பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
கங்கை அமரன் | பி. ஜெயச்சந்திரன் & எஸ். ஜானகி | இளையராஜா | தெய்வவாக்கு |
Oorellam samiyaga Song Lyrics in Tamil
ஆண் : ஊரெல்லாம் சாமியாக பார்க்கும் உன்னை…
ஒரு தாரம் என்று நானும் எண்ணலாமோ…
—BGM—
ஆண் : ஊரெல்லாம் சாமியாக பார்க்கும் உன்னை…
ஒரு தாரம் என்று நானும் எண்ணலாமோ…
வண்ணக்கிளியே சொல்லு கிளியே…
ஓ… ஓஓ… வண்ணக்கிளியே சொல்லு கிளியே…
பெண் : ஊரெல்லாம் சாமியாக பார்க்கும் என்னை…
ஒரு பெண்தான் என்று நீயும் எண்ணலாமே…
வண்ணக்கிளியே சொல்லு கிளியே…
ஓ… ஓஓ… வண்ணக்கிளியே சொல்லு கிளியே…
—BGM—
ஆண் : தெய்வம் வரும் மனித உருவிலே…
படித்ததுண்டு ஏட்டிலே…
தெய்வம் என்று தெரிந்த போதிலே…
பூட்டலாமோ வீட்டிலே…
ஆண் : பூஜை செய்யும் தேவி உன்மேல்…
ஆசை வைத்தால் பாவம்…
நானும் உன்னை தாரம் என்று…
ஏற்றுக் கொண்டால் துரோகம்…
ஆண் : ஜீவன் உள்ள வான் நிலாவை…
நானும் சேரக் கூடுமோ…
பாவம் இந்த பாவம் என்று…
காலம் என்னை தூற்றுமோ…
பெண் : ஊரெல்லாம் சாமியாக பார்க்கும் என்னை…
ஒரு பெண்தான் என்று நீயும் எண்ணலாமே…
வண்ணக்கிளியே சொல்லு கிளியே…
ஓ… ஓஓ… வண்ணக்கிளியே சொல்லு கிளியே…
—BGM—
பெண் : தெய்வம் கண நேரம் என் மேல்…
வந்து பேசி போகுது…
வந்து பேசி போவதால் நான்…
தெய்வம் ஆக கூடுமோ…
பெண் : ஊரில் உள்ள பேருக்கெல்லாம்…
வாக்கு சொன்ன பாவை…
உன்னிடத்தில் கேட்டு நின்றாள்…
வார்த்தை ஒன்று தேவை…
பெண் : என்னை தெய்வம் என்றால்…
எந்தன் வாக்கும் தெய்வ வாக்குதான்…
தெய்வ வாக்கை ஏற்றுக் கொண்டு…
வாழ்க்கை ஒன்றை நீ கொடு…
—BGM—
Notes : Oorellam samiyaga Song Lyrics in Tamil. This Song from Deiva Vaakku (1992). Song Lyrics penned by Gangai Amaran. ஊரெல்லாம் சாமியாக பாடல் வரிகள்.