Category Archives: துள்ளாத மனமும் துள்ளும்

Meghamai Vanthu Pogiren Song Lyrics in Tamil

மேகமாய் வந்து போகிறேன்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துராஜேஷ் கிருஷ்ணன்எஸ். ஏ. ராஜ்குமார்துள்ளாத மனமும் துள்ளும்

Meghamai Vanthu Pogiren Song Lyrics in Tamil


BGM

ஆண் : மேகமாய் வந்து போகிறேன்…
வெண்ணிலா உன்னை தேடினேன்…
மேகமாய் வந்து போகிறேன்…
வெண்ணிலா உன்னை தேடினேன்…

ஆண் : யாாிடம் தூது சொல்வது…
என்று நான் உன்னை சோ்வது…
என் அன்பே… என் அன்பே…

ஆண் : மேகமாய் வந்து போகிறேன்…
வெண்ணிலா உன்னை தேடினேன்…

BGM

ஆண் : உறங்காமலே உளறல் வரும்…
இதுதானோ ஆரம்பம்…
அடடா மனம் பறிபோனதே…
அதில்தானோ இன்பம்…

ஆண் : காதல் அழகானதா இல்லை அறிவானதா…
காதல் சுகமானதா இல்லை சுமையானதா…
என் அன்பே… என் அன்பே…

ஆண் : மேகமாய் வந்து போகிறேன்…
வெண்ணிலா உன்னை தேடினேன்…
மேகமாய் வந்து போகிறேன்…
வெண்ணிலா உன்னை தேடினேன்…

BGM

ஆண் : நீ வந்ததும் மழை வந்தது…
நெஞ்செங்கும் ஆனந்தம்…
நீ பேசினால் என் சோலையில்…
எங்கெங்கும் பூவாசம்…

ஆண் : என் காதல் நிலா என்று வாசல் வரும்…
அந்த நாள் வந்துதான் என்னில் சுவாசம் வரும்…
என் அன்பே… என் அன்பே…

ஆண் : மேகமாய் வந்து போகிறேன்…
வெண்ணிலா உன்னை தேடினேன்…
மேகமாய் வந்து போகிறேன்…
வெண்ணிலா உன்னை தேடினேன்…

ஆண் : யாாிடம் தூது சொல்வது…
என்று நான் உன்னை சோ்வது…
என் அன்பே… என் அன்பே…
என் அன்பே… என் அன்பே…


Notes : Meghamai Vanthu Pogiren Song Lyrics in Tamil. This Song from Thullatha Manamum Thullum (1999). Song Lyrics penned by Vairamuthu. மேகமாய் வந்து போகிறேன் பாடல் வரிகள்.


தொடு தொடுவெனவே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஹரிஹரன் & கே.எஸ். சித்ராஎஸ். ஏ. ராஜ்குமார்துள்ளாத மனமும் துள்ளும்

Thodu Thoduveneve Song Lyrics in Tamil


BGM

பெண் : தொடு தொடுவெனவே…
வானவில் என்னை…
தூரத்தில் அழைக்கின்ற நேரம்…

ஆண் : விடு விடுவெனவே…
வாலிப மனது…
விண்வெளி விண்வெளி ஏறும்…

பெண் : மன்னவா ஒரு கோயில் போல்…
இந்த மாளிகை எதற்காக…

ஆண் : தேவியே என் ஜீவனே…
இந்த ஆலயம் உனக்காக…

பெண் : வானில் ஒரு புயல் மழை வந்தால்…
அழகே எனை எங்கனம் காப்பாய்…

ஆண் : கண்ணே உன்னை என் கண்ணில் வைத்து…
இமைகள் எனும் கதவுகள் அடைப்பேன்…

பெண் : சாத்தியமாகுமா…

ஆண் : நான் சத்தியம் செய்யவா…

பெண் : தொடு தொடுவெனவே…
வானவில் என்னை…
தூரத்தில் அழைக்கின்ற நேரம்…

BGM

பெண் : இந்த பூமியே…
தீா்ந்து போய்விடில்…
என்னை எங்கு சோ்ப்பாய்…

ஆண் : நட்சத்திரங்களை…
தூசு தட்டி நான்…
நல்ல வீடு செய்வேன்…

பெண் : நட்சத்திரங்களின் சூட்டில் நான்…
உருகிப்போய்விடில் என் செய்வாய்…

ஆண் : உருகிய துளிகளை ஒன்றாக்கி…
என் உயிா் தந்தே உயிா் தருவேன்…

பெண் : ஹே… ராஜா…
இது மெய்தானா…

ஆண் : ஏ… பெண்ணே தினம் நீ செல்லும்…
பாதையில் முள்ளிருந்தால்…
நான் பாய் விாிப்பேன் என்னை…

பெண் : நான் நம்புகிறேன் உன்னை…
தொடு தொடுவெனவே…
வானவில் என்னை…
தூரத்தில் அழைக்கின்ற நேரம்…

ஆண் : விடு விடுவெனவே…
வாலிப மனது…
விண்வெளி விண்வெளி ஏறும்…

பெண் : நீச்சல் குளம் இருக்கு…
நீரும் இல்லை…
இதில் எங்கு நீச்சலடிக்க…

ஆண் : அத்தா் கொண்டு…
அதை நிரப்ப வேண்டும்…
இந்த அல்லி ராணி குளிக்க…

பெண் : இந்த நியதியில் அன்பு செய்தால்…
என்னவாகுமோ என் பாடு…

ஆண் : காற்று வந்து உன் குழல் கலைத்தால்…
கைது செய்வதென ஏற்பாடு…

பெண் : பெண் நெஞ்சை…
அன்பால் வென்றாய்…

ஆண் : ஹே… ராணி…
அந்த இந்திரலோகத்தில்…
நான் கொண்டு தருவேன்…
நாள் ஒரு பூ வீதம்…

பெண் : உன் அன்பு அது போதும்…

பெண் : தொடு தொடுவெனவே…
வானவில் என்னை…
தூரத்தில் அழைக்கின்ற நேரம்…

ஆண் : விடு விடுவெனவே…
வாலிப மனது…
விண்வெளி விண்வெளி ஏறும்…

பெண் : மன்னவா ஒரு கோயில் போல்…
இந்த மாளிகை எதற்காக…

ஆண் : தேவியே என் ஜீவனே…
இந்த ஆலயம் உனக்காக…

பெண் : வானில் ஒரு புயல் மழை வந்தால்…
அழகே எனை எங்கனம் காப்பாய்…

ஆண் : கண்ணே உன்னை என் கண்ணில் வைத்து…
இமைகள் எனும் கதவுகள் அடைப்பேன்…

பெண் : சாத்தியமாகுமா…

ஆண் : நான் சத்தியம் செய்யவா…

BGM


Notes : Thodu Thoduveneve Song Lyrics in Tamil. This Song from Thullatha Manamum Thullum (1999). Song Lyrics penned by Vairamuthu. தொடு தொடுவெனவே பாடல் வரிகள்.


இருபது கோடி

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஹரிஹரன்எஸ். ஏ. ராஜ்குமார்துள்ளாத மனமும் துள்ளும்

Irupathu Kodi Song Lyrics in Tamil


BGM

ஆண் : இருபது கோடி நிலவுகள் கூடி பெண்மையானதோ…
என் எதிரே வந்து புன்னகை செய்ய கண் கூசுதோ…
இருபது கோடி நிலவுகள் கூடி பெண்மையானதோ…
என் எதிரே வந்து புன்னகை செய்ய கண் கூசுதோ…

ஆண் : குழைகின்ற தங்கங்கள் கன்னங்கள் ஆகாதோ…
நெளிகின்ற வில் ரெண்டு புருவங்கள் ஆகாதோ…

குழு : நூறு கோடி பெண்கள் உண்டு…
உன் போல் யாரும் இல்லையே…
ஆனால் கன்னி உந்தன் கண்கள்…
கண்கள் மட்டும் காணவில்லையே…

ஆண் : ஓஹோ ஓஹோ ஓஹோ ஓஹோ…
ஹே ஹே ஹே ஹே…

ஆண் : இருபது கோடி நிலவுகள் கூடி பெண்மையானதோ…
என் எதிரே வந்து புன்னகை செய்ய கண் கூசுதோ…

BGM

ஆண் : தங்கமான கூந்தல் தாழ்ந்து வந்ததென்ன…
வந்து உந்தன் பாதம் கண்டு வணக்கம் சொல்லவோ…
தேன் மிதக்கும் உதடு சேர்ந்திருப்பதென்ன…
ஒன்றை ஒன்று முத்தமிட்டு இன்பம் கொள்ளவோ…

ஆண் : மானிடப் பிறவி என்னடி மதிப்பு…
உன் கால் விரல் நகமாய் இருப்பது சிறப்பு…

குழு : நூறு கோடி பெண்கள் உண்டு…
உன் போல் யாரும் இல்லையே…
ஆனால் கன்னி உந்தன் கண்கள்…
கண்கள் மட்டும் காணவில்லையே…

ஆண் : ஓஹோ ஓஹோ ஓஹோ ஓஹோ…

ஆண் : இருபது கோடி நிலவுகள் கூடி பெண்மையானதோ…
என் எதிரே வந்து புன்னகை செய்ய கண் கூசுதோ…

BGM

ஆண் : ஜூலை மாதம் பூக்கும்…
கொன்றைப் பூக்கள் போல…
சேலை கொண்ட பெண்ணின் அங்கம் தோற்றம் காட்டுதே…

ஆண் : தாஜ்மகாலின் வண்ணம் மாறக்கூடும் பெண்ணே…
மின்னும் உந்தன் கன்னம் இன்னும் வண்ணம் கூடுதே…

ஆண் : நிறமுள்ள மலர்கள் சோலைக்கு பெருமை…
நீ உள்ள ஊரில் வசிப்பது பெருமை…

குழு : நூறு கோடி பெண்கள் உண்டு…
உன் போல் யாரும் இல்லையே…
ஆனால் கன்னி உந்தன் கண்கள்…
கண்கள் மட்டும் காணவில்லையே…

ஆண் : ஓஹோ ஓஹோ ஓஹோ ஓஹோ…

ஆண் : இருபது கோடி நிலவுகள் கூடி பெண்மையானதோ…
என் எதிரே வந்து புன்னகை செய்ய கண் கூசுதோ…
குழைகின்ற தங்கங்கள் கன்னங்கள் ஆகாதோ…
நெளிகின்ற வில் ரெண்டு புருவங்கள் ஆகாதோ…

குழு : நூறு கோடி பெண்கள் உண்டு…
உன் போல் யாரும் இல்லையே…
ஆனால் கன்னி உந்தன் கண்கள்…
கண்கள் மட்டும் காணவில்லையே…

BGM


Notes : Irupathu Kodi Song Lyrics in Tamil. This Song from Thulladha Manamum Thullum (1999). Song Lyrics penned by Vairamuthu. இருபது கோடி பாடல் வரிகள்.


இன்னிசை பாடிவரும்

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துபி. உன்னிகிருஷ்ணன்எஸ். ஏ. ராஜ்குமார்துள்ளாத மனமும் துள்ளும்

Innisai Paadivarum Song Lyrics in Tamil


BGM

ஆண் : இன்னிசை பாடிவரும்…
இளம் காற்றுக்கு உருவமில்லை…
காற்றலை இல்லையென்றால்…
ஒரு பாட்டொலி கேட்பதில்லை…

ஆண் : ஒரு கானம் வருகையில்…
உள்ளம் கொள்ளை போகுதே…
ஆனால் காற்றின் முகவரி…
கண்கள்அறிவதில்லையே…

ஆண் : இந்த வாழ்க்கையே ஒரு தேடல்தான்…
அதை தேடித் தேடி தேடும் மனது தொலைகிறதே…

ஆண் : இன்னிசை பாடிவரும்…
இளம் காற்றுக்கு உருவமில்லை…
காற்றலை இல்லையென்றால்…
ஒரு பாட்டொலி கேட்பதில்லை…

BGM

ஆண் : கண் இல்லையென்றாலோ…
நிறம் பார்க்கமுடியாது…
நிறம் பார்க்கும் உன் கண்ணை…
நீ பார்க்கமுடியாது…

ஆண் : குயிலிசை போதுமே…
அட குயில் முகம் தேவையா…
உணா்வுகள் போதுமே…
அதன் உருவம் தேவையா…

ஆண் : கண்ணில் காட்சி தோன்றிவிட்டால்…
கற்பனை தீா்ந்துவிடும்…
கண்ணில் தோன்றா காட்சியில்தான்…
கற்பனை வளா்ந்துவிடும்…
அட பாடல் போல தேடல் கூட ஒரு சுகமே…

ஆண் : இன்னிசை பாடிவரும்…
இளம் காற்றுக்கு உருவமில்லை…
காற்றலை இல்லையென்றால்…
ஒரு பாட்டொலி கேட்பதில்லை…

BGM

ஆண் : உயிர் ஒன்று இல்லாமல்…
உடல் இங்கு நிலையாதே…
உயிர் என்ன பொருள் என்று…
அலைபாய்ந்து திரியாதே…

ஆண் : வாழ்க்கையின் வோ்களோ…
மிக ரகசியமானது…
ரகசியம் காண்பதே…
நம் அவசியமானது…

ஆண் : தேடல் உள்ள உயிர்களுக்கே…
தினமும் பசியிருக்கும்…
தேடல் என்பது உள்ளவரை…
வாழ்வில் ருசியிருக்கும்…
அட பாடல் போல தேடல் கூட ஒரு சுகமே…

ஆண் : இன்னிசை பாடிவரும்…
இளம் காற்றுக்கு உருவமில்லை…
காற்றலை இல்லையென்றால்…
ஒரு பாட்டொலி கேட்பதில்லை…

ஆண் : ஒரு கானம் வருகையில்…
உள்ளம் கொள்ளை போகுதே…
ஆனால் காற்றின் முகவரி…
கண்கள் அறிவதில்லையே…

ஆண் : இந்த வாழ்க்கையே ஒரு தேடல்தான்…
அதை தேடித் தேடி தேடும் மனது தொலைகிறதே…

ஆண் : இன்னிசை பாடிவரும்…
இளம் காற்றுக்கு உருவமில்லை…
காற்றலை இல்லையென்றால்…
ஒரு பாட்டொலி கேட்பதில்லை…

BGM


Notes : Innisai Paadivarum Song Lyrics in Tamil. This Song from Thullatha Manamum Thullum (1999). Song Lyrics penned by Vairamuthu. இன்னிசை பாடிவரும் பாடல் வரிகள்.