Category Archives: ரோஜாவனம்

ரோஜாவனம் – Rojavanam (1999)

என்ன இது என்ன இது

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துபி. உன்னிகிருஷ்ணன் & அனுராதா ஸ்ரீராம்பரத்வாஜ்ரோஜாவனம்

Enna Ithu Enna Ithu Song Lyrics in Tamil


பெண் : சிரிக்கின்றேன் சிரிக்கின்றேன்…
இதயம் இல்லாமலே நான் வாழ்கிறேன்…
இதயம் எங்கே இதயம் எங்கே எங்கே…
ஐ ஹேவ் ஃபாலன் இன் லவ்…
ஐ ஹேவ் ஃபாலன் இன் லவ்…

BGM

பெண் : என்ன இது என்ன இது…
என் மனது என்னை விட்டு தூரம் நின்று பார்க்கிறதே…

ஆண் : என்ன இது என்ன இது…
என் விழிகள் என்னை விட்டு உன் வழியில் கிடக்கிறதே…

பெண் : தென்றலிலே ஈரபதம் குறைகிறதே…
ஆண் : தென்றல் இங்கே தீ பிடித்து எரிகிறதே…

பெண் : ஐ ஹேவ் ஃபாலன் இன் லவ்…
ஐ ஹேவ் ஃபாலன் இன் லவ்…

பெண் : என்ன இது என்ன இது…
என் மனது என்னை விட்டு தூரம் நின்று பார்க்கிறதே…

ஆண் : என்ன இது என்ன இது…
என் விழிகள் என்னை விட்டு உன் வழியில் கிடக்கிறதே…

BGM

பெண் : மின்னல் சுடர் விழுந்து மேகம் தீ பிடிக்க…
நின்றேன் நின்றேன் காதல் கொண்டு…

ஆண் : ஹ்ம்ம்ம்… உந்தன் அழகை கண்டு…
உருகும் பனி மலையில் கண்டேன் கண்டேன் நான் இங்கு…

பெண் : ஒரே ஒரு பொறி போதும்…
பற்றிக்கொள்ளும் ஒரு காடு…

BGM

ஆண் : போதும் உந்தன் கால் சுவடு…
ஆளும் அதில் எந்தன் மனது…

பெண் : காதலர் நடந்திடும் சாலைகள் யாவையும்…
சொர்க்கத்தை நோக்கியே செல்லும்…

ஆண் & பெண் : ஐ ஹேவ் ஃபாலன் இன் லவ்…
ஐ ஹேவ் ஃபாலன் இன் லவ்…

பெண் : என்ன இது என்ன இது…
என் மனது என்னை விட்டு தூரம் நின்று பார்க்கிறதே…

ஆண் : என்ன இது என்ன இது…
என் விழிகள் என்னை விட்டு உன் வழியில் கிடக்கிறதே…

BGM

பெண் : கன்னம் வருடி விடும்…
காற்றின் இனிய சுகம்…
இன்பம் இன்பம் உன்னை போலே…

ஆண் : ஹ்ம்ம்… பூவின் அசைவுகளும் நதியின் வளைவுகளும்…
இன்பம் இன்பம் உன்னை போலே…

பெண் : போதும் போதும் இந்த ஸ்பரிசம்…
போதும் போதும் இந்த நிமிஷம்…

BGM

ஆண் : தேவை இல்லை இந்த உலகம்…
தேடு தேடு வேறு கிரகம்…

பெண் : உலக அதிசயம் எதுவும் இல்லையே…
அன்பே நம் காதலின் முன்னே…

ஆண் & பெண் : ஐ ஹேவ் ஃபாலன் இன் லவ்…
ஐ ஹேவ் ஃபாலன் இன் லவ்…

பெண் : என்ன இது என்ன இது…
என் மனது என்னை விட்டு தூரம் நின்று பார்க்கிறதே…

ஆண் : என்ன இது என்ன இது…
என் விழிகள் என்னை விட்டு உன் வழியில் கிடக்கிறதே…

பெண் : தென்றலிலே ஈரபதம் குறைகிறதே…
ஆண் : தென்றல் இங்கே தீ பிடித்து எரிகிறதே…

ஆண் & பெண் : ஐ ஹேவ் ஃபாலன் இன் லவ்…
ஐ ஹேவ் ஃபாலன் இன் லவ்…


Notes : Enna Ithu Enna Ithu Song Lyrics in Tamil. This Song from Rojavanam (1999). Song Lyrics penned by Vairamuthu. என்ன இது என்ன இது பாடல் வரிகள்.


உன்னைப் பார்த்த கண்கள்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஹரிஹரன்பரத்வாஜ்ரோஜாவனம்

Unnai Partha Kangal Song Lyrics in Tamil


BGM

ஆண் : உன்னைப் பார்த்த கண்கள் இன்னும் மூடவில்லை…
குழு : ஹாஆ… ஹாஆ…
ஆண் : போதும் போதும் என்றேன் நெஞ்சம் கேட்கவில்லை…
குழு : ஹாஆ… ஹாஆ…

ஆண் : ஒரு தென்றல் போல வந்து…
அன்பே என்னை வேர்க்க வைத்தாய்…
வள்ளல் போல வாழ்வே…
உன்னைக் கெஞ்சிக் கேட்க வைத்தாய்…

ஆண் : உன் பேரை நான் சொல்லி என்னை அழைப்பேன்…
உன்னை இன்று நான் தேடி என்னைத் தொலைத்தேன்…

ஆண் : உன்னைப் பார்த்த கண்கள் இன்னும் மூடவில்லை…
போதும் போதும் என்றேன் நெஞ்சம் கேட்கவில்லை…

BGM

ஆண் : அன்பே உன் கூந்தலில் நான் கலைந்தேன்…
நீ வைத்த பூக்களில் நான் உதிர்ந்தேன்…
குழி விழும் கண்ணத்துக்குள் நான் விழுந்தேன்…
சிரு நெற்றி வேர்வையில் நான் கரைந்தேனே…

ஆண் : நேற்று வரை நேற்று வரை…
வாழ்வில் ருசி இல்லை…
மலரே உந்தன் மடியில் வாழ்ந்தால்…
மரணம் இல்லை…

ஆண் : உன்னைப் பார்த்த கண்கள் இன்னும் மூடவில்லை…
குழு : ஹாஆ… ஹாஆ…
ஆண் : போதும் போதும் என்றேன் நெஞ்சம் கேட்கவில்லை…
குழு : ஹாஆ… ஹாஆ…

BGM

ஆண் : நான் பார்க்கும் வானவில் வளையல்களில்…
நான் கேட்கும் மெல்லிசை கொலுசுகளில்…
சில்லென்ற நட்சத்திரம் உன் கண்கள்தானோ…
பூமத்திய ரேகை உந்தன் கைகளில்தானோ…

ஆண் : என்ன நிறம் என்ன குணம் காதல் புரியவில்லை…
காதல் கவிதை எதுவும் இன்று தெரியவில்லை…

ஆண் : உன்னைப் பார்த்த கண்கள் இன்னும் மூடவில்லை…
குழு : ஹாஆ… ஹாஆ…
ஆண் : போதும் போதும் என்றேன் நெஞ்சம் கேட்கவில்லை…
குழு : ஹாஆ… ஹாஆ…

ஆண் : ஒரு தென்றல் போல வந்து…
அன்பே என்னை வேர்க்க வைத்தாய்…
வள்ளல் போல வாழ்வே…
உன்னைக் கெஞ்சிக் கேட்க வைத்தாய்…

ஆண் : உன் பேரை நான் சொல்லி என்னை அழைப்பேன்…
உன்னை இன்று நான் தேடி என்னைத் தொலைத்தேன்…

ஆண் : உன்னைப் பார்த்த கண்கள் இன்னும் மூடவில்லை…
போதும் போதும் என்றேன் நெஞ்சம் கேட்கவில்லை…


Notes : Unnai Partha Kangal Song Lyrics in Tamil. This Song from Rojavanam (1999). Song Lyrics penned by Vairamuthu. உன்னைப் பார்த்த கண்கள் பாடல் வரிகள்.


மனமே மனமே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஎஸ்.பி. பாலசுப்ரமணியம்பரத்வாஜ்ரோஜாவனம்

Maname Maname Song Lyrics in Tamil


BGM

ஆண் : மனமே மனமே தடுமாறும் மனமே…
உள்ளுக்குள் இருந்தே உயிர் கொல்லும் மனமே…
பெண்ணைப் பார்க்கும் பொழுது நீ சிறகு விரிக்காதே…
பிரிந்து போன பிறகு நீ சிதையும் வளர்க்காதே…

ஆண் : மனமே நீ தூங்கிவிடு…
என்னை நினைவின்றி தூங்கவிடு…

ஆண் : மனமே மனமே தடுமாறும் மனமே…
உள்ளுக்குள் இருந்தே உயிர் கொல்லும் மனமே…

BGM

ஆண் : காதல் என்ற மாத்திரைக்கு…
எப்போதும் இரண்டு குணம்…
போட்டுக் கொண்டால் போதையைக் கொடுக்கும்…
போகப் போக துாக்கத்தைக் கெடுக்கும்…

ஆண் : காதல் என்ற யாத்திரைக்கு…
எப்போதும் இரண்டு வழி…
வந்த வழி வெளிச்சத்தில் ஜொலிக்கும்…
போகும் வழியோ இருளுக்குள் இருக்கும்…

ஆண் : கண் மூடினால் தூக்கம் இல்லை…
கண்கள் திறந்தால் பார்வையும் இல்லை…

ஆண் : ஆலவிருட்சம் போல வளருது…
அழகுப் பெண்ணின் நினைப்பு…
வெட்டி எறிந்து பார்த்தேன்…
மறுபடி வேரில் என்ன துளிர்ப்பு…

ஆண் : என் நெஞ்சமே பகையானதே…
உயிர் வாழ்வதே சுமையானதே…

ஆண் : மனமே நீ தூங்கிவிடு…
என்னை நினைவின்றி தூங்கவிடு…

BGM

ஆண் : காதல் தந்த நினைவுகளை…
கழட்டி எறிய முடியவில்லை…
அலைகள் வந்து அடிப்பதனாலே…
கரைகள் எழுந்து ஓடுவதில்லை…

ஆண் : என்னை மறக்க நினைக்கையிலும்…
அவளை மறக்க முடியவில்லை…
உலை மூட மூடிகள் உண்டு…
அலை கடல் மூடிட மூடிகள் இல்லை…

ஆண் : காதலின் கையில் பூக்களும் உண்டு…
காதலின் கையில் கத்தியும் உண்டு…
பூக்கள் கொண்டு வந்து நீ வாசம் வீசுவாயா…
கத்தி கொண்டு வந்து நீ கழுத்தில் வீசுவாயா…

ஆண் : என் வாழ்விலே என்ன சோதனை…
நான் வாழ்வதே என் வேதனை…

ஆண் : மனமே நீ தூங்கிவிடு…
என்னை நினைவின்றி தூங்கவிடு…

ஆண் : மனமே மனமே தடுமாறும் மனமே…
உள்ளுக்குள் இருந்தே உயிர் கொல்லும் மனமே…
பெண்ணைப் பார்க்கும் பொழுது நீ சிறகு விரிக்காதே…
பிரிந்து போன பிறகு நீ சிதையும் வளர்க்காதே…

ஆண் : மனமே நீ தூங்கிவிடு…
என்னை நினைவின்றி தூங்கவிடு…


Notes : Maname Maname Song Lyrics in Tamil. This Song from Rojavanam (1999). Song Lyrics penned by Vairamuthu. மனமே மனமே பாடல் வரிகள்.