பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
வைரமுத்து | ஸ்ரீனிவாஸ் & கே கே | வித்யாசாகர் | உயிரோடு உயிராக |
Poovukellam Siragu Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : பூவுக்கெல்லாம் சிறகு முளைத்தது…
எந்தன் தோட்டத்தில்…
விண்மீன் எல்லாம் நிலவாய் போனது…
எந்தன் வானத்தில்…
ஆண் : முப்பது நாளும் முகூர்த்தம் ஆனது…
எந்தன் மாதத்தில்…
முள்ளில் கூட தேன்துளி கசிந்தது…
எந்தன் ராகத்தில்…
ஆண் : இது எப்படி எப்படி நியாயம்…
எல்லாம் காதல் செய்த மாயம்…
இது எப்படி எப்படி நியாயம்…
எல்லாம் காதல் செய்த மாயம்…
ஆண் : பூவுக்கெல்லாம் சிறகு முளைத்தது…
எந்தன் தோட்டத்தில்…
விண்மீன் எல்லாம் நிலவாய் போனது…
எந்தன் வானத்தில்…
—BGM—
ஆண் : நிலவை பிடித்து எறியவும் முடியும்…
நீல கடலை குடிக்கவும் முடியும்…
காற்றின் திசையை மாற்றவும் முடியும்…
கம்பனை முழுக்க சொல்லவும் முடியும்…
ஐ லவ் யூ லவ் யூ சொல்லத்தானே…
ஐயோ என்னால் முடியவில்லை…
ஆண் : சுற்றும் உலகின் விட்டம் தெரியும்…
சூரியன் பூமி தூரமும் தெரியும்…
கங்கை நதியின் நீளமும் தெரியும்…
வங்க கடலின் ஆழமும் தெரியும்…
காதல் என்பது சரியா தவறா…
இதுதான் எனக்கு தெரியவில்லை…
—BGM—
ஆண் : ஒற்றை பார்வை உயிரை குடித்தது…
கற்றை குழல் கைது செய்தது…
மூடும் ஆடை முத்தமிட்டது…
ரத்தம் எல்லாம் சுட்டு விட்டது…
ஐ லவ் யூ லவ் யூ சொல்லத்தானே…
ஐயோ என்னால் முடியவில்லை…
ஆண் : மீண்டும் வசந்தம் எழுந்துவிட்டது…
மீண்டும் சோலை கொழுந்துவிட்டது…
இதயம் இதயம் மலா்ந்துவிட்டது…
இசையின் கதவு திறந்துவிட்டது…
காதல் என்பது சரியா தவறா…
இதுதான் எனக்கு தெரியவில்லை…
ஆண் : பூவுக்கெல்லாம்…
ஆண் : பூவுக்கெல்லாம் சிறகு முளைத்தது…
எந்தன் தோட்டத்தில்…
விண்மீன் எல்லாம் நிலவாய் போனது…
எந்தன் வானத்தில்…
ஆண் : முப்பது நாளும் முகூர்த்தம் ஆனது…
எந்தன் மாதத்தில்…
முள்ளில் கூட தேன்துளி கசிந்தது…
எந்தன் ராகத்தில்…
ஆண் : இது எப்படி எப்படி நியாயம்…
எல்லாம் காதல் செய்த மாயம்…
இது எப்படி எப்படி நியாயம்…
எல்லாம் காதல் செய்த மாயம்…
Notes : Poovukellam Siragu Song Lyrics in Tamil. This Song from Uyirodu Uyiraga (1998). Song Lyrics penned by Vairamuthu. பூவுக்கெல்லாம் சிறகு பாடல் வரிகள்.