரா…

பெண் : பெண்ணோடு கொஞ்சி பேசவே…
வெட்கமா…
குழு : டியூரா…

பெண் : இதழோடு சோமபானம்தான்…
சுரந்துவிட்டதா…
குழு : டியூரா…
பெண் : இனிக்கின்ற சின்ன…
துரோகமே செய்யடா…

பெண் : தூது வருமா தூது வருமா…
காற்றில் வருமா கரைந்துவிடுமா…
தூது வருமா தூது வருமா…
கனவில் வருமா கலைந்து விடுமா…

BGM

பெண் : நல்லதே நடக்கும் என்றே…
சீனத்தின் வாஸ்து அன்றே…
பார்த்தேனே வீட்டின் உள்ளே…

குழு : ஓஹோ… ஓஓ ஓஓ…

பெண் : சிவப்பிலே டிராகன் படமும்…
சிரித்திடும் புத்தர் சிலையும்…
வைத்தேனே தெற்கு மூலையிலே…

குழு : ஓஹோ… ஓஓ ஓஓ…

பெண் : பல பல தடை தாண்டி வந்தாய்…
வாஸ்துகள் எல்லாம் பொய்யே என்றாய்…
கொடிய சாத்தானே…
என்னை தூக்கி செல்லவா… ஆ ஹோ…

பெண் : தூது வருமா தூது வருமா…
காற்றில் வருமா கரைந்துவிடுமா…
தூது வருமா தூது வருமா…
கனவில் வருமா கலைந்து விடுமா…

BGM

குழு : தூது இல்லே… தூது இல்லே…
தூது இல்லே… தூது இல்லே…

பெண் : கருப்பிலே உடைகள் அணிந்தேன்…
இருட்டிலே காத்து கிடந்தேன்…
யட்சனை போல நீயும் வந்தாய்…

குழு : ஓஹோ… ஓஓ ஓஓ…

பெண் : சரசங்கள் செய்த படியே…
சவுக்கடி கொடுக்கும் யுவனே…
வலித்தாலும் சுகம் தந்து சென்றாய்…

குழு : ஓஹோ… ஓஓ ஓஓ…

பெண் : மறுபடி வருவாய் என்று துடித்தேன்…
நடந்ததை எண்ணி உறங்க மறுத்தேன்…
பிரிய மனமில்லை இன்னும் ஒரு முறை வா…

BGM

பெண் : நீ சொல்ல வந்ததை…
குழு : சொல்ல வந்ததை…
பெண் : சொல்லி விடுமா…
குழு : சொல்லி விடுமா…

குழு : சொல்ல வந்ததை சொல்லி விடுமா…
பாதி சொன்னதும் அது ஓடிவிடுமா…

குழு : டியூரா…
பெண் : முத்தங்கள் அள்ளி வீசவே…
வெட்கம் என்னடா…
குழு : டியூரா…

பெண் : பெண்ணோடு கொஞ்சி பேசவே…
வெட்கமா…
குழு : டியூரா…
பெண் : இதழோடு சோமபானம்தான்…
சுரந்து விட்டதா…
குழு : டியூரா…

பெண் : இனிக்கின்ற சின்ன…
துரோகமே செய்யடா…
குழு : டியூரா…
பெண் : செய்யடா…
குழு : டியூரா…
பெண் : செய்யடா…
குழு : டியூரா… டியூரா…


Notes : Thoodhu Varuma Song Lyrics in Tamil. This Song from Kaakha Kaakha (2003). Song Lyrics penned by Thamarai. தூது வருமா பாடல் வரிகள்.


உயிரின் உயிரே

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைகிருஷ்ணகுமார் குன்னத் & சுசித்ராஹாரிஸ் ஜெயராஜ்காக்க காக்க

Uyirin Uyire Song Lyrics in Tamil


BGM

ஆண் : உயிரின் உயிரே உயிரின் உயிரே…
நதியின் மடியில் காத்து கிடக்கின்றேன்…
ஈர அலைகள் நீரை வாரி…
முகத்தில் இரைத்தும் முழுதும் வேர்கின்றேன்…

BGM

ஆண் : நகரும் நெருப்பாய் கொழுந்து விட்டெறிந்தேன்…
அணைந்த பின்பும் அனலின் மேலிருந்தேன்…
காலை பனியாக என்னை வாரிகொண்டாய்…

ஆண் : நேரம் கூட எதிரி ஆகிவிட…
யுகங்கள் ஆக வேடம் மாறிவிட…
அணைத்து கொண்டாயே…
பின்பு ஏனோ சென்றாய்…

ஆண் : உயிரின் உயிரே உயிரின் உயிரே…
நதியின் மடியில் காத்து கிடக்கின்றேன்…
ஈர அலைகள் நீரை வாரி…
முகத்தில் இரைத்தும் முழுதும் வேர்கின்றேன்…
முழுதும் வேர்கின்றேன்… முழுதும் வேர்கின்றேன்…

BGM

ஆண் : சுவாசமின்றி தவிக்கிறேனே…
உனது மூச்சில் பிழைக்கிறேனே…
இதழ்களை இதழ்களால் நிரப்பிட வா பெண்ணே…

ஆண் : நினைவு எங்கோ நீந்தி செல்ல…
கனவு வந்து கண்ணை கிள்ள…
நிழல் எது நிஜம் எது குழம்பினேன் வா பெண்ணே…
காற்றில் எந்தன் கைகள் ரெண்டும்…
உன்னை அன்றி யாரை தேடும்…
விலகி போகாதே தொலைந்து போவேனே…
நான் நான் நான்…

ஆண் : உயிரின் உயிரே உயிரின் உயிரே…
நதியின் மடியில் காத்து கிடக்கின்றேன்…
ஈர அலைகள் நீரை வாரி…
முகத்தில் இரைத்தும் முழுதும் வேர்கின்றேன்…

BGM

ஆண் : இரவின் போர்வை என்னை சூழ்ந்து…
மெல்ல மெல்ல மூடும் தாழ்ந்து…
விடியலை தேடினேன்…
உன்னிடம் வா பெண்ணே…

ஆண் : பாதமெங்கும் சாவின் ரணங்கள்…
நரகமாகும் காதல் கணங்கள்…
ஒருமுறை மடியிலே உறங்குவேன் வா பெண்ணே…
தாமதிக்கும் ஒவ்வொரு கணமும்…
தவணை முறையில் மரணம் நிகழும்…
அருகில் வாராயோ விரல்கள் தாராயோ… நீ நீ நீ…

ஆண் : உயிரின் உயிரே உயிரின் உயிரே…
நதியின் மடியில் காத்து கிடக்கின்றேன்…
ஈர அலைகள் நீரை வாரி…
முகத்தில் இரைத்தும் முழுதும் வேர்கின்றேன்…

ஆண் : நகரும் நெருப்பாய் கொழுந்து விட்டெறிந்தேன்…
அணைந்த பின்பும் அனலின் மேலிருந்தேன்…
காலை பனியாக என்னை வாரிகொண்டாய்…

ஆண் : நேரம் கூட எதிரி ஆகிவிட…
யுகங்கள் ஆக வேடம் மாறிவிட…
அணைத்து கொண்டாயே பின்பு ஏனோ சென்றாய்…
ஏனோ சென்றாய்… ஏ… ஏ…

BGM


Notes : Uyirin Uyire Song Lyrics in Tamil. This Song from Kaakha Kaakha (2003). Song Lyrics penned by Thamarai. உயிரின் உயிரே பாடல் வரிகள்.


ஒன்றா ரெண்டா

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைபாம்பே ஜெயஸ்ரீஹாரிஸ் ஜெயராஜ்காக்க காக்க

Ondra Renda Song Lyrics in Tamil


பெண் (வசனம்) : ஒன்றா ரெண்டா ஆசைகள்…
எல்லாம் சொல்லவே…
ஓர் நாள் போதுமா…

ஆண் (வசனம்) : சொல்லு…

குழு (பெண்கள்) : ம்ம்ம் ம்ம்ம்…
ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்…

பெண் : ஒன்றா ரெண்டா ஆசைகள்…
எல்லாம் சொல்லவே…
ஓர் நாள் போதுமா…
அன்பே இரவை கேட்கலாம்…
விடியல் தாண்டியும்…
இரவே நீளுமா…

பெண் : என் கனவில்… ஆ ஹா…
நான் கண்ட… ஆ ஹா…
நாளிது தான் கலாபக்காதலா…
பார்வைகளால்… ஆ ஹா…
பல கதைகள்… ஆ ஹா…
பேசிடலாம் கலாபக்காதலா…

பெண் : ஒன்றா ரெண்டா ஆசைகள்…
எல்லாம் சொல்லவே…
ஓர் நாள் போதுமா…
அன்பே இரவை கேட்கலாம்…
விடியல் தாண்டியும்…
இரவே நீளுமா…

—BGM—

பெண் : பெண்களை நிமிர்ந்து பார்த்திட…
உன் இனிய கண்ணியம் பிடிக்குதே…
கண்களை நேரா பாத்து தான்…
நீ பேசும் தோரணை பிடிக்குதே…

பெண் : தூரத்தில் நீ வந்தாலே…
என் மனசில் மழையடிக்கும்…
மிகப்பிடித்த பாடல் ஒன்றை…
உதடுகளும் முணுமுணுக்கும்…

பெண் : மந்தகாசம் சிந்தும் உந்தன் முகம்…
மரணம் வரையில் என் நெஞ்சில் தங்கும்…

—BGM—

பெண் : உனது கண்களில்…
எனது கனவினை காண போகிறேன்…

பெண் : ஒன்றா ரெண்டா ஆசைகள்…
எல்லாம் சொல்லவே…
ஓர் நாள் போதுமா…
அன்பே இரவை கேட்கலாம்…
விடியல் தாண்டியும்…
இரவே நீளுமா…

—BGM—

பெண் : சந்தியாக் கால மேகங்கள்…
உன் வானில் ஊர்வலம் போகுதே…
பார்க்கையில் ஏனோ நெஞ்சிலே…
உன் நடையின் சாயலே தோணுதே…

பெண் : நதிகளிலே நீராடும்…
சூரியனை நான் கண்டேன்…
வேர்வைகளின் துளி வழிய…
நீ வருவாய் என நின்றேன்…

பெண் : உன்னால் என் நெஞ்சில் ஆணின் மனம்…
நானும் சொந்தம் என்ற எண்ணம் தரும்…
மகிழ்ச்சி மீறுதே வானைத் தாண்டுதே…
சாகத் தோன்றுதே… தோன்றுதே…

—BGM—

பெண் : அன்பே இரவை கேட்கலாம்…

குழு (பெண்கள்) : இரவை கேட்கலாம்…

பெண் : விடியல் தாண்டியும்…
இரவே நீளுமா…

குழு (பெண்கள்) : இரவே நீளுமா…

பெண் : என் கனவில்… ஆ ஹா…
நான் கண்ட… ஆ ஹா…
நாளிது தான் கலாபக்காதலா…
பார்வைகளால்… ஆ ஹா…
பல கதைகள்… ஆ ஹா…
பேசிடலாம் கலாபக்காதலா…


Notes : Ondra Renda Song Lyrics in Tamil. This Song from Kaakha Kaakha (2003). Song Lyrics penned by Thamarai. ஒன்றா ரெண்டா பாடல் வரிகள்.