Category Archives: ஆசையில் ஒர் கடிதம்

ஆசையில் ஒர் கடிதம் – Aasaiyil Oru Kaditham (1999)

நீ இருந்தால்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஹரிஹரன்தேவாஆசையில் ஒர் கடிதம்

Nee Irunthal Naan Song Lyrics in Tamil


BGM

{ பெண் : தத்தித்தோம் தோம்தீம்த தக திமி…
தத்தித்தோம் தோம்தீம்த தக திமி…
தத்தித்தோம் தோம்தீம்த தக திமி தோம்… } * (3)

ஆண் : நீ இருந்தால் நான் இருப்பேன்…
நீ நடந்தால் நான் நடப்பேன்…
நிழலுக்கெல்லாம் குடை பிடிப்பேன்…
நீ என் காதலியானால்…

—BGM—

ஆண் : ஹேஹே… நீ இருந்தால் நான் இருப்பேன்…
நீ நடந்தால் நான் நடப்பேன்…
நிழலுக்கெல்லாம் குடை பிடிப்பேன்…
நீ என் காதலியானால்…

BGM

ஆண் : நீராட நதி தருவேன்…
நீ துடைக்க முகில் தருவேன்…
நீ உடுத்த மலர் தருவேன்…
நீ என் காதலியானால்…
நீ என் காதலியானால்…

BGM

ஆண் : நீ நடக்கும் புல்வெளியில்…
பனித்துளிகள் துடைத்து வைப்பேன்…
நீ பேசும் தாய்மொழியில்…
வல்லினங்கள் களைந்து வைப்பேன்…

ஆண் : நீ கடந்த தெருவில்…
உந்தன் வாசம் தேடுவேன்…
நீ குளித்த நதியில் மூழ்கி…
மோட்சம் காணுவேன்…

ஆண் : உன் ஜன்னல் ஓரம்…
நான் காற்றாக வருவேன்…
நாள் ஒன்று வீதம்…
நான் பூக்கொண்டு தருவேன்…

ஆண் : கண்கள் தீண்டும் கனவைப் போலே…
நீ அறியாமல் நான் தொடுவேன்…
நீ என் காதலியானால்…

பெண் : தத்தித்தோம் தோம்தீம்த தக திமி…
தத்தித்தோம் தோம்தீம்த தக திமி…
தத்தித்தோம் தோம்தீம்த தக திமி தோம்…

BGM

ஆண் : வெள்ளை நிலா ஒளி திரட்டி…
உள்ளங்கையில் ஊற்றி வைப்பேன்…
காற்றலையில் இசை பிரித்து…
காதுகளில் தவழ வைப்பேன்…

ஆண் : கோபுரங்கள் ஏறி உந்தன்…
பேரை கூவுவேன்…
தாஜ்மஹாலின் மேலே உந்தன்…
பேரை எழுதுவேன்…

ஆண் : உன் கூந்தல் முடியில்…
நான் என் ஜீவன் முடிவேன்…
நீ ஊடல் கொண்டால்…
நான் உன் காலில் விழுவேன்…

ஆண் : ஒற்றை முத்தம் சிந்துவதென்றால்…
உன் மடியில் உயிர் விடுவேன்…
நீ என் காதலியானால்…

ஆண் : நீ இருந்தால் நான் இருப்பேன்…
நீ நடந்தால் நான் நடப்பேன்…
நிழலுக்கெல்லாம் குடை பிடிப்பேன்…
நீ என் காதலியானால்…

BGM

ஆண் : நீ இருந்தால் நான் இருப்பேன்…
நீ நடந்தால் நான் நடப்பேன்…
நிழலுக்கெல்லாம் குடை பிடிப்பேன்…
நீ என் காதலியானால்…

BGM

ஆண் : நீராட நதி தருவேன்…
நீ துடைக்க முகில் தருவேன்…
நீ உடுத்த மலர் தருவேன்…
நீ என் காதலியானால்…

ஆண் : நீ என் காதலியானால்…
நீ என் காதலியானால்…
நீ என் காதலியானால்…

BGM


Notes : Nee Irunthal Naan Song Lyrics in Tamil. This Song from Aasaiyil Oru Kaditham (1999). Song Lyrics penned by Vairamuthu. நீ இருந்தால் பாடல் வரிகள்.


வெண்ணிலவை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஸ்ரீனிவாஸ் & சுஜாதா மோகன்தேவாஆசையில் ஒர் கடிதம்

Vennilavai Song Lyrics in Tamil


BGM

ஆண் : வெண்ணிலவை திருடிகொள் உயிரே…
விடியும் வரை குடியிருப்போம் உயிரே…
வெண்ணிலவை திருடிகொள் உயிரே…
விடியும் வரை குடியிருப்போம் உயிரே…

ஆண் : பூமியில் பந்து காற்று போகும் போகும்…
நீயும் நானும் கட்டி கொள்ள வேண்டும்…

ஆண் : மண்ணை விட்டு விண்ணை தொட்டு…
நம் காதல் அரங்கேறட்டும்…
மண்ணை விட்டு விண்ணை தொட்டு…
நம் காதல் அரங்கேறட்டும்…

BGM

ஆண் : இந்த பூமி உடைந்தாலும்…
நிலவில் இருவரும் குதிப்போம்…

பெண் : அந்த நிலவு தேய்ந்தாலும்…
காற்றில் கரங்களில் மிதப்போம்

ஆண் : காற்றெல்லாம் தீர்ந்தாலும் காதல் தீராது…
கடலெல்லாம் காய்ந்தாலும் முத்தம் காயாது…

பெண் : காதலின் சாட்சியாய் நாம் உயிர் வாழலாம்…
காதலை வாழ்த்தலாம் அன்பே…

ஆண் : ஆணும் பெண்ணும் கானா இன்பம்…
முழு மூச்சில் நாம் காணுவோம்…

பெண் : மண்ணை விட்டு விண்ணை தொட்டு…
நம் காதல் அரங்கேறட்டும்…

BGM

பெண் : உந்தன் மார்பில் தலை சாய்ந்தால்…
உலகம் முழுவதும் எனக்கு…

ஆண் : இமையோடு இமை சேர்த்தால்…
இறப்பின் பயமில்லை நமக்கு…

பெண் : உன்னோட உயிரோட தேகம் கூடாதா…
ஓம் சாந்தி ஓம் சாந்தி உள்ளம் பாடாதா…

ஆண் : புன்னகை வாணியே பூக்களின் ராணியே…
மோகத்தை வாழ்த்த வா முத்தே…

பெண் : இதே இன்பம் இதே துன்பம்…
உயிர் வாழ தினம் வேண்டுமே…

ஆண் : மண்ணை விட்டு விண்ணை தொட்டு…
நம் காதல் அரங்கேறட்டும்…

பெண் : வெண்ணிலவை திருடிகொள் உயிரே…
ஆண் : விடியும் வரை குடியிருப்போம் உயிரே…

பெண் : பூமியில் பந்து காற்று போகும் போகும்…
ஆண் : நீயும் நானும் கட்டி கொள்ள வேண்டும்…

பெண் : மண்ணை விட்டு விண்ணை தொட்டு…
நம் காதல் அரங்கேறட்டும்…

ஆண் : மண்ணை விட்டு விண்ணை தொட்டு…
நம் காதல் அரங்கேறட்டும்…

BGM


Notes : Vennilavai Song Lyrics in Tamil. This Song from Aasaiyil Oru Kaditham (1999). Song Lyrics penned by Vairamuthu. வெண்ணிலவை பாடல் வரிகள்.


ஆசையில் ஒர் கடிதம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஸ்ரீனிவாஸ்தேவாஆசையில் ஒர் கடிதம்

Aasaiyil Oru Kaditham Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஆசையில் ஒர் கடிதம்…
வரைந்ததே ஒர் இதயம்…
எழுத்தினால் தலை எழுத்தை…
மாற்றியே விதி எழுதும்…

ஆண் : ஓரு மேகம் தூது அனுப்ப…
அது இடியை அங்கு இறக்க…
இது திட்டம் போட்டு செய்த செயல் இல்லை…
விதி வட்டம் தாண்டி வர வழியில்லை…
விதி வட்டம் தாண்டி வர வழியில்லை…
வழியில்லை…

ஆண் : ஆசையில் ஒர் கடிதம்…
வரைந்ததே ஒர் இதயம்…
எழுத்தினால் தலை எழுத்தை…
மாற்றியே விதி எழுதும்…

BGM

ஆண் : குளத்துக்குள்ளே ஒரு கல் எறிந்தேன்…
அலை அடிக்கும் என்று காத்திருந்தேன்…
குளக்கரையே ஒடைய கண்டேன்…
விதியே இது தகுமா…

ஆண் : பூங்கொடியில் ஒரு பூவை கண்டேன்…
பூப்பறிக்க சின்ன முயற்சி செய்தேன்…
கொலை செய்ததாய் கொடி புலம்புவதோ…
சரியோ இது சரியோ…

ஆண் : தவறுகள் மூட்டிய நெருப்பினிலே…
தாலியின் மஞ்சள் கருகுவதோ…

ஆண் : இது திட்டம் போட்டு செய்த செயல் இல்லை…
விதி வட்டம் தாண்டி வர வழியில்லை…
விதி வட்டம் தாண்டி வர வழியில்லை…
வழியில்லை…

ஆண் : ஆசையில் ஒர் கடிதம்…
வரைந்ததே ஒர் இதயம்…
எழுத்தினால் தலை எழுத்தை…
மாற்றியே விதி எழுதும்…

BGM

ஆண் : நதி வலையில் வலி தெரிவதுண்டு…
விதி வலையில் வலி தெரிவதில்லை…
தெரிந்துகொண்டால் அதில் ருசியுமில்லை…
இனிமேல் என்ன கதையோ…

ஆண் : பால் குடத்தில் ஒரு எறும்பு விழ…
பல்லியென்று அதை வெறுப்பதென்ன…
பால் குடமே மண்ணில் கவிழ்ந்ததென்ன…
பிழையோ என்ன பிழையோ…
கண்ணீர் என்னை தண்டிக்குமா…
காலங்கள் நாளை மன்னிக்குமா…

ஆண் : இது திட்டம் போட்டு செய்த செயல் இல்லை…
விதி வட்டம் தாண்டி வர வழியில்லை…
விதி வட்டம் தாண்டி வர வழியில்லை…
வழியில்லை…

ஆண் : ஆசையில் ஒர் கடிதம்…
வரைந்ததே ஒர் இதயம்…
எழுத்தினால் தலை எழுத்தை…
மாற்றியே விதி எழுதும்…

ஆண் : ஓரு மேகம் தூது அனுப்ப…
அது இடியை அங்கு இறக்க…
இது திட்டம் போட்டு செய்த செயல் இல்லை…
விதி வட்டம் தாண்டி வர வழியில்லை…
விதி வட்டம் தாண்டி வர வழியில்லை…
வழியில்லை…

BGM


Notes : Aasaiyil Oru Kaditham Song Lyrics in Tamil. This Song from Aasaiyil Oru Kaditham (1999). Song Lyrics penned by Vairamuthu. ஆசையில் ஒர் கடிதம் பாடல் வரிகள்.