Category Archives: சேரன் பாண்டியன்

Vaa Vaa Enthan Song Lyrics in Tamil

வா வா எந்தன்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
சௌந்தர்யன்எஸ். பி. பாலசுப்ரமணியம்சௌந்தர்யன்சேரன் பாண்டியன்

Vaa Vaa Enthan Song Lyrics in Tamil


BGM

ஆண் : வா வா எந்தன் நிலவே வெண்ணிலவே…
என் வாழ்வே நீதான் நிலவே வெண்ணிலவே…

ஆண் : பிரித்தாலும் பிரியாது…
நம் காதல் அழியாது…
வரும் தடைகளை உடைத்திடு…
உறவுக்கு வழி கொடு…

ஆண் : வா வா எந்தன் நிலவே வெண்ணிலவே…
என் வாழ்வே நீ தான் நிலவே வெண்ணிலவே…

BGM

ஆண் : காணும் கனவெல்லாம் என்றும் நீதானே…
என் கனவெல்லாம் நினைவாக வா வா கண்மணியே…
வீசும் காற்றில் தூசி ஆனேனே…
உன்னை எங்கோ மனம் பேச உள்ளம் நொந்தேனே…

ஆண் : நாம் ஒன்று சேரும் திரு நாளும் உருவாகும்…
ஜென்மங்கள் ஏழேழும் நாம் வாழ்வதை தடுத்திட முடியாது…

ஆண் : வா வா எந்தன் நிலவே வெண்ணிலவே…
என் வாழ்வே நீதான் நிலவே வெண்ணிலவே…

BGM

ஆண் : காதல் பிரிவென்றால் உள்ளம் துடிக்கிறதே…
அதை காதால் கேட்டாலே உலகே வெறுக்கிறதே…
தீயாய் உடல் எங்கும் என்னை சுடுகிறதே…
உன்னை தேடும் கண்கள் கண்ணீர் வடிக்கிறதே…

ஆண் : உன்னோடு நாளும் நிழல் ஆக வருவேனே…
உடலோடு உயிராக நாம் சேர்ந்தது யாருக்கும் தெரியாது…

ஆண் : வா வா எந்தன் நிலவே வெண்ணிலவே…
என் வாழ்வே நீ தான் நிலவே வெண்ணிலவே…

ஆண் : பிரித்தாலும் பிரியாது…
நம் காதல் அழியாது…
வரும் தடைகளை உடைத்திடு…
உறவுக்கு வழி கொடு…

ஆண் : வா வா எந்தன் நிலவே வெண்ணிலவே…
என் வாழ்வே நீதான் நிலவே வெண்ணிலவே…


Notes : Vaa Vaa Enthan Song Lyrics in Tamil. This Song from Cheran Pandian (1991). Song Lyrics penned by Soundaryan. வா வா எந்தன் பாடல் வரிகள்.


கண்கள் ஒன்றாக

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
சௌந்தர்யன்மனோ & கே.எஸ். சித்ராசௌந்தர்யன்சேரன் பாண்டியன்

Kangal Ondraga Song Lyrics in Tamil


BGM

பெண் : கண்கள் ஒன்றாக கலந்ததால்…

BGM

ஆண் : காதல் திருக்கோலம் கொண்டதோ…

BGM

பெண் : கைகள் ஒன்றாக இணைந்ததால்…

BGM

ஆண் : கவிதை பல பாட மலர்ந்ததோ…

BGM

ஆண் : கண்கள் ஒன்றாக கலந்ததால்…
காதல் திருக்கோலம் கொண்டதோ…
கைகள் ஒன்றாக இணைந்ததால்…
கவிதை பல பாட மலர்ந்ததோ…

பெண் : வசந்தங்களே வாழ்த்துங்களேன்…
குழு : ஆஆ… ஆஆ…
பெண் : வளர் பிறையாய் வளருங்களேன்…
குழு : ஆஆ ஆஆ ஆஆ ஆஆ…

ஆண் : கண்கள் ஒன்றாக கலந்ததால்…
காதல் திருக்கோலம் கொண்டதோ…

பெண் : கைகள் ஒன்றாக இணைந்ததால்…
கவிதை பல பாட மலர்ந்ததோ…

BGM

பெண் : மழை வரும்போது குளிர் வரும் கூட…
மலர் மனம் வீசுமே…
இவள் மனம் உந்தன் வருகையை கண்டு…
எழில் முகம் பூக்குமே…

ஆண் : அடித்திடும் கைகள் அணைத்திட நானும்…
அடைக்கலம் ஆகிறேன்…
முல்லையே எல்லை இல்லையே…
உந்தன் அன்பினில் மூழ்கினேன்…

பெண் : கண்கள் ஒன்றாக கலந்ததால்…
காதல் திருக்கோலம் கொண்டதோ…

ஆண் : கைகள் ஒன்றாக இணைந்ததால்…
கவிதை பல பாட மலர்ந்ததோ…

BGM

ஆண் : ஒருகணம் பார்க்க பலக்கணம் நெஞ்சில்…
திரைப்படம் பார்க்கிறேன்…
உயிருடன் நித்தம் உரசியே…
என்றும் உன்வசம் கலக்கிறேன்…

பெண் : பிரிவதும் பின்பு இணைவதும்…
நதிகளின் அலைகளும் கரையுமா… ஆஆ…
பெண்மைதான் தூங்கவில்லையே…
உந்தன் பித்துதான் அதிகமா…

ஆண் : கண்கள் ஒன்றாக கலந்ததால்…
பெண் : காதல் திருக்கோலம் கொண்டதோ…

ஆண் : கைகள் ஒன்றாக இணைந்ததால்…
பெண் : கவிதை பல பாட மலர்ந்ததோ…

ஆண் : ஓ வசந்தங்களே வாழ்த்துங்களேன்…
குழு : ஆஆ ஆஆ…
பெண் : வளர் பிறையாய் வளருங்களேன்…
குழு : ஆஆ ஆஆ ஆஆ ஆஆ…

ஆண் : கண்கள் ஒன்றாக கலந்ததால்…
பெண் : காதல் திருக்கோலம் கொண்டதோ…

ஆண் : கைகள் ஒன்றாக இணைந்ததால்…
பெண் : கவிதை பல பாட மலர்ந்ததோ…

BGM


Notes : Kangal Ondraga Song Lyrics in Tamil. This Song from Cheran Pandian (1991). Song Lyrics penned by Soundaryan. கண்கள் ஒன்றாக பாடல் வரிகள்.


சம்பா நாத்து

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
சௌந்தர்யன்சுவர்ணலதாசௌந்தர்யன்சேரன் பாண்டியன்

Samba Natthu Song Lyrics in Tamil


BGM

குழு : தன்னே நானே தானே நானே…
எம்மா தன்னே நன்னே…
தானே நன்னே தன்னே நானே…
எம்மா தன்னே நன்னே…
தானே நன்னே தன்னே நானே…

குழு : தன்னே நானே தானே நானே…
எம்மா தானே நன்னே…
தன்னே நன்னே தானே நானே…
எம்மா தானே நன்னே…
தன்னே நன்னே தானே நானே…

BGM

பெண் : ஏ… சம்பா நாத்து சாரக்காத்து…
மச்சான் சல்லுனுதான் வீசுதுங்க…
அங்கம் பூரா…
மச்சான் சல்லுனுதான் வீசுதுங்க…
அங்கம் பூரா…

பெண் : ஏ… பொண்ணு வாசம் பூவு வாசம்…
செண்ட் பூசிக்கலாம் கட்டிக்கங்க…
காலம் பூரா…
செண்ட் பூசிக்கலாம் கட்டிக்கங்க…
காலம் பூரா…

BGM

குழு : தானநானே தானநானே…
தானநானே தானநானே…

பெண் : தெருவெல்லாம் கோலமிட்டு…
குழு : கோலமிட்டு…
பெண் : திரியேத்தி குத்து விளக்கு வச்சு…
குழு : விளக்கு வச்சு…

பெண் : தெருவெல்லாம் கோலமிட்டு…
குழு : கோலமிட்டு…
பெண் : திரியேத்தி குத்து விளக்கு வச்சு…
குழு : விளக்கு வச்சு…

பெண் : உனக்காக மச்சான் காத்திருப்பேன்…
உறங்காம கண்ணு முழிச்சிருப்பேன்…

குழு : உனக்காக மச்சான் காத்திருப்பேன்…
உறங்காம கண்ணு முழிச்சிருப்பேன்…

பெண் : ஏ… சம்பா நாத்து சாரக்காத்து…
மச்சான் சல்லுனுதான் வீசுதுங்க…
அங்கம் பூரா…
மச்சான் சல்லுனுதான் வீசுதுங்க…
அங்கம் பூரா…

BGM

குழு : தனநானே தனநானே…
தனநானே தனநானே…

பெண் : கண் பார்த்து மயங்கிவிடும்…
குழு : மயங்கிவிடும்…
பெண் : கருங்கல்லும் கரைஞ்சிவிடும்…
குழு : கரைஞ்சிவிடும்…

பெண் : கண் பார்த்து மயங்கிவிடும்…
குழு : மயங்கிவிடும்…
பெண் : கருங்கல்லும் கரைஞ்சிவிடும்…
குழு : கரைஞ்சிவிடும்…

பெண் : என் மகராசன் அழகால…
மனசெல்லாம் குளிர்ந்துவிடும்…

குழு : என் மகராசன் அழகால…
மனசெல்லாம் குளிர்ந்துவிடும்…

பெண் : ஏ… சம்பா நாத்து சாரக்காத்து…
மச்சான் சல்லுனுதான் வீசுதுங்க…
அங்கம் பூரா…
மச்சான் சல்லுனுதான் வீசுதுங்க…
அங்கம் பூரா…

பெண் : ஏ… பொண்ணு வாசம் பூவு வாசம்…
செண்ட் பூசிக்கலாம் கட்டிக்கங்க…
காலம் பூரா…
செண்ட் பூசிக்கலாம் கட்டிக்கங்க…
காலம் பூரா…

BGM


Notes : Samba Natthu Song Lyrics in Tamil. This Song from Cheran Pandian (1991). Song Lyrics penned by Soundaryan. சம்பா நாத்து பாடல் வரிகள்.