Category Archives: இதயம்

ஓ பார்ட்டி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிமலேசியா வாசுதேவன்இளையராஜாஇதயம்

Oh Party Song Lyrics in Tamil


ஆண் : ஓஓ பார்ட்டி நல்ல பார்ட்டிதான்…
ஓஓ பியூட்டியின்னா பியூட்டிதான்…

BGM

ஆண் : ஓஓ பார்ட்டி நல்ல பார்ட்டிதான்…
ஓஓ பியூட்டியின்னா பியூட்டிதான்…
குழு : ஓஓ பார்ட்டி நல்ல பார்ட்டிதான்…
ஓஓ பியூட்டியின்னா பியூட்டிதான்…

ஆண் : பின்னழகைக் காட்டிச் சின்னப் பையன்களை வாட்டி…
மின்னலிடை ஆட்டி செல்லும் மஞ்சள் நிலா நெஞ்சைக் கிள்ளாதே…

குழு : ஓஓ பார்ட்டி நல்ல பார்ட்டிதான்…
ஓஓ பியூட்டியின்னா பியூட்டிதான்…

BGM

ஆண் : காத்திருந்தா கண்மணியே பஸ் கிடைக்கும்…
குழு : காதலிச்சா பொன்மணியே கிஸ் கிடைக்கும்…

ஆண் : கை விடுவான் கன்னியரைப் பல்லவந்தான்…
குழு : கைக்கொடுப்போம் நாங்களெல்லாம் நல்லவன்தான்…

ஆண் : நிழல் போல் நாங்கள் வந்தாலே உனக்கேன் கூச்சமே
கடைக்கண் பார்வை பட்டாலே கிடைக்கும் மோட்சமே…

குழு : தரையிலொரு ஜலதரங்கம்… ஆஹாஆ…
தவறி விட்டால் சுருதி இறங்கும்…

ஆண் : உன்னை வாலிபந்தான் கூப்பிடுது…
வானவில்லே வா வா…

குழு : ஓஓ பார்ட்டி நல்ல பார்ட்டிதான்…
ஓஓ பியூட்டியின்னா பியூட்டிதான்…

ஆண் : பின்னழகைக் காட்டிச் சின்னப் பையன்களை வாட்டி…
மின்னலிடை ஆட்டி செல்லும் மஞ்சள் நிலா நெஞ்சைக் கிள்ளாதே…

குழு : ஓஓ பார்ட்டி நல்ல பார்ட்டிதான்…
ஓஓ பியூட்டியின்னா பியூட்டிதான்…

BGM

குழு : பிள்ளைகளை நீ சுமக்கும் பருவமடி…
ஆண் : புக்ஸை எல்லாம் நீ சுமந்தால் பாவமடி…

குழு : பள்ளியறைப் பாடம் சொல்ல நாங்க ரெடி…
ஆண் : பூங்குயில் நீ சம்மதிச்சா போதுமடி…

ஆண் : அடியே ஆடைகளாலே அழகைப் பூட்டாதே…
இடையை ஆடவிட்டே தான் அனலை மூட்டாதே…

குழு : பூஞ்சிரிப்பில் மோனலிசா… ஆஹாஆ…
போலிருந்தும் கல் மனசா…

ஆண் : இளமீசை வச்ச ஆம்பளைங்க…
ஆச வச்சோம் வா வா…

குழு : ஓஓ பார்ட்டி நல்ல பார்ட்டிதான்…
ஓஓ பியூட்டியின்னா பியூட்டிதான்…

ஆண் : பின்னழகைக் காட்டிச் சின்னப் பையன்களை வாட்டி…
மின்னலிடை ஆட்டி செல்லும் மஞ்சள் நிலா நெஞ்சைக் கிள்ளாதே…

குழு : ஓஓ பார்ட்டி நல்ல பார்ட்டிதான்…
ஓஓ பியூட்டியின்னா பியூட்டிதான்…


Notes : Oh Party Song Lyrics in Tamil. This Song from Idhayam (1991). Song Lyrics penned by Vaali. ஓ பார்ட்டி பாடல் வரிகள்.


ஏப்ரல் மேயிலே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பிறைசூடன்இளையராஜா, தீபன் சக்கரவர்த்தி & எஸ்.என்.சுரேந்தர்இளையராஜாஇதயம்

April Mayile Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஏப்ரல் மேயிலே பசுமையே இல்லே…
காஞ்சி போச்சுடா…
இந்த ஊரும் புடிக்கலே உலகம் புடிக்கலே…
போரு போருடா…

ஆண் : இது தேவையா…
அட போங்கையா…
ஜூன் ஜூலையா…

ஆண் : பட்டாம் பூச்சிகள் பறக்குது பறக்குது…
கண்ணா மூச்சிகள் நடக்குது நடக்குது…
பச்சைப் பசுமைகள் தெரியுது தெரியுது…
அழகு கிளிகள் நமது விழியில் வலம் வருதே…

ஆண் : ஏப்ரல் மேயிலே பசுமையே இல்லே…
காஞ்சி போச்சுடா…
இந்த ஊரும் புடிக்கலே உலகம் புடிக்கலே…
போரு போருடா…

BGM

ஆண் : குர்தா மேக்சியும் சல்வார் கமீசும்…
சுமந்த பெண்களே… ஹா ஹா ஹா ஹா…

ஆண் : எங்கே என்றுதான் இங்கே இன்றுதான்…
வருந்தும் கண்களே…
ஹையோ ஹையோ ஹையோ ஹையோ…

ஆண் : வீட்டில் நிற்குற காவல் காரரும்…
மொறச்சி பார்க்குறார்… ஆம் ஆமாமா…

ஆண் : சோலைக் கொள்ளையின் பொம்மை போலவே…
வெறச்சி போகிறார்… அட டா டா டா டா டா…

ஆண் : டிரைவின் ஹோட்டலும் சாந்தோம் பீச்சும்…
டல்லாய் தோன்றுதே பாருங்கள்…
பன்னீர் பூக்களை பார்க்காதின்று…
கண்ணீர் வார்க்கிறோம் நாங்கள்…

ஆண் : நெஞ்சம் தாங்குமா…
கண்கள் தூங்குமா…
துன்பம் நீங்குமா…

ஆண் : ஏப்ரல் மேயிலே பசுமையே இல்லே…
காஞ்சி போச்சுடா…
இந்த ஊரும் புடிக்கலே உலகம் புடிக்கலே…
போரு போருடா…

BGM

ஆண் : காலேஜ் அழகியும் கான்வெண்ட் குமரியும்…
தியேட்டர் போகுறார்… ஹோ ஹோ ஹோ ஹோ…

ஆண் : டாக்சி டிரைவரும் பார்த்து பார்த்து தான்…
மீட்டர் போடுவார்… டூ டூ டூ டூ டூ…

ஆண் : காலை மாலை தான் வேலை பார்ப்பவர்…
மகிழ்ச்சி கொள்கிறார்… ஹாஹாஹாஹா…

ஆண் : வாலைக் குமரிகள் சாலை கடக்கையில்…
வாயை பிளக்குறார்… அட டா டா டா டா டா…

ஆண் : ஸ்டெல்லா மேரிசும் குயின் மேரிசும்…
தென்றல் வீசிடும் பூந்தோட்டம்…
வஞ்சிப் பாவைகள் தோன்றும்போது…
நெஞ்சம் போடுதே ஆட்டம்…

ஆண் : எங்கள் பாடுதான்…
சக்கப் போடுதான்…
படா ஜோருதான்…

ஆண் : ஏப்ரல் மேயிலே பசுமையே இல்லே…
காஞ்சி போச்சுடா…
இந்த ஊரும் புடிக்கலே உலகம் புடிக்கலே…
போரு போருடா…

ஆண் : இது தேவையா…
அட போங்கையா…
ஜூன் ஜூலையா…

ஆண் : பட்டாம் பூச்சிகள் பறக்குது பறக்குது…
கண்ணா மூச்சிகள் நடக்குது நடக்குது…
பச்சைப் பசுமைகள் தெரியுது தெரியுது…
அழகு கிளிகள் நமது விழியில் வலம் வருதே…


Notes : April Mayile Song Lyrics in Tamil. This Song from Idhayam (1991). Song Lyrics penned by Piraisoodan. ஏப்ரல் மேயிலே பாடல் வரிகள்.


பூங்கொடிதான்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ். பி. பாலசுப்ரமணியம்இளையராஜாஇதயம்

Poongodithan Song Lyrics in Tamil


BGM

ஆண் : பூங்கொடிதான் பூத்ததம்மா…
பொன்வண்டுதான் பார்த்ததம்மா…
பாட்டெடுக்க தாமதிக்க…
வாடைக் காற்று பூப்பறித்து போனதம்மா…

ஆண் : பூங்கொடிதான் பூத்ததம்மா…
பொன்வண்டுதான் பார்த்ததம்மா…

BGM

ஆண் : ஆசைக்குத் தாழ் போட்டு அடைத்தென்ன லாபம்…
அதுதானே குடம் தன்னில் எரிகின்ற தீபம்…
மனதோடு திரை போட்டு மறைக்கின்ற மோகம்…
மழைநீரைப் பொழியாமல் இருக்கின்ற மேகம்…

ஆண் : சிலருக்குச் சில நேரம் துணிச்சல்கள் பிறக்காது…
துணிச்சல்கள் பிறக்காமல் கதவுகள் திறக்காது…
காட்டாத காதலெல்லாம் மீட்டாத வீணையைப் போல்…
ஓஹோ ஓஓ… ஓஹோ ஓஓ…

ஆண் : பூங்கொடிதான் பூத்ததம்மா…
பொன்வண்டுதான் பார்த்ததம்மா…
பாட்டெடுக்க தாமதிக்க…
வாடைக் காற்று பூப்பறித்து போனதம்மா…

ஆண் : பூங்கொடிதான் பூத்ததம்மா…
பொன்வண்டுதான் பார்த்ததம்மா…

BGM

ஆண் : தாய்கூட அழுகின்ற பி்ள்ளைக்குத்தானே…
பசியென்று பரிவோடு பாலூட்ட வருவாள்…
உன்வீட்டுக் கண்ணாடி ஆனாலும் கூட…
முன் வந்து நின்றால்தான் முகம் காட்டும் இங்கே…

ஆண் : மனதுக்குள் பலகோடி நினைவுகள் இருந்தாலும்…
உதடுகள் திறந்தால்தான் உதவிகள் பெறக்கூடும்…
கோழைக்குக் காதலென்ன ஊமைக்குப் பாடலென்ன…
ஓஹோ ஓஓ… ஓஹோ ஓஓ…

ஆண் : பூங்கொடிதான் பூத்ததம்மா…
பொன்வண்டுதான் பார்த்ததம்மா…
பாட்டெடுக்க தாமதிக்க…
வாடைக் காற்று பூப்பறித்து போனதம்மா…

ஆண் : பூங்கொடிதான் பூத்ததம்மா…
பொன்வண்டுதான் பார்த்ததம்மா…
பூங்கொடிதான் பூத்ததம்மா…
பொன்வண்டுதான் பார்த்ததம்மா…


Notes : Poongodithan Song Lyrics in Tamil. This Song from Idhayam (1991). Song Lyrics penned by Vaali. பூங்கொடிதான் பாடல் வரிகள்.


Idhayame Idhayame Song Lyrics in Tamil

இதயமே இதயமே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பிறைசூடன்எஸ். பி. பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகிஇளையராஜாஇதயம்

Idhayame Idhayame Song Lyrics in Tamil


ஆண் : இதயமே இதயமே…
உன் மெளனம் என்னைக் கொல்லுதே…
இதயமே இதயமே…
என் விரகம் என்னை வாட்டுதே…
நிலவில்லாத நீல வானம் போலவே…
உயிரில்லாமல் எனது காதல் ஆனதே…

ஆண் : இதயமே இதயமே…
உன் மெளனம் என்னைக் கொல்லுதே…
இதயமே இதயமே…

BGM

ஆண் : பனியாக உருகி நதியாக மாறி…
அலை வீசி விளையாடி இருந்தேன்…
தனியாக இருந்தும் உன் நினைவோடு வாழ்ந்து…
உயிர்க் காதல் உறவாடிக் கலந்தே நின்றேன்…

ஆண் : இது எந்தன் வாழ்வில்…
நீ போட்டக் கோலம்…
இது எந்தன் வாழ்வில்…
நீ போட்டக் கோலம்…

ஆண் : கோலம் கலைந்ததே…
புது சோகம் பிறந்ததே…
நீயில்லாத வாழ்வு இங்கு கானல்தான்…

ஆண் : இதயமே இதயமே…
உன் மெளனம் என்னைக் கொல்லுதே…
இதயமே இதயமே…

BGM

ஆண் : என் ஜீவ ராகம் கலந்தாடும் காற்று…
உன் மீது படவில்லை துடித்தேன்…
அரங்கேறும் பாடல் உலகெங்கும் கேட்டும்…
உன் நெஞ்சைத் தொடவில்லை ஏன் சொல்லம்மா…

ஆண் : இசைக்கின்ற கலைஞன் நானாகிப் போனேன்…
இசைக்கின்ற கலைஞன் நானாகிப் போனேன்…
ஜீவன் நீயம்மா என் பாடல் நீயம்மா…
நீயில்லாத வாழ்வு இங்கு கானல்தான்…

ஆண் : இதயமே இதயமே…
உன் மெளனம் என்னைக் கொல்லுதே…
இதயமே இதயமே…


Notes : Idhayame Idhayame Song Lyrics in Tamil. This Song from Idhayam (1991). Song Lyrics penned by Piraisoodan. இதயமே இதயமே பாடல் வரிகள்.


பொட்டு வைத்த ஒரு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிகே.ஜே. யேசுதாஸ்இளையராஜாஇதயம்

Pottu Vaitha Oru Song Lyrics in Tamil


ஆண் : பொட்டு வைத்த…
ஒரு வட்ட நிலா…
குளிர் புன்னகையில்…
என்னை தொட்ட நிலா…

ஆண் : பொட்டு வைத்த…
ஒரு வட்ட நிலா…
குளிர் புன்னகையில்…
என்னை தொட்ட நிலா…

ஆண் : என் மனதில்…
அம்பு விட்ட நிலா…
இது எட்ட நின்று…
என்னை சுட்ட நிலா…

ஆண் : வாழ்நாள் தோறும்…
தினம்தான் காதோரம்…
பாடல் கூறும்…

ஆண் : பொட்டு வைத்த…
ஒரு வட்ட நிலா…
குளிர் புன்னகையில்…
என்னை தொட்ட நிலா…

ஆண் : என் மனதில்…
அம்பு விட்ட நிலா…
இது எட்ட நின்று…
என்னை சுட்ட நிலா…

BGM

ஆண் : ஆறாத ஆசைகள் தோன்றும்…
என்னைத் தூண்டும்…
ஆனாலும் வாய் பேச அஞ்சும்…
இந்த நெஞ்சம்…

ஆண் : அவள் பேரை நாளும்…
அசை போடும் உள்ளம்…
அவள் போகும் பாதை…
நிழல் போல செல்லும்…

ஆண் : மௌனம் பாதி…
மோகம் பாதி…
என்னை கொல்லும்…
எந்நாளும்…

ஆண் : பொட்டு வைத்த…
ஒரு வட்ட நிலா…
குளிர் புன்னகையில்…
என்னை தொட்ட நிலா…

ஆண் : என் மனதில்…
அம்பு விட்ட நிலா…
இது எட்ட நின்று…
என்னை சுட்ட நிலா…

ஆண் : வாழ்நாள் தோறும்…
தினம்தான் காதோரம்…
பாடல் கூறும்…

ஆண் : பொட்டு வைத்த…
ஒரு வட்ட நிலா…
குளிர் புன்னகையில்…
என்னை தொட்ட நிலா…

ஆண் : என் மனதில்…
அம்பு விட்ட நிலா…
இது எட்ட நின்று…
என்னை சுட்ட நிலா…

BGM

ஆண் : யாப்போடு சேராதோ பாட்டு…
தமிழ் பாட்டு…
தோப்போடு சேராதோ…
காற்று பனிக்காற்று…

ஆண் : வினா தாள் போல் இங்கே…
கனா காணும் காலை…
விடை போலே அங்கே…
நடை போடும் பாவை…

ஆண் : ஒன்றாய் கூடும்…
ஒன்றாய் பாடும்…
பொன்னாள் இங்கு…
எந்நாளோ…

ஆண் : பொட்டு வைத்த…
ஒரு வட்ட நிலா…
குளிர் புன்னகையில்…
என்னை தொட்ட நிலா…

ஆண் : என் மனதில்…
அம்பு விட்ட நிலா…
இது எட்ட நின்று…
என்னை சுட்ட நிலா…

ஆண் : வாழ்நாள் தோறும்…
தினம்தான் காதோரம்…
பாடல் கூறும்…

ஆண் : பொட்டு வைத்த…
ஒரு வட்ட நிலா…
குளிர் புன்னகையில்…
என்னை தொட்ட நிலா…

ஆண் : என் மனதில்…
அம்பு விட்ட நிலா…
இது எட்ட நின்று…
என்னை சுட்ட நிலா…


Notes : Pottu Vaitha Oru Song Lyrics in Tamil. This Song from Idhayam (1991). Song Lyrics penned by Vaali. பொட்டு வைத்த ஒரு பாடல் வரிகள்.