பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
வாலி | எஸ். பி. பாலசுப்ரமணியம் | இளையராஜா | தெய்வவாக்கு |
Oru Paatale Solli Song Lyrics in Tamil
ஆண் : நான் பெத்தெடுத்திடாத முத்து மணித் தேரே…
நான் தத்தெடுத்திடாத தங்கமணிச் சீரே…
ஒரு சொந்தமிருந்தும் பந்தமிருந்தும்…
சொல்லவில்லையே…
ஆண் : அடி கண்ணே தூங்காதே…
சிறு பெண்ணே கலங்காதே…
—BGM—
ஆண் : ஒரு பாட்டாலே சொல்லி அழைச்சேன்…
ஒரு பலன் கேட்டு கண்ணு முழிச்சேன்…
அடி ஆத்தாடி ஒன்ன நெனச்சேன்…
ஒரு அன்பாலே மெட்டு படிச்சேன்…
ஆண் : உன் சோகம் பறக்க…
என் பாட்டு விருந்து…
அத கேட்டு மறந்தா…
என் பாட்டு மருந்து…
ஆண் : நீ கூட இருந்தா…
அது போதும் எனக்கு…
வாடி இருந்தா துன்பம் எனக்கு…
ஆண் : ஒரு பாட்டாலே சொல்லி அழைச்சேன்…
ஒரு பலன் கேட்டு கண்ணு முழிச்சேன்…
—BGM—
ஆண் : நான் ஆதாரம் இல்லா அந்தரத்து வானம்…
என் நாவோடு சேரும் நாட்டுப்புற கானம்…
ஆண் : என் சொந்தக் கதைய சொல்லிப் படிக்க…
சந்தமில்லையே…
அத சொன்னா ஆறாது…
என் சொந்தம் மாறாது…
ஆண் : நான் தாயாரப் பாத்ததும் உண்டு…
ஆனா தாயின்னு சொல்லவும் இல்ல…
தெனம் பாலூட்டி என்ன வளத்த…
பரிவான சொந்தமும் இல்ல…
ஆண் : இந்த ஊரு முழுக்க…
என் பந்த ஜனங்க…
உண்மை இருக்கும்…
வெள்ளை மனங்க…
ஆண் : ஒரு காவல் இருக்கு…
என் கை வணங்க…
நான் கானம் படிச்சேன்…
கண்ண தொறக்க…
ஆண் : நான் தாயாரப் பாத்ததும் உண்டு…
ஆனா தாயின்னு சொல்லவும் இல்ல…
—BGM—
ஆண் : ஒரு ஈ எறும்பு கடிச்சாலும்…
தாய் மனசு நோகும்…
நீ பாய் விரிச்சு படுத்தாலே…
இப்ப என்ன ஆகும்…
ஆண் : ஒன்ன அள்ளி எடுத்து ஊட்டி வளத்து…
காத்துக் கிடந்தா…
அந்த தாயோட மொகம் பாரு…
கண்ணு ஒரு நாளும் ஒறங்காது…
ஆண் : நான் பாடாத பாட்டுகள் இல்ல…
அத கேட்காத ஆட்களும் இல்ல…
நான் நாவாரப் பாடி அழைச்சா…
வந்து பாக்காத பார்வையும் இல்ல…
ஆண் : என் தாயி கொடுத்த…
ஒரு சக்தி இருக்கு…
உன்ன தட்டி எழுப்ப…
புத்தி இருக்கு…
ஆண் : உன்ன தாவி அணைக்க…
ஒரு நேரம் இருக்கு…
அந்த நேரம் வரைக்கும்…
பாரம் எனக்கு…
ஆண் : நான் பாடாத பாட்டுகள் இல்ல…
அத கேட்காத ஆட்களும் இல்ல…
—BGM—
Notes : Oru Paatale Solli Song Lyrics in Tamil. This Song from Deiva Vaakku (1992). Song Lyrics penned by Vaali. ஒரு பாட்டாலே சொல்லி அணைச்சேன் பாடல் வரிகள்.