பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
வைரமுத்து | எஸ்.பி. பாலசுப்ரமணியம் | பரத்வாஜ் | ரோஜாவனம் |
Maname Maname Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : மனமே மனமே தடுமாறும் மனமே…
உள்ளுக்குள் இருந்தே உயிர் கொல்லும் மனமே…
பெண்ணைப் பார்க்கும் பொழுது நீ சிறகு விரிக்காதே…
பிரிந்து போன பிறகு நீ சிதையும் வளர்க்காதே…
ஆண் : மனமே நீ தூங்கிவிடு…
என்னை நினைவின்றி தூங்கவிடு…
ஆண் : மனமே மனமே தடுமாறும் மனமே…
உள்ளுக்குள் இருந்தே உயிர் கொல்லும் மனமே…
—BGM—
ஆண் : காதல் என்ற மாத்திரைக்கு…
எப்போதும் இரண்டு குணம்…
போட்டுக் கொண்டால் போதையைக் கொடுக்கும்…
போகப் போக துாக்கத்தைக் கெடுக்கும்…
ஆண் : காதல் என்ற யாத்திரைக்கு…
எப்போதும் இரண்டு வழி…
வந்த வழி வெளிச்சத்தில் ஜொலிக்கும்…
போகும் வழியோ இருளுக்குள் இருக்கும்…
ஆண் : கண் மூடினால் தூக்கம் இல்லை…
கண்கள் திறந்தால் பார்வையும் இல்லை…
ஆண் : ஆலவிருட்சம் போல வளருது…
அழகுப் பெண்ணின் நினைப்பு…
வெட்டி எறிந்து பார்த்தேன்…
மறுபடி வேரில் என்ன துளிர்ப்பு…
ஆண் : என் நெஞ்சமே பகையானதே…
உயிர் வாழ்வதே சுமையானதே…
ஆண் : மனமே நீ தூங்கிவிடு…
என்னை நினைவின்றி தூங்கவிடு…
—BGM—
ஆண் : காதல் தந்த நினைவுகளை…
கழட்டி எறிய முடியவில்லை…
அலைகள் வந்து அடிப்பதனாலே…
கரைகள் எழுந்து ஓடுவதில்லை…
ஆண் : என்னை மறக்க நினைக்கையிலும்…
அவளை மறக்க முடியவில்லை…
உலை மூட மூடிகள் உண்டு…
அலை கடல் மூடிட மூடிகள் இல்லை…
ஆண் : காதலின் கையில் பூக்களும் உண்டு…
காதலின் கையில் கத்தியும் உண்டு…
பூக்கள் கொண்டு வந்து நீ வாசம் வீசுவாயா…
கத்தி கொண்டு வந்து நீ கழுத்தில் வீசுவாயா…
ஆண் : என் வாழ்விலே என்ன சோதனை…
நான் வாழ்வதே என் வேதனை…
ஆண் : மனமே நீ தூங்கிவிடு…
என்னை நினைவின்றி தூங்கவிடு…
ஆண் : மனமே மனமே தடுமாறும் மனமே…
உள்ளுக்குள் இருந்தே உயிர் கொல்லும் மனமே…
பெண்ணைப் பார்க்கும் பொழுது நீ சிறகு விரிக்காதே…
பிரிந்து போன பிறகு நீ சிதையும் வளர்க்காதே…
ஆண் : மனமே நீ தூங்கிவிடு…
என்னை நினைவின்றி தூங்கவிடு…
Notes : Maname Maname Song Lyrics in Tamil. This Song from Rojavanam (1999). Song Lyrics penned by Vairamuthu. மனமே மனமே பாடல் வரிகள்.