ஊரெல்லாம் சாமியாக

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்பி. ஜெயச்சந்திரன் & எஸ். ஜானகிஇளையராஜாதெய்வவாக்கு

Oorellam samiyaga Song Lyrics in Tamil


ஆண் : ஊரெல்லாம் சாமியாக பார்க்கும் உன்னை…
ஒரு தாரம் என்று நானும் எண்ணலாமோ…

BGM

ஆண் : ஊரெல்லாம் சாமியாக பார்க்கும் உன்னை…
ஒரு தாரம் என்று நானும் எண்ணலாமோ…
வண்ணக்கிளியே சொல்லு கிளியே…
ஓ… ஓஓ… வண்ணக்கிளியே சொல்லு கிளியே…

பெண் : ஊரெல்லாம் சாமியாக பார்க்கும் என்னை…
ஒரு பெண்தான் என்று நீயும் எண்ணலாமே…
வண்ணக்கிளியே சொல்லு கிளியே…
ஓ… ஓஓ… வண்ணக்கிளியே சொல்லு கிளியே…

BGM

ஆண் : தெய்வம் வரும் மனித உருவிலே…
படித்ததுண்டு ஏட்டிலே…
தெய்வம் என்று தெரிந்த போதிலே…
பூட்டலாமோ வீட்டிலே…

ஆண் : பூஜை செய்யும் தேவி உன்மேல்…
ஆசை வைத்தால் பாவம்…
நானும் உன்னை தாரம் என்று…
ஏற்றுக் கொண்டால் துரோகம்…

ஆண் : ஜீவன் உள்ள வான் நிலாவை…
நானும் சேரக் கூடுமோ…
பாவம் இந்த பாவம் என்று…
காலம் என்னை தூற்றுமோ…

பெண் : ஊரெல்லாம் சாமியாக பார்க்கும் என்னை…
ஒரு பெண்தான் என்று நீயும் எண்ணலாமே…
வண்ணக்கிளியே சொல்லு கிளியே…
ஓ… ஓஓ… வண்ணக்கிளியே சொல்லு கிளியே…

BGM

பெண் : தெய்வம் கண நேரம் என் மேல்…
வந்து பேசி போகுது…
வந்து பேசி போவதால் நான்…
தெய்வம் ஆக கூடுமோ…

பெண் : ஊரில் உள்ள பேருக்கெல்லாம்…
வாக்கு சொன்ன பாவை…
உன்னிடத்தில் கேட்டு நின்றாள்…
வார்த்தை ஒன்று தேவை…

பெண் : என்னை தெய்வம் என்றால்…
எந்தன் வாக்கும் தெய்வ வாக்குதான்…
தெய்வ வாக்கை ஏற்றுக் கொண்டு…
வாழ்க்கை ஒன்றை நீ கொடு…

BGM


Notes : Oorellam samiyaga Song Lyrics in Tamil. This Song from Deiva Vaakku (1992). Song Lyrics penned by Gangai Amaran. ஊரெல்லாம் சாமியாக பாடல் வரிகள்.


Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Scroll to Top