பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
வைரமுத்து | ஹரிஹரன் | பரத்வாஜ் | ரோஜாவனம் |
Unnai Partha Kangal Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : உன்னைப் பார்த்த கண்கள் இன்னும் மூடவில்லை…
குழு : ஹாஆ… ஹாஆ…
ஆண் : போதும் போதும் என்றேன் நெஞ்சம் கேட்கவில்லை…
குழு : ஹாஆ… ஹாஆ…
ஆண் : ஒரு தென்றல் போல வந்து…
அன்பே என்னை வேர்க்க வைத்தாய்…
வள்ளல் போல வாழ்வே…
உன்னைக் கெஞ்சிக் கேட்க வைத்தாய்…
ஆண் : உன் பேரை நான் சொல்லி என்னை அழைப்பேன்…
உன்னை இன்று நான் தேடி என்னைத் தொலைத்தேன்…
ஆண் : உன்னைப் பார்த்த கண்கள் இன்னும் மூடவில்லை…
போதும் போதும் என்றேன் நெஞ்சம் கேட்கவில்லை…
—BGM—
ஆண் : அன்பே உன் கூந்தலில் நான் கலைந்தேன்…
நீ வைத்த பூக்களில் நான் உதிர்ந்தேன்…
குழி விழும் கண்ணத்துக்குள் நான் விழுந்தேன்…
சிரு நெற்றி வேர்வையில் நான் கரைந்தேனே…
ஆண் : நேற்று வரை நேற்று வரை…
வாழ்வில் ருசி இல்லை…
மலரே உந்தன் மடியில் வாழ்ந்தால்…
மரணம் இல்லை…
ஆண் : உன்னைப் பார்த்த கண்கள் இன்னும் மூடவில்லை…
குழு : ஹாஆ… ஹாஆ…
ஆண் : போதும் போதும் என்றேன் நெஞ்சம் கேட்கவில்லை…
குழு : ஹாஆ… ஹாஆ…
—BGM—
ஆண் : நான் பார்க்கும் வானவில் வளையல்களில்…
நான் கேட்கும் மெல்லிசை கொலுசுகளில்…
சில்லென்ற நட்சத்திரம் உன் கண்கள்தானோ…
பூமத்திய ரேகை உந்தன் கைகளில்தானோ…
ஆண் : என்ன நிறம் என்ன குணம் காதல் புரியவில்லை…
காதல் கவிதை எதுவும் இன்று தெரியவில்லை…
ஆண் : உன்னைப் பார்த்த கண்கள் இன்னும் மூடவில்லை…
குழு : ஹாஆ… ஹாஆ…
ஆண் : போதும் போதும் என்றேன் நெஞ்சம் கேட்கவில்லை…
குழு : ஹாஆ… ஹாஆ…
ஆண் : ஒரு தென்றல் போல வந்து…
அன்பே என்னை வேர்க்க வைத்தாய்…
வள்ளல் போல வாழ்வே…
உன்னைக் கெஞ்சிக் கேட்க வைத்தாய்…
ஆண் : உன் பேரை நான் சொல்லி என்னை அழைப்பேன்…
உன்னை இன்று நான் தேடி என்னைத் தொலைத்தேன்…
ஆண் : உன்னைப் பார்த்த கண்கள் இன்னும் மூடவில்லை…
போதும் போதும் என்றேன் நெஞ்சம் கேட்கவில்லை…
Notes : Unnai Partha Kangal Song Lyrics in Tamil. This Song from Rojavanam (1999). Song Lyrics penned by Vairamuthu. உன்னைப் பார்த்த கண்கள் பாடல் வரிகள்.