பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
கங்கை அமரன் | கங்கை அமரன் & கே. எஸ். சித்ரா | இளையராஜா | நீதானா அந்தக்குயில் |
Poojaikkaetha Poovidhu Song Lyrics in Tamil
—BGM—
பெண் : பூஜைக்கேத்த பூவிது…
நேத்துத்தான பூத்தது…
பூத்தது யாரத பாத்தது…
ஆண் : மேல போட்ட தாவணி…
சேலையாகிப் போனது…
பெண் : சேலையிழுத்து விடுவதே…
வேலையாகிப் போனது…
ஆண் : கொக்கு ஒன்னு கொக்கி போடுது… ஹோய்…
பெண் : பூஜைக்கேத்த பூவிது…
நேத்துத்தான பூத்தது…
பூத்தது யாரத பாத்தது…
—BGM—
ஆண் : பாவாடை கட்டயில பாத்தேனே மச்சம்…
ஆனாலும் நெஞ்சுக்குள்ள ஏதோ அச்சம்…
பெண் : நோகாம பாத்துப்புட்டே வேறென்ன மிச்சம்…
கல்யாணம் கட்டிக்கிட்டா இன்னும் சொச்சம்…
ஆண் : அச்சு வெல்லப் பேச்சுல…
ஆளத் தூக்குற
கொஞ்ச நேரம் பாருன்னா…
கூலி கேக்குற…
பெண் : துள்ளிப் போகும் புள்ளிமான…
மல்லு வேட்டி இழுக்குது…
மாமன் பேசும் பேச்சக் கேட்டு…
வேப்பங்குச்சி இனிக்கிது…
ஆண் : பூஜைக்கேத்த பூவிது…
நேத்துத்தான பூத்தது…
பூத்தது யாரத பாத்தது…
—BGM—
பெண் : ஊரெல்லாம் உன்னப்பத்தி…
வெறும் வாய மெல்ல…
தோதாக யாருமில்ல தூது சொல்ல…
ஆண் : வாய் வார்த்தை பொம்பளைக்கி…
போதாது புள்ள…
கண் ஜாடை போல ஒரு பாஷையில்ல…
பெண் : சுத்திச் சுத்தி வந்து நீ…
சோப்பு போடுற…
கொட்டிப் போன குடுமிக்கு…
சீப்பு தேடுற…
ஆண் : என்னப் பார்த்து என்ன கேட்ட…
ஏட்ட ஏன்டி மாத்துற…
கால நேரம் கூடிப் போச்சு…
மாலை வந்து மாத்துறேன்…
பெண் : பூஜைக்கேத்த பூவிது…
நேத்துத்தான பூத்தது…
அட பூத்தது யாரத பாத்தது…
ஆண் : மேல போட்ட தாவணி…
சேலையாகிப் போனது…
பெண் : சேலையிழுத்து விடுவதே…
வேலையாகிப் போனது…
ஆண் : கொக்கு ஒன்னு கொக்கி போடுது… ஹோய்…
பெண் : பூஜைக்கேத்த பூவிது…
ஆண் : நேத்துத்தான பூத்தது…
பெண் : பூத்தது யாரத பாத்தது…
Notes : Poojaikkaetha Poovidhu Song Lyrics in Tamil. This Song from Neethaana Andha Kuyil (1986). Song Lyrics penned by Gangai Amaran. பூஜைக்கேத்த பூவிது பாடல் வரிகள்.