Category Archives: மனுநீதி

Mayilaadum Paarai Song Lyrics in Tamil

மயிலாடும் பாறை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கலை குமார்எஸ்.சத்யாதேவாமனுநீதி

Mayilaadum Paarai Song Lyrics in Tamil


BGM

பெண் : மயிலாடும் பாறை…
பக்கத்தில ஓடை…

பெண் : மயிலாடும் பாறை பக்கத்தில ஓட…
அழகு ஓவியமா…
பட்டிக்காடு சிரிக்கும் பாருங்கம்மா…
உழுத வயலுல…
குட்டி குட்டி கவிதை விளையுமா…

பெண் : மயிலாடும் பாறை பக்கத்தில ஓட…
அழகு ஓவியமா…
பட்டிக்காடு சிரிக்கும் பாருங்கம்மா…
உழுத வயலுல…
குட்டி குட்டி கவிதை விளையுமா…

BGM

பெண் : துள்ளி ஓடும் முயலுக்குதான்…
காது குத்த வைப்போமா…
நாம் கம்மல் போட்டு பாப்போமா…

பெண் : தத்தி நடக்கும் குட்ட வாத்தே…
நடந்திட பலகம்மா…
நான் நட வண்டி தாரேன்மா…

பெண் : ஒத்த காலிலே… ஆஆ… ஆஆ…
ஒத்த காலிலே நிற்கும் நாரையே…
கேட்கும் வரத்தையே நாமும் தருவோமா…

பெண் : ஆட்டு தாடி சிக்கெடுத்து…
ரெட்டை ஜடை பின்னுவோமா…
வாய் இல்லாத ஜீவன் எல்லாம்…
கொஞ்ச தோணும் குழந்தை ஆவோமம்மா…

பெண் : மயிலாடும் பாறை பக்கத்தில ஓட…
அழகு ஓவியமா…
பட்டிக்காடு சிரிக்கும் பாருங்கம்மா…
உழுத வயலுல…
குட்டி குட்டி கவிதை விளையுமா…

BGM

பெண் : மூக்கு சிவந்த பச்சை கிளியே…
உனக்கென்ன கோவமா…
கோவ பழம் தாரேன்மா…

பெண் : வாடி கெடக்கும் பச்ச கொடியே…
உனக்கென்ன தாகம்மா…
நான் தண்ணீர தாரேன்மா…

பெண் : கோயில் மாட புறா… ஆஆ… ஆஆ…
கோயில் மாட புறா கூடி ஆடுமே…
மேக கூட்டமே மேடை போடுமே…

பெண் : வண்ண வண்ண பட்டம் விட்டு…
வெண்ணிலவை தொடுவோமா…
சின்ன சின்ன சொப்பு வச்சு…
வக்கனையா சமையல் செய்வோமா…

பெண் : மயிலாடும் பாறை பக்கத்தில ஓட…
அழகு ஓவியமா…
பட்டிக்காடு சிரிக்கும் பாருங்கம்மா…
உழுத வயலுல…
குட்டி குட்டி கவிதை விளையுமா…

BGM


Notes : Mayilaadum Paarai Song Lyrics in Tamil. This Song from Manu Needhi (2000). Song Lyrics penned by Kalaikumar. மயிலாடும் பாறை பாடல் வரிகள்.


ஒரு ரோஜா தோட்டம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
சினேகன்கே.எஸ். சித்ரா & பி. உன்னிகிருஷ்ணன்தேவாமனுநீதி

Oru Roja Thottam Song Lyrics in Tamil


பெண் : ஒரு ரோஜா தோட்டம்…
பூத்து குலுங்குதே நீ வந்ததாலா…
என் உள்ளங்கையிலே உலகம் வந்ததே…
உன்னை கண்டதாலா…

BGM

பெண் : ஒரு ரோஜா தோட்டம்…
பூத்து குலுங்குதே நீ வந்ததாலா…
என் உள்ளங்கையிலே உலகம் வந்ததே…
உன்னை கண்டதாலா…

ஆண் : ஒரு வானவில்லை பூமியில் கண்டேன்…
நீ வந்ததாலா…
நான் காற்றில் ஏறியே நடந்து போகிறேன்…
உன்னை கண்டதாலா…

பெண் : அட சாமத்தில் சூரியன்…
ஜன்னலை தட்டுதே…
கை கோர்த்ததாலா…

பெண் : ஒரு ரோஜா தோட்டம்…
பூத்து குலுங்குதே நீ வந்ததாலா…
என் உள்ளங்கையிலே உலகம் வந்ததே…
உன்னை கண்டதாலா…

BGM

பெண் : மனு போட்ட கண் சுகமா…
உன் மனசுக்குள் நான் சுகமா…
என் மார்போடு தலை சாய்க்கும்…
மாமாவே சுகமா சுகமா…

குழு : சுகமா சுகமா…
சுகமா சுகமா…

ஆண் : தேனூறும் இதழ் சுகமா…
நான் தீண்டாதா இடம் சுகமா…
நீ எனக்காக நெய்கின்ற வெட்கங்கள்…
சுகமா சுகமா…

பெண் : நான் கடிச்ச நடு விரலில்…
நக கண்ணும் சுகம்தானே…

ஆண் : இடைவெளிகள் குறைந்துவிட்டால்…
இம்சைகளும் சுகம்தானே…

பெண் : இனி உன்னோடு நான் இருக்கும்…
நொடிஎல்லாம் பொன் இருக்கும்…

ஆண் : நீ இல்லாமல் நான் நடக்க…
வழியெல்லாம் முள் இருக்கும்…

பெண் : அட வெண்ணிலா வேர்குதே…
புன்னகை பூக்குதே நம்மை கண்டதாலா…

பெண் : ஒரு ரோஜா தோட்டம்…
பூத்து குலுங்குதே நீ வந்ததாலா…
என் உள்ளங்கையிலே உலகம் வந்ததே…
உன்னை கண்டதாலா…

BGM

ஆண் : அலை பாயும் குழல் சுகமா…
உன் அழகானா செவி சுகமா…
உன் கழுத்தோரம் கவி பாடும்…
சிறு மச்சம் சுகமா சுகமா…

குழு : சுகமா சுகமா…
சுகமா சுகமா…

பெண் : மலை தூக்கும் பலம் சுகமா…
என் மடி சாயும் தலை சுகமா…
நான் தடுத்தாலும் கேக்காத…
பிடிவாதம் சுகமா சுகமா…

ஆண் : என்னோட ஆயுள்எல்லாம்…
கூடுதடி உன்னால…

பெண் : உன்னோடு வாழ்வதிலே…
மரணம் இல்லை பின்னாலே…

ஆண் : நான் பூவாலே உடை தைத்து…
பூங்காற்றில் அனுப்பிருந்தேன்…

பெண் : நீ பூச்சூடும் கூந்தலிலே…
உனை சூடி காத்திருந்தேன்…

ஆண் : அட என்னை நீ உன்னை நான்…
என்னமோ செய்றோம்…
காதல் வென்றதாலா…

பெண் : ஒரு ரோஜா தோட்டம்…
பூத்து குலுங்குதே நீ வந்ததாலா…
என் உள்ளங்கையிலே உலகம் வந்ததே…
உன்னை கண்டதாலா…

ஆண் : ஒரு வானவில்லை பூமியில் கண்டேன்
நீ வந்ததாலா…
நான் காற்றில் ஏறியே நடந்து போகிறேன்…
உன்னை கண்டதாலா…

பெண் : அட சாமத்தில் சூரியன்…
ஜன்னலை தட்டுதே…
கை கோர்த்ததாலா…

BGM


Notes : Oru Roja Thottam Song Lyrics in Tamil. This Song from Manu Needhi (2000). Song Lyrics penned by Snehan. ஒரு ரோஜா தோட்டம் பாடல் வரிகள்.