Category Archives: தெய்வவாக்கு

கத்துதடி ராக்கோழி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்இளையராஜாஇளையராஜாதெய்வவாக்கு

Katthuthadi Raakkozhi Song Lyrics in Tamil


BGM

குழு : தந்தன தன்னா தானா…
தந்தன தன்னா தானா தானா…
தந்தனா தந்தனா தான தந்தனா…
தான தான தான தான தந்தனா…

BGM

ஆண் : கத்துதடி ராக்கோழி…
தூக்கத்த விட்டு சுத்துதடி ஆத்தாடி…

குழு : கத்துதடி ராக்கோழி…
தூக்கத்த விட்டு சுத்துதடி ஆத்தாடி…

ஆண் : ஹேஹேஹே ருக்குமணி…
குழு : ஆச்சி ஆச்சி…
ஆண் : பத்து மணி…
குழு : ஆச்சு ஆச்சு…

ஆண் : ஊருக்குள்ள…
குழு : காச்சு மூச்சு…
ஆண் : சத்தம் எல்லாம்…
குழு : போச்சு போச்சு…
ஆண் : எங்க வரைக்கும் இதுதான் பகல் நேரம்…

ஆண் : கத்துதடி ராக்கோழி…
தூக்கத்த விட்டு சுத்துதடி ஆத்தாடி… பாடு…

குழு : கத்துதடி ராக்கோழி…
தூக்கத்த விட்டு சுத்துதடி ஆத்தாடி…

BGM

ஆண் : இந்த வீட்டுக்கு வந்த ஜோலி என்ன…
சும்மா வந்த வீட்டுக்கு கொடக்கூலி என்ன…

ஆண் : வீடு வாசல் பிள்ள குட்டி ஏன்டா டோய்…
இந்த வம்பு தும்பு எங்களுக்கு வேண்டா டோய்…

குழு : தென்னடிச்சு ஆச்சிக் கட போண்டா டோய்…
அது ஓசியில ரொம்ப ருசிதான்டா டோய்…

ஆண் : எந்தப் பக்கம் வேணும்னாலும்…
குழு : போவோம்…
ஆண் : நாம இப்படியும் எப்படியும்…
குழு : வாழ்வோம்…

குழு : நாங்க ராக்கோழி இளம் பெருச்சாளி…
ஆண் : தரன்னான்னா தரனனன்னா ஹா…

குழு : கத்துதடி ராக்கோழி…
தூக்கத்த விட்டு சுத்துதடி ஆத்தாடி…
கத்துதடி ராக்கோழி…
தூக்கத்த விட்டு சுத்துதடி ஆத்தாடி…

BGM

ஆண் : கோயில் காளைக்கு ஒரு பட்டி என்ன…
எங்க அப்பன் சொத்துக்கு ஒரு வட்டி என்ன…

ஆண் : வந்த வர லாபத்துல வச்சுக்கோடா…
இல்ல வம்பிழுத்து மண்டையத்தான் பிச்சிக்கோடா…

குழு : வம்பு தும்பு வேணாமுன்னா ஒத்துப் போடா…
சட்ட பிஞ்சு போனா ஊசி வச்சு தெச்சுக்கோடா…

ஆண் : நம்ம இங்கு தட்டிக் கேக்க…
குழு : யாரு…
ஆண் : நாம சொன்ன படி ஆட வேணும்…
குழு : ஊரு…

குழு : நாங்க ராக்கோழி இளம் பெருச்சாளி…
ஆண் : தரன்னான்னா தரனனன்னா ஹா…

ஆண் : கத்துதடி ராக்கோழி…
தூக்கத்த விட்டு சுத்துதடி ஆத்தாடி…

குழு : கத்துதடி ராக்கோழி…
தூக்கத்த விட்டு சுத்துதடி ஆத்தாடி…

ஆண் : ஹே ருக்குமணி…
குழு : ஆச்சி ஆச்சி…
ஆண் : பத்து மணி…
குழு : ஆச்சு ஆச்சு…

ஆண் : ஊருக்குள்ள…
குழு : காச்சு மூச்சு…
ஆண் : சத்தம் எல்லாம்…
குழு : போச்சு போச்சு…
ஆண் : எங்க வரைக்கும் இதுதான் பகல் நேரம்…

ஆண் : கத்துதடி ராக்கோழி…
தூக்கத்த விட்டு சுத்துதடி ஆத்தாடி… பாடு…

குழு : கத்துதடி ராக்கோழி…
தூக்கத்த விட்டு சுத்துதடி ஆத்தாடி…

BGM


Notes : Katthuthadi Raakkozhi Song Lyrics in Tamil. This Song from Deiva Vaakku (1992). Song Lyrics penned by Gangai Amaran. கத்துதடி ராக்கோழி பாடல் வரிகள்.


இந்த அம்மனுக்கு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஇளையராஜாஇளையராஜாதெய்வவாக்கு

Indha Ammanukku Song Lyrics in Tamil


ஆண் : ஐலேசா ஐலேஐலே ஐலேஐலே ஸாஸா…
குழு : ஐலேசா ஐலேஐலே ஐலேஐலே ஸாஸா…
ஆண் : ஐலேசா பபாபபா ஸரிகமபா…
குழு : ஐலேசா பபாபபா ஸரிகமபா…

ஆண் : ஐலேசா…
குழு : ஐலேஐலே…
ஆண் : ஐலேசா…
குழு : ஐலேஐலே…
ஆண் : ஐலேசா…
குழு : ஐலே ஐலே ஸாஸா…

ஆண் : இந்த அம்மனுக்கு எந்த ஊரு…
கேட்டுக் கொஞ்சம் கூறு…
தெய்வ வாக்கு இப்போ இங்கே…
என்ன சொல்லுதுன்னு பாரு…

குழு : இந்த அம்மனுக்கு எந்த ஊரு…
கேட்டுக் கொஞ்சம் கூறு…
தெய்வ வாக்கு இப்போ இங்கே…
என்ன சொல்லுதுன்னு பாரு…

ஆண் : எல்லோருக்கும்தான் வாக்குச் சொல்லுது…
க்யூவுல நம்ம காக்கச் சொல்லுது…
இப்போ என்னத்தச் சொல்லுது கேளு…

ஆண் : இந்த அம்மனுக்கு எந்த ஊரு…
கேட்டுக் கொஞ்சம் கூறு…
தெய்வ வாக்கு இப்போ இங்கே…
என்ன சொல்லுதுன்னு பாரு…

குழு : இந்த அம்மனுக்கு எந்த ஊரு…
கேட்டுக் கொஞ்சம் கூறு…
தெய்வ வாக்கு இப்போ இங்கே…
என்ன சொல்லுதுன்னு பாரு…

BGM

ஆண் : ஊருக்குள்ள பக்தி வெள்ளம் ததும்பித் ததும்பி…
அலைகள் எழுந்து விளையாடுதே…
ததரினனோம்… ஓஓஓஓஒ…
குழு : ஹே ஓ ஹே ஓஒ…

ஆண் : ஊருக்குள்ள பக்தி வெள்ளம் ததும்பித் ததும்பி…
அலைகள் எழுந்து விளையாடுதே…
நாப்பத்தெட்டு நாள் கணக்கில் விரதம் இருந்து…
ஜனங்கள் யோக நிலை தேடுதே…

ஆண் : கற்பூரம் காட்டுது…
கன்னத்தில் போடுது…
குழு : அடடா…

ஆண் : காவிய கட்டிட்டு…
சாமியா ஆகுதடா…

ஆண் : பக்தினா பக்திதான் கொட்டுது கொட்டுது…
குழு : அடடா…
ஆண் : புடிச்சுக்கோ புடிச்சுக்கோ…
பக்கெட்ட கொண்டாங்கடா…

ஆண் : நம்ம ஊருக்கு ஏத்த அம்மன்தான்…
அப்பப்பா ரொம்பப்பா தேவப்பா…

ஆண் : இந்த அம்மனுக்கு…
குழு : எந்த ஊரு கேட்டுக் கொஞ்சம் கூறு…
ஆண் : தெய்வ வாக்கு இப்போ…
குழு : இங்கே என்ன சொல்லுதுன்னு பாரு…

BGM

ஆண் : அட ஆத்து மேடும் கொளத்து மேடும்…
வண்டிய இழுத்து இடுப்பு புடிச்சு மூச்சு வாங்குதே…
ஆத்தாளோட சக்தியில அரைக்காலும் முக்காலு…
நமக்கும் கேட்டு கொஞ்சம் வாங்குடா…

ஆண் : எப்பப்போ எங்கெங்கே என்னென்ன நடக்கும்…
குழு : அடடா…
ஆண் : அக்காலம் இக்காலம் முக்காலம் சொல்லும்மடா…

ஆண் : தப்புன்னா தண்டிக்கும் திருந்திக்கோ மன்னிக்கும்…
குழு : அடடா…
ஆண் : கப்புன்னு வேண்டிட்டு வரங்கள வாங்கிக்கடா…

ஆண் : அம்மன் தேருக்கு…
குழு : வடம் புடிச்சோம்…
ஆண் : அப்பப்பா வந்தாச்சு எல்லப்பா…

ஆண் : இந்த அம்மனுக்கு…
குழு : எந்த ஊரு கேட்டுக் கொஞ்சம் கூறு…
ஆண் : தெய்வ வாக்கு இப்போ…
குழு : இங்கே என்ன சொல்லுதுன்னு பாரு…

ஆண் : எல்லோருக்கும்தான் வாக்குச் சொல்லுது…
க்யூவுல நம்ம காக்கச் சொல்லுது…
இப்போ என்னத்தச் சொல்லுது கேளு…

ஆண் : இந்த அம்மனுக்கு எந்த ஊரு…
கேட்டுக் கொஞ்சம் கூறு…
தெய்வ வாக்கு இப்போ இங்கே…
என்ன சொல்லுதுன்னு பாரு…

குழு : இந்த அம்மனுக்கு எந்த ஊரு…
கேட்டுக் கொஞ்சம் கூறு…
தெய்வ வாக்கு இப்போ இங்கே…
என்ன சொல்லுதுன்னு பாரு…

BGM


Notes : Indha Ammanukku Song Lyrics in Tamil. This Song from Deiva Vaakku (1992). Song Lyrics penned by Vaali. இந்த அம்மனுக்கு பாடல் வரிகள்.


Oru Paatale Solli Song Lyrics in Tamil

ஒரு பாட்டாலே சொல்லி அணைச்சேன்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ். பி. பாலசுப்ரமணியம்இளையராஜாதெய்வவாக்கு

Oru Paatale Solli Song Lyrics in Tamil


ஆண் : நான் பெத்தெடுத்திடாத முத்து மணித் தேரே…
நான் தத்தெடுத்திடாத தங்கமணிச் சீரே…
ஒரு சொந்தமிருந்தும் பந்தமிருந்தும்…
சொல்லவில்லையே…

ஆண் : அடி கண்ணே தூங்காதே…
சிறு பெண்ணே கலங்காதே…

BGM

ஆண் : ஒரு பாட்டாலே சொல்லி அழைச்சேன்…
ஒரு பலன் கேட்டு கண்ணு முழிச்சேன்…
அடி ஆத்தாடி ஒன்ன நெனச்சேன்…
ஒரு அன்பாலே மெட்டு படிச்சேன்…

ஆண் : உன் சோகம் பறக்க…
என் பாட்டு விருந்து…
அத கேட்டு மறந்தா…
என் பாட்டு மருந்து…

ஆண் : நீ கூட இருந்தா…
அது போதும் எனக்கு…
வாடி இருந்தா துன்பம் எனக்கு…

ஆண் : ஒரு பாட்டாலே சொல்லி அழைச்சேன்…
ஒரு பலன் கேட்டு கண்ணு முழிச்சேன்…

BGM

ஆண் : நான் ஆதாரம் இல்லா அந்தரத்து வானம்…
என் நாவோடு சேரும் நாட்டுப்புற கானம்…

ஆண் : என் சொந்தக் கதைய சொல்லிப் படிக்க…
சந்தமில்லையே…
அத சொன்னா ஆறாது…
என் சொந்தம் மாறாது…

ஆண் : நான் தாயாரப் பாத்ததும் உண்டு…
ஆனா தாயின்னு சொல்லவும் இல்ல…
தெனம் பாலூட்டி என்ன வளத்த…
பரிவான சொந்தமும் இல்ல…

ஆண் : இந்த ஊரு முழுக்க…
என் பந்த ஜனங்க…
உண்மை இருக்கும்…
வெள்ளை மனங்க…

ஆண் : ஒரு காவல் இருக்கு…
என் கை வணங்க…
நான் கானம் படிச்சேன்…
கண்ண தொறக்க…

ஆண் : நான் தாயாரப் பாத்ததும் உண்டு…
ஆனா தாயின்னு சொல்லவும் இல்ல…

BGM

ஆண் : ஒரு ஈ எறும்பு கடிச்சாலும்…
தாய் மனசு நோகும்…
நீ பாய் விரிச்சு படுத்தாலே…
இப்ப என்ன ஆகும்…

ஆண் : ஒன்ன அள்ளி எடுத்து ஊட்டி வளத்து…
காத்துக் கிடந்தா…
அந்த தாயோட மொகம் பாரு…
கண்ணு ஒரு நாளும் ஒறங்காது…

ஆண் : நான் பாடாத பாட்டுகள் இல்ல…
அத கேட்காத ஆட்களும் இல்ல…
நான் நாவாரப் பாடி அழைச்சா…
வந்து பாக்காத பார்வையும் இல்ல…

ஆண் : என் தாயி கொடுத்த…
ஒரு சக்தி இருக்கு…
உன்ன தட்டி எழுப்ப…
புத்தி இருக்கு…

ஆண் : உன்ன தாவி அணைக்க…
ஒரு நேரம் இருக்கு…
அந்த நேரம் வரைக்கும்…
பாரம் எனக்கு…

ஆண் : நான் பாடாத பாட்டுகள் இல்ல…
அத கேட்காத ஆட்களும் இல்ல…

BGM


Notes : Oru Paatale Solli Song Lyrics in Tamil. This Song from Deiva Vaakku (1992). Song Lyrics penned by Vaali. ஒரு பாட்டாலே சொல்லி அணைச்சேன் பாடல் வரிகள்.


ஊரெல்லாம் சாமியாக

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்பி. ஜெயச்சந்திரன் & எஸ். ஜானகிஇளையராஜாதெய்வவாக்கு

Oorellam samiyaga Song Lyrics in Tamil


ஆண் : ஊரெல்லாம் சாமியாக பார்க்கும் உன்னை…
ஒரு தாரம் என்று நானும் எண்ணலாமோ…

BGM

ஆண் : ஊரெல்லாம் சாமியாக பார்க்கும் உன்னை…
ஒரு தாரம் என்று நானும் எண்ணலாமோ…
வண்ணக்கிளியே சொல்லு கிளியே…
ஓ… ஓஓ… வண்ணக்கிளியே சொல்லு கிளியே…

பெண் : ஊரெல்லாம் சாமியாக பார்க்கும் என்னை…
ஒரு பெண்தான் என்று நீயும் எண்ணலாமே…
வண்ணக்கிளியே சொல்லு கிளியே…
ஓ… ஓஓ… வண்ணக்கிளியே சொல்லு கிளியே…

BGM

ஆண் : தெய்வம் வரும் மனித உருவிலே…
படித்ததுண்டு ஏட்டிலே…
தெய்வம் என்று தெரிந்த போதிலே…
பூட்டலாமோ வீட்டிலே…

ஆண் : பூஜை செய்யும் தேவி உன்மேல்…
ஆசை வைத்தால் பாவம்…
நானும் உன்னை தாரம் என்று…
ஏற்றுக் கொண்டால் துரோகம்…

ஆண் : ஜீவன் உள்ள வான் நிலாவை…
நானும் சேரக் கூடுமோ…
பாவம் இந்த பாவம் என்று…
காலம் என்னை தூற்றுமோ…

பெண் : ஊரெல்லாம் சாமியாக பார்க்கும் என்னை…
ஒரு பெண்தான் என்று நீயும் எண்ணலாமே…
வண்ணக்கிளியே சொல்லு கிளியே…
ஓ… ஓஓ… வண்ணக்கிளியே சொல்லு கிளியே…

BGM

பெண் : தெய்வம் கண நேரம் என் மேல்…
வந்து பேசி போகுது…
வந்து பேசி போவதால் நான்…
தெய்வம் ஆக கூடுமோ…

பெண் : ஊரில் உள்ள பேருக்கெல்லாம்…
வாக்கு சொன்ன பாவை…
உன்னிடத்தில் கேட்டு நின்றாள்…
வார்த்தை ஒன்று தேவை…

பெண் : என்னை தெய்வம் என்றால்…
எந்தன் வாக்கும் தெய்வ வாக்குதான்…
தெய்வ வாக்கை ஏற்றுக் கொண்டு…
வாழ்க்கை ஒன்றை நீ கொடு…

BGM


Notes : Oorellam samiyaga Song Lyrics in Tamil. This Song from Deiva Vaakku (1992). Song Lyrics penned by Gangai Amaran. ஊரெல்லாம் சாமியாக பாடல் வரிகள்.


வள்ளி வள்ளி என வந்தான்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஇளையராஜா & எஸ். ஜானகிஇளையராஜாதெய்வவாக்கு

Valli Valli Ena Vanthan Song Lyrics in Tamil


BGM

ஆண் : வள்ளி வள்ளி என வந்தான்…
வடிவேலன்தான்…
புள்ளி வைத்து புள்ளி போட்டான்…
புது கோலம்தான்…

ஆண் : சொல்லி தர சொல்லி கேட்டு…
தினமும் சொல்லி தந்த சிந்து பாடினான்…
வள்ளி இன்ப வள்ளி என்று…
தினமும்முல்லை சரம் கொண்டு சூடினான்…

பெண் : வள்ளி வள்ளி என வந்தான்…
வடிவேலன்தான்… ஓ…
புள்ளி வைத்து புள்ளி போட்டான்…
புது கோலம்தான்…

BGM

ஆண் : சொல்லால் சொல்லாதது…
காதல் சுகம் சொல்லில் நில்லாதது…

பெண் : கண்ணால் உண்டானது…
கைகள் தொட இந்நாள் ஒன்றானது…

ஆண் : வண்ணப்பூ வஞ்சிப்பூ…
வாய் வெடித்த வாசப்பூ…
அன்புதேன் இன்பதேன் கொட்டுமா…

பெண் : இந்த பூ சின்ன பூ…
கன்னிப் போகும் கன்னிப்பூ…
வண்டுதான் வந்துதான் தட்டுமா…

ஆண் : என்னை மீண்டும் கொஞ்சத்தூண்டும்…
நாணல் போல தேகம் தன்னில்…
நாணம் என்னமா…

பெண் : வள்ளி வள்ளி என வந்தான்…
வடிவேலன்தான்…
புள்ளி வைத்து புள்ளி போட்டான்…
புது கோலம்தான்…

பெண் : சொல்லி தர சொல்லி கேட்டு… …
தினமும் சொல்லி தந்த சிந்து பாடினான்
வள்ளி இன்ப வள்ளி என்று…
தினமும் முல்லை சரம் கொண்டு சூடினான்…

ஆண் : வள்ளி வள்ளி என வந்தான்…
வடிவேலன்தான்…
புள்ளி வைத்து புள்ளி போட்டான்…
புது கோலம்தான்…

BGM

பெண் : வந்தாள் புல்லாங்குழல்…
வாங்கியதை ஏந்தும் மன்னன் விரல்…

ஆண் : மன்னன் சொல்லும் கவி…
மங்கைக்கது காதல் நீலாம்பரி…

பெண் : அம்மம்மா அப்பப்பா…
இன்பம் தரும் பானங்கள்…
என்றைக்கும் இன்றைக்கும் தித்திக்கும்…

ஆண் : மங்கை நீ கங்கை நீ…
வெண்ணிலவின் தங்கை நீ…
உன்னைதான் என் கண்கள் சந்திக்கும்…

பெண் : எந்தன் ஜீவன் கொஞ்சும் தேவன்…
உன்னையன்றி வேற இங்கு…
யாரும் இல்லையே…

ஆண் : வள்ளி வள்ளி என வந்தான்…
வடிவேலன்தான்…
புள்ளி வைத்து புள்ளி போட்டான்…
புது கோலம்தான்…

ஆண் : சொல்லி தர சொல்லி கேட்டு…
தினமும் சொல்லி தந்த சிந்து பாடினான்…
வள்ளி இன்ப வள்ளி என்று…
தினமும் முல்லை சரம் கொண்டு சூடினான்…

பெண் : வள்ளி வள்ளி என வந்தான்…
வடிவேலன்தான்… ஓ…
புள்ளி வைத்து புள்ளி போட்டான்…
புது கோலம்தான்…

பெண் : சொல்லி தர சொல்லி கேட்டு…
தினமும் சொல்லி தந்த சிந்து பாடினான்…
வள்ளி இன்ப வள்ளி என்று…
தினமும் முல்லை சரம் கொண்டு சூடினான்…

ஆண் : வள்ளி வள்ளி என வந்தான்…
வடிவேலன்தான்…

பெண் : புள்ளி வைத்து புள்ளி போட்டான்…
புது கோலம்தான்…


Notes : Valli Valli Ena Vanthan Song Lyrics in Tamil. This Song from Deiva Vaakku (1992). Song Lyrics penned by Vaali. வள்ளி வள்ளி என வந்தான் பாடல் வரிகள்.