Category Archives: சின்ன பசங்க நாங்க

வெளக்கு வச்சா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்மலேசியா வாசுதேவன்இளையராஜாசின்ன பசங்க நாங்க

Velakku Vacha Song Lyrics in Tamil


BGM

ஆண் : வெளக்கு வச்சா வீட்டுக்குள்ள…
நாங்க வேற வேல பாக்கமாட்டோம்…
எங்கள வெளக்கச் சொன்னா காலையில…
நாங்க பல்ல தவிர வெளக்கமாட்டோம்…

ஆண் : கூரைக்கு மேல கோழி புடிப்போம்…
அந்த வானத்தில் ஏற ஏணி குடுப்போம்…
குழு : ஆமா…

ஆண் : ஏரிக்குள் ஓடும் மீனப் புடிப்போம்…
அத எல்லோர்க்கும் குடுக்க பங்கு பிரிப்போம்…

குழு : ஹே வெளக்கு வச்சா வீட்டுக்குள்ள…
நாங்க வேற வேல பாக்க மாட்டோம்…
எங்கள வெளக்கச் சொன்னா காலையில…
நாங்க பல்ல தவிர வெளக்க மாட்டோம்…

BGM

ஆண் : தாளம் மாத்தி பாடமாட்டோம்…
ஆள மாத்தி ஆடமாட்டோம்…
வேலை இன்றி கூடமாட்டோம்…
வெட்டிப் பேச்சு பேசமாட்டோம்…

குழு : பொல்லாப்பு சொல்லமாட்டோம்…
ஆண் : குத்தம் இருந்தா…
குழு : சொல்லாம செல்லமாட்டோம்…
ஆண் : ஹேஹே ஹேஹே ஹேய்…

குழு : தெம்மாங்கு பாட்டப் பாடி…
ஆண் : நல்ல கருத்த…
குழு : எல்லார்க்கும் சொல்லப் போறோம்…

ஆண் : ஹே பாட்டுப் பாடி வாழப் போறோம்…
நாட்ட மாத்தி காட்டப் போறோம்…
சொன்னா செஞ்சு முடிப்போம்…
ஓண்ணா சிந்து படிப்போம்…

ஆண் : வெளக்கு வச்சா…

BGM

குழு : ஹே வெளக்கு வச்சா வீட்டுக்குள்ள…
நாங்க வேற வேல பாக்கமாட்டோம்…

ஆண் : எங்கள வெளக்கச் சொன்னா காலையில…
நாங்க பல்ல தவிர வெளக்க மாட்டோம்…

BGM

ஆண் : ஏழைக்காக பாட்டுப் பாடி…
மேலே போனார் பாவலரு…
ஆடி ஓடி வேலை செய்ய…
அவரப் போல யாரு வேறு…

குழு : அண்ணாச்சி போட்ட ரூட்டு…
ஆண் : தம்பிகளுக்கு…
குழு : பொன்னான சந்தப் பாட்டு…
ஆண் : ஹேஹே ஹேஹே ஹேய்…

குழு : கண்ணாக உள்ள போது…
ஆண் : கஷ்டங்கள் இல்லே…
குழு : எல்லாமும் ஓட்டிக் காட்டு…

ஆண் : ஹே உள்ளம் போல நல்ல வாழ்வு…
உள்ள போது ஏது தாழ்வு…
சொன்னா சங்கடம் இல்ல…
எல்லாம் நம்மிடம் இல்ல…
வெளக்கு வச்சா… ஹோய்…

குழு : ஹே வெளக்கு வச்சா வீட்டுக்குள்ள…
நாங்க வேற வேல பாக்கமாட்டோம்…

ஆண் : எங்கள வெளக்கச் சொன்னா காலையில…
நாங்க பல்ல தவிர வெளக்கமாட்டோம்…
கூரைக்கு மேல கோழி புடிப்போம்…
அந்த வானத்தில் ஏற ஏணி குடுப்போம்…
குழு : ஆமா…

ஆண் : ஏரிக்குள் ஓடும் மீனப் புடிப்போம்…
அத எல்லோர்க்கும் குடுக்க பங்கு பிரிப்போம்…

குழு : ஹே வெளக்கு வச்சா வீட்டுக்குள்ள…
நாங்க வேற வேல பாக்கமாட்டோம்…
எங்கள வெளக்கச் சொன்னா காலையில…
நாங்க பல்ல தவிர வெளக்கமாட்டோம்…

BGM


Notes : Velakku Vacha Song Lyrics in Tamil. This Song from Chinna Pasanga Naanga (1992). Song Lyrics penned by Gangai Amaran. வெளக்கு வச்சா பாடல் வரிகள்.


கோவணத்த இறுக்கி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்மனோஇளையராஜாசின்ன பசங்க நாங்க

Kovanatha Irukki Kattu Song Lyrics in Tamil


ஆண் : ஒன்னே ஒன்ன எதிர்பார்த்து…
ஓடி வந்த மாமனுக்கு…
ஒன்னும் கெட்டு ரெண்டும் கெட்டு…
மூணு நாலு அஞ்சும் கெட்டு…
அட ஆறும் கெட்டு ஏழும் கெட்டு…
எட்டும் கெட்டு ஒன்பதா கெடச்சுதப்பா… டுர்ர்ர்…

BGM

ஆண் : கோவணத்த இறுக்கிக் கட்டு…
மச்சான் கூட நின்னு பாட்டு படிப்போம்…
பூ மணத்த நெனச்சுகிட்டு…
வந்த குட்டுகள போட்டு உடைப்போம்…

குழு : பொண்டுகள பாத்தா புத்தி கெடலாமா…
செண்டுகள பூசி சுத்தி வரலாமா…
எங்களுக்கு தேவ டண்டனக்கு டண்டனக்கு…

ஆண் : கோவணத்த…

BGM

ஆண் : கோவணத்த இறுக்கிக் கட்டு…
மச்சான் கூட நின்னு பாட்டு படிப்போம்…
பூ மணத்த நெனச்சுகிட்டு…
வந்த குட்டுகள போட்டு உடைப்போம்…

BGM

ஆண் : எந்த பொண்ணும் எதுக்க வந்தா…
கன்னி வெக்க பாக்குறியே…
மன்மதன் போல் நெனச்சு நீதான்…
காலரத்தான் தூக்குறியே…

ஆண் : சின்னஞ்சிறுசா பாத்துப் பாத்து…
ஜொள்ளு விட்டு அலையிறியே…
பூவு வெடிச்ச சேதி தெரிஞ்சா…
டாவடிக்கக் கெளம்புறியே…

ஆண் : பொல்லாது மச்சான் இந்த நெனப்பு…
செல்லாது இங்கே உங்க கொழுப்பு…
சுட்டாக்கா தெரியும் சட்டி நெருப்பு…
பட்டாத்தான் புரியும் உங்க பொழப்பு…

ஆண் : இப்போதே ரூட்ட நீ…
குழு : மாத்தணும் மாத்தணும் மாத்திடணும்…
ஆண் : இல்லாட்டி வீம்புல…
குழு : மாட்டிட மாட்டிட மாட்டிடணும்…

ஆண் : ஹா… இத்தோடு போதுமா இன்னும் வேணுமா…
அய்யய்யா அய்யய்யா யய்யாயயய்யா…

ஆண் : கோவணத்த…

BGM

ஆண் : கோவணத்த இறுக்கிக் கட்டு…
மச்சான் கூட நின்னு பாட்டு படிப்போம்…
பூ மணத்த நெனச்சுகிட்டு…
வந்த குட்டுகள போட்டு உடைப்போம்…

BGM

ஆண் : சின்னப் பசங்க நாங்களெல்லாம்…
சீர்திருத்தக்காரங்கதான்…
மன்றம் வச்சு ஊரக் காக்க…
வந்திருக்கும் சூரங்கதான்…

ஆண் : ஒன்னப் போல மைனராலே…
ஊரு கெட்டுப் போகுமப்பா…
கண்ணகி போல் இருக்கும் பெண்ணும்…
மாதவியா ஆகுமப்பா…

ஆண் : உன்னாட்டம் ஆள கண்டு புடிப்போம்…
உக்காத்தி வெச்சு பெண்டு எடுப்போம்…
வண்டாட்டம் நீயும் வட்டமடிச்சு…
கொண்டாட்டம் போட்டா கால ஒடிப்போம்…

ஆண் : வாலாட்ட எண்ணினா…
குழு : வெட்டுவோம் வெட்டுவோம் வெட்டிடுவோம்…
ஆண் : சேட்டைகள் பண்ணினா…
குழு : குட்டுவோம் குட்டுவோம் குட்டிடுவோம்…

ஆண் : ஹா… மச்சான் உன் மானம்தான் கப்பல் ஏறிடும்…
அய்யய்யா அய்யய்யா அய்யய்யா யயய்யா…

ஆண் : கோவணத்த…

BGM

ஆண் : ஹா… கோவணத்த இறுக்கிக் கட்டு…
மச்சான் கூட நின்னு பாட்டு படிப்போம்…
பூ மணத்த நெனச்சுகிட்டு…
வந்த குட்டுகள போட்டு உடைப்போம்…

குழு : பொண்டுகள பாத்தா புத்தி கெடலாமா…
செண்டுகள பூசி சுத்தி வரலாமா…
எங்களுக்கு தேவ டண்டனக்கு டண்டனக்கு…

ஆண் : கோவணத்த… ஆஹா ஆஹாஹா…
கோவணத்த இறுக்கிக் கட்டு…
மச்சான் கூட நின்னு பாட்டு படிப்போம்…
பூ மணத்த நெனச்சுகிட்டு…
வந்த குட்டுகள போட்டு உடைப்போம்…
ஆ அஹா ஆஹா ஹா…


Notes : Kovanatha Irukki Kattu Song Lyrics in Tamil. This Song from Chinna Pasanga Naanga (1992). Song Lyrics penned by Gangai Amaran. கோவணத்த இறுக்கி பாடல் வரிகள்.


மயிலாடும் தோப்பில்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ்.பி. பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகிஇளையராஜாசின்ன பசங்க நாங்க

Mayilaadum Thoppil Manada Song Lyrics in Tamil


BGM

ஆண் : மயிலாடும் தோப்பில் மானாடக் கண்டேன்…
மானாடும் போது மனமாடக் கண்டேன்…
மானானது யாரோ மகராணியே நீயோ…
மனமாடவே தூண்டும் மாதேவியே நீயோ…

பெண் : மயிலாடும் தோப்பில் மானாடக் கண்டேன்…
மானாடும் போது மனமாடக் கண்டேன்…

BGM

ஆண் : வெல்வெட்டுக் கன்னம் தொட்டு…
வைக்கின்ற முத்தம் எல்லாம்…
கல்வெட்டு போலே நிற்கும்…
கண்ணே நம் காலம் எல்லாம்…

பெண் : நேசித்து நெஞ்சில் வைத்து நீண்ட காலம்…
யாசித்த பெண்ணுக்கின்று ராஜ யோகம்…

ஆண் : யோசித்து ஒவ்வொன்றாக காதல் பாடம்…
வாசித்து அர்த்தம் சொல்லும் வேளையாகும்…

பெண் : மை விழியோரம் ஐவகை பாணம்…
ஆண் : மன்மதன் போடும் மங்கல நேரம்…
பெண் : பொன் மாலைப் பொழுதினிலே…

ஆண் : மயிலாடும் தோப்பில் மானாடக் கண்டேன்…
பெண் : மானானது யாரோ மகராஜனே நீயோ…

BGM

பெண் : உள்ளத்தின் உண்டியலில்…
உன் ஆசை எண்ணங்களை…
சேமித்து வைத்த கன்னி…
சிந்தித்தாள் உன்னை எண்ணி…

ஆண் : சேமித்த அன்புத் தேனை நானும் வாங்க…
சாமத்தில் சாமந்திப் பூ நாளும் ஏங்க…

பெண் : பூவுக்கு வந்ததின்று பூஜை நேரம்…
போகட்டும் வெட்கம் இன்று காத தூரம்…

ஆண் : மீதங்கள் இன்றி மோகங்கள் கூட…
பெண் : மோகங்கள் நூறு ராகங்கள் பாட…
ஆண் : சங்கீத மயக்கத்திலே… ஏ…

பெண் : மயிலாடும் தோப்பில் மானாடக் கண்டேன்…
மானாடும் போது மனமாடக் கண்டேன்…
மானானது யாரோ மகராஜனே நீயோ…
மனமாடவே தூண்டும் மாதேவனே நீயோ…

ஆண் : மயிலாடும் தோப்பில் மானாடக் கண்டேன்…
மானாடும் போது மனமாடக் கண்டேன்…


Notes : Mayilaadum Thoppil Manada Song Lyrics in Tamil. This Song from Chinna Pasanga Naanga (1992). Song Lyrics penned by Vaali. மயிலாடும் தோப்பில் பாடல் வரிகள்.


ஜோடி நல்ல ஜோடி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்மலேசியா வாசுதேவன் & கே.எஸ். சித்ராஇளையராஜாசின்ன பசங்க நாங்க

Jodi Nalla Jodi Ithu Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஜோடி நல்ல ஜோடி இது…
மாப்பிள்ள பொண்ணையும் பாரு…

குழு : ஜோடி நல்ல ஜோடி இது…
மாப்பிள்ள பொண்ணையும் பாரு…

ஆண் : பாடி விளையாடி உள்ள…
சங்கதி எல்லாம் கூறு…

குழு : பாடி விளையாடி உள்ள…
சங்கதி எல்லாம் கூறு…

பெண் : நல்ல தவம் இருந்து…
பெத்து எடுத்த ராணி மகாராணி…

குழு : நல்ல தவம் இருந்து…
பெத்து எடுத்த ராணி மகாராணி…

பெண் : இந்த குணவதிய கண்டு பிடிச்ச…
ராசா மகா ராசா…

குழு : இந்த குணவதிய கண்டு பிடிச்ச…
ராசா மகா ராசா…

ஆண் : ஓஹோஹோ ஜோடி நல்ல ஜோடி…
இது மாப்பிள்ள பொண்ணையும் பாரு…

பெண் : பாடி விளையாடி உள்ள…
சங்கதி எல்லாம் கூறு…

BGM

ஆண் : ஒன்னா ரெண்டா உள்ளதை எல்லாம்…
கண்ணால் சொல்லு சேதிதான்…

பெண் : பொன்னால் கட்டி பூட்டி இழுத்து…
பூஜையை போடும் நேரம்தான்…

ஆண் : மெத்தையில சிந்தாம…
இனி கோர்ப்பாளம்மா முத்தாரம்…

BGM

பெண் : அத்தனையும் சொல்லாம…
அத அடக்கி வெப்பா வித்தாரம்…

BGM

ஆண் : ஆயிரத்தில் ஒன்னே ஒன்னு…
குழு : அம்சமுள்ள பொஞ்சாதி…

பெண் : தேடி இப்போ வந்தாச்சு…
குழு : சின்னச் சிட்டு சிங்காரி…

ஆண் : அள்ளாமலே கிள்ளாமலே…
மல்லாடுற கைகாரி…

பெண் : ஜோடி நல்ல ஜோடி இது…
மாப்பிள்ள பொண்ணையும் பாரு…
பாடி விளையாடி உள்ள…
சங்கதி எல்லாம் கூறு…

ஆண் : நல்ல தவம் இருந்து…
பெத்து எடுத்த ராணி மகாராணி…
இந்த குணவதிய கண்டு பிடிச்ச…
ராசா மகா ராசா…

குழு : ஓஹோஹோ… ஜோடி நல்ல ஜோடி…
இது மாப்பிள்ள பொண்ணையும் பாரு…
பாடி விளையாடி உள்ள…
சங்கதி எல்லாம் கூறு…

BGM

பெண் : அய்யா உள்ளம் ஆடியில் வெள்ளம்…
அடக்கி வச்சாம் பாவம்தான்…

ஆண் : அம்மா எண்ணம் சந்தனக் கிண்ணம்…
அடிச்சதம்மா யோகம்தான்…

பெண் : ஒத்தையில நின்னாரு…
இப்ப ரெட்டையாக வந்தாரு…

BGM

ஆண் : சக்தியுள்ள அண்ணாரு…
அவர் ஜாதகம் போல வேறாரு…

பெண் : ஏழு பட்டி சீமையிலும்…
குழு : ஏழை சனம் பாராட்டும்…

ஆண் : வாழை என உங்க வம்முசம்…
குழு : வாழ்க என சீராட்டும்…

பெண் : அன்பானது பண்பானது…
ஒண்ணானது கொண்டாட்டம்…

ஆண் : ஜோடி நல்ல ஜோடி இது…
மாப்பிள்ள பொண்ணையும் பாரு…
பாடி விளையாடி உள்ள…
சங்கதி எல்லாம் கூறு…

பெண் : நல்ல தவம் இருந்து…
பெத்து எடுத்த ராணி மகாராணி…
இந்த குணவதிய கண்டு பிடிச்ச…
ராசா மகா ராசா…

குழு : ஓஹோஹோ… ஜோடி நல்ல ஜோடி…
இது மாப்பிள்ள பொண்ணையும் பாரு…
பாடி விளையாடி உள்ள…
சங்கதி எல்லாம் கூறு…

குழு : ஜோடி நல்ல ஜோடி…
இது மாப்பிள்ள பொண்ணையும் பாரு…
பாடி விளையாடி உள்ள…
சங்கதி எல்லாம் கூறு…


Notes : Jodi Nalla Jodi Ithu Song Lyrics in Tamil. This Song from Chinna Pasanga Naanga (1992). Song Lyrics penned by Gangai Amaran. ஜோடி நல்ல ஜோடி பாடல் வரிகள்.


Enna Manamulla Ponnu Song Lyrics in Tamil

என்ன மானமுள்ள பொண்ணுயின்னு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்எஸ். ஜானகிஇளையராஜாசின்ன பசங்க நாங்க

Enna Manamulla Ponnu Song Lyrics in Tamil


பெண் : என்னை மானமுள்ள பொண்ணு இன்னு…
மதுரையில கேட்டாக…

குழு : மன்னார்குடியில் கேட்டாக…
அந்த மாயவரத்தில கேட்டாக…

பெண் : சீர் செனத்தையோட வந்து…
சீமையில கேட்டாக…

குழு : அந்த சிங்கப்பூரிலும் கேட்டாக…
நம்ம சின்னமனூர்லயும் கேட்டாக…

பெண் : அதை எல்லாம் உன்னால…
வேணாமுன்னு சொன்னேன் தன்னால…
என் மச்சான் உன் மேலே…
ஆச பட்டு வந்தேன் முன்னால…

பெண் : அதை எல்லாம் உன்னால…
வேணாமுன்னு சொன்னேன் தன்னால…
என் மச்சான் உன் மேலே…
ஆச பட்டு வந்தேன் முன்னால…

பெண் : என்னை மானமுள்ள பொண்ணு இன்னு…
மதுரையில கேட்டாக…

குழு : மன்னார்குடியில் கேட்டாக…
அந்த மாயவரத்தில கேட்டாக…

BGM

பெண் : கொண்ட முடி அழக பார்த்து…
கோயம்பத்தூரிலே கேட்டாக…
நெத்தியில பொட்ட பார்த்து…
நெல்லூரில கேட்டாக…

குழு : ரெண்டு புருவ அழக பார்த்தாக…
ஒரு கோட்டையில் இவள கேட்டாக…

பெண் : கண்ணழக பார்த்து பார்த்து…
கண்டமனூரிலே கேட்டாக…
மூக்கழக பார்த்து…
என்ன மூக்கையன் கோட்டையில் கேட்டாக…

பெண் : கோபமுள்ள பொண்ணுன்னு…
என்ன கோட்டையில கேட்டாக…
பாசமுள்ள பொண்ணுன்னு…
என்ன பண்ணைபுரத்தில கேட்டாக…

பெண் : இத்தனை பேரு சுத்தி வளைச்சும்…
உத்தம ராசா உன்ன நினைக்கும்…
பத்தினி உள்ளமையா…

பெண் : என்னை மானமுள்ள பொண்ணு இன்னு…
மதுரையில கேட்டாக…

குழு : மன்னார்குடியில் கேட்டாக…
அந்த மாயவரத்தில கேட்டாக…

பெண் : அதை எல்லாம் உன்னால…
வேணாமுன்னு சொன்னேன் தன்னால…
என் மச்சான் உன் மேலே…
ஆச பட்டு வந்தேன் முன்னால…

BGM

பெண் : வேண்ட ஒரு சாமியுமில்ல…
விரும்பி வந்தேன் உங்கள…
உன்ன விட யாரும் இங்கே…
உருப்படியா தோணல…

குழு : நல்ல வாட்டமுள்ள ஆம்பள…
உன்ன மறக்க இவளுக்காகல…

பெண் : வாரி கட்டி தோளில் அணைச்சு…
வச்சுக்கங்க வேற கேக்கல…
மாறி நீங்க போனீங்கன்னோ…
மனசு இப்போ ஆறல…

பெண் : தொட்டணைக்க கூடாதா…
என்ன சூடி கொண்டா ஆகாதா…
பட்டு துணி மேலாக்கு…
அத தொட்டு இழுக்க கூடாதா…

பெண் : உள்ளத எல்லாம் சொல்லி முடிச்சேன்…
நல்ல முடிவு சொல்லுங்க மச்சான்…
இன்னமும் சொல்லனுமா…

பெண் : என்னை மானமுள்ள பொண்ணு இன்னு…
மதுரையில கேட்டாக…

குழு : மன்னார்குடியில் கேட்டாக…
அந்த மாயவரத்தில கேட்டாக…

பெண் : சீர் செனத்தையோட வந்து…
சீமையில கேட்டாக…

குழு : அந்த சிங்கப்பூரிலும் கேட்டாக…
நம்ம சின்னமனூர்லயும் கேட்டாக…

பெண் : அதை எல்லாம் உன்னால…
வேணாமுன்னு சொன்னேன் தன்னால…
என் மச்சான் உன் மேலே…
ஆச பட்டு வந்தேன் முன்னால…

பெண் : என்னை மானமுள்ள பொண்ணு இன்னு…
மதுரையில கேட்டாக…

குழு : மன்னார்குடியில் கேட்டாக…
அந்த மாயவரத்தில கேட்டாக…


Notes : Enna Manamulla Ponnu Song Lyrics in Tamil. This Song from Chinna Pasanga Naanga (1992). Song Lyrics penned by Gangai Amaran. என்ன மானமுள்ள பொண்ணுயின்னு பாடல் வரிகள்.