Category Archives: பெரியவீட்டுப் பண்ணக்காரன்

பெரியவீட்டுப் பண்ணக்காரன் – Periya Veetu Pannakkaran (1990)

முத்து முத்து மேடை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
முத்துலிங்கம்கே.ஜே. யேசுதாஸ் & எஸ். ஜானகிஇளையராஜாபெரியவீட்டுப் பண்ணக்காரன்

Muthu Muthu Medai Song Lyrics in Tamil


BGM

பெண் : முத்து முத்து மேடை போட்டு…
பித்து கொண்டேன் ராசா ராசா…
நித்தம் நித்தம் ஒன்ன எண்ணி…
நெஞ்சம் நொந்தேன் ராசா ராசா…

பெண் : ஒன்ன எப்போ காண்பேன் கண்ணாலே… ஓ…
உள்ளுக்குள்ள சோகம் ஒன்னால… ஓ…
ஓ உருகுது உயிர் இங்கே…
நீ இருப்பதுதான் எங்கே…

ஆண் : முத்து முத்து மேடை போட்டு…
பித்து கொண்டேன் மானே மானே…
நித்தம் நித்தம் உன்னை எண்ணி…
நெஞ்சம் நொந்தேன் நானே நானே…

BGM

ஆண் : வீசும் இந்தக் காத்துல…
அந்த மேகம் கலஞ்சு போகுது…
பாடும் உந்தன் பாட்டுத்தான்…
எந்தன் காதில் வந்து கேக்குது…

பெண் : ஏதோ ஒரு ஏக்கம்தான்…
அது நாளும் என்ன வாட்டுது…
ஏதோ ஒரு ஏக்கம்தான்…
அது நாளும் என்ன வாட்டுது…
போன வழி என்ன தோணலியே…
சிறு குயிலே குயிலே சொல்லடி…

ஆண் : முத்து முத்து மேடை போட்டு…
பித்து கொண்டேன் மானே மானே…
நித்தம் நித்தம் உன்னை எண்ணி…
நெஞ்சம் நொந்தேன் நானே நானே…

BGM

பெண் : ஜோடி கிளி வாடுதே…
உன்னை தேடி மனம் ஓடுதே…
ஏனோ உந்தன் ஞாபகம்…
புயல் போலே வந்து மோதுதே…

ஆண் : காலம் இனி மாறுமா…
நம்ம காதல் ஒண்ணா சேருமா…
காலம் இனி மாறுமா…
நம்ம காதல் ஒண்ணா சேருமா…
ஆச வச்ச இந்த ஏழ செஞ்ச…
தப்பு ஏதும் உண்டா சொல்லம்மா…

ஆண் : முத்து முத்து மேடை போட்டு…
பித்து கொண்டேன் மானே மானே…
நித்தம் நித்தம் உன்னை எண்ணி…
நெஞ்சம் நொந்தேன் நானே நானே…
உன்னை எப்போ காண்பேன் கண்ணாலே… ஓ…
உள்ளுக்குள்ள சோகம் ஒன்னால… ஓ…

ஆண் : ஓ உருகுது உயிர் இங்கே…
நீ இருப்பதுதான் எங்கே…
ஓ உருகுது உயிர் இங்கே…
நீ இருப்பதுதான் எங்கே…


Notes : Muthu Muthu Medai Song Lyrics in Tamil. This Song from Periya Veetu Pannakkaran (1990). Song Lyrics penned by Muthulingam. முத்து முத்து மேடை பாடல் வரிகள்.


நிக்கட்டுமா போகட்டுமா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மு. மேத்தாமனோ & கே.எஸ். சித்ராஇளையராஜாபெரியவீட்டுப் பண்ணக்காரன்

Nikkattumaa Pogattuma Song Lyrics in Tamil


BGM

ஆண் : நிக்கட்டுமா போகட்டுமா…
நீலக்கருங்குயிலே நீலக்கருங்குயிலே…
தாவணி போய் சேலை வந்து…
சேலைத் தொடும் வேளை வந்து தாவுதடி…

பெண் : சொல்லட்டுமா தள்ளட்டுமா…
சோலைக் கருங்குயிலே சோலைக் கருங்குயிலே…

BGM

பெண் : ஓடையில் நான் அமர்ந்தேன்…
அதில் என் முகம் பார்த்திருந்தேன்…
ஓடையில் பார்த்த முகம்…
அது உன் முகம் ஆனதென்ன…
வாடையில் மாறிடும் பூவினைப்போல்…
என் நெஞ்சமும் ஆனதென்ன…

ஆண் : தேரடி வீதியிலே ஒரு தோரணம் நான் தொடுத்தேன்…
தோரண வாசலிலே ஒரு சோடியை கைப்பிடித்தேன்…
பிடித்த கரம் இணைந்திடுமா…
இணைந்திடும் நாள் வருமா…

பெண் : சொல்லட்டுமா தள்ளட்டுமா…
சோலைக் கருங்குயிலே சோலைக் கருங்குயிலே…
தாவணி போய் சேலை வரும்…
சேலையுடன் மாலை வரும் நான் வரட்டும்…

ஆண் : நிக்கட்டுமா போகட்டுமா…
நீலக்கருங்குயிலே நீலக்கருங்குயிலே…

BGM

ஆண் : ராத்திரி நேரத்திலே ஒரு ராகமும் கேட்டதடி…
கேட்டது கிடைக்குமென்று ஒரு சேதியும் சொன்னதடி…
மல்லிகை பூச்செடி பூத்தது போல்…
என் உள்ளமும் பூத்ததடி…

பெண் : அம்மனின் கோவிலிலே…
அன்று ஆசையில் நான் நடந்தேன்…
உன் மனக் கோவிலிலே…
மெட்டி ஓசையில் பின் தொடர்ந்தேன்…
நாடியது நடந்திடுமா
நடந்திடும் நாள்வருமா…

ஆண் : நிக்கட்டுமா போகட்டுமா…
நீலக்கருங்குயிலே நீலக்கருங்குயிலே…

பெண் : தாவணி போய் சேலை வந்து…
சேலையுடன் மாலை வரும் நான் வரட்டும்…

ஆண் : நிக்கட்டுமா போகட்டுமா…
நீலக்கருங்குயிலே நீலக்கருங்குயிலே…

பெண் : சோலை கருங்குயிலே சோலை கருங்குயிலே…


Notes : Nikkattumaa Pogattuma Song Lyrics in Tamil. This Song from Periya Veetu Pannakkaran (1990). Song Lyrics penned by Mu. Metha. நிக்கட்டுமா போகட்டுமா பாடல் வரிகள்.


மல்லிகையே மல்லிகையே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. காமராசன்கே.ஜே. யேசுதாஸ் & கே.எஸ். சித்ராஇளையராஜாபெரியவீட்டுப் பண்ணக்காரன்

Malligaiye Malligaiye Song Lyrics in Tamil


BGM

பெண் : மல்லிகையே மல்லிகையே தூதாகப் போ…
துள்ளி வரும் தென்றலையே நீ சேர்த்துப் போ…
நோய் கொண்டு நான் சிறு நூலாகினேன்…
தேயாமலே பிறை போல் ஆகிறேன்…
தாங்காது இனி தாங்காது…

பெண் : மல்லிகையே மல்லிகையே தூதாகப் போ…
துள்ளி வரும் தென்றலையே நீ சேர்த்துப் போ…

BGM

ஆண் : சந்திரனும் சுட்டது இங்கே…
சந்தனமும் போனது எங்கே…
சந்திரனும் சுட்டது இங்கே…
சந்தனமும் போனது எங்கே…

ஆண் : ஒத்தையிலே நிக்கிறேன் கண்ணே…
நித்திரையும் கெட்டது பெண்ணே…
ஒத்தையிலே நிக்கிறேன் கண்ணே…
நித்திரையும் கெட்டது பெண்ணே…

பெண் : மணிக் குயில் பாடும் குரல் கேட்டு வருவாயா…
தனிமையில் வந்து ஒன்று கேட்டால் தருவாயா…

ஆண் : மீண்டும் மீண்டும் நீ அதைக் கேட்டுப் பாரம்மா…

ஆண் : மல்லிகையே மல்லிகையே தூதாகப் போ…
துள்ளி வரும் தென்றலையே நீ சேர்த்துப் போ…
நோய் கொண்டு நான் சிறு நூலாகினேன்…
தேயாமலே பிறை போல் ஆகிறேன்…
தாங்காது இனி தாங்காது…

ஆண் : மல்லிகையே மல்லிகையே தூதாகப் போ…
துள்ளி வரும் தென்றலையே நீ சேர்த்துப் போ…

BGM

குழு : தனதந்த தனதந்த தனதந்த தனதந்த தனானா…
தனதந்த தனதந்த தனதந்த தனதந்த தனானா…

BGM

பெண் : என் மனசு என்னிடம் இல்லை…
ராத்திரியில் எத்தனை தொல்லை…
என் மனசு என்னிடம் இல்லை…
ராத்திரியில் எத்தனை தொல்லை…

பெண் : செண்பகமும் மல்லிகை மொட்டும்…
வந்து வந்து வாட்டுது என்னை…
செண்பகமும் மல்லிகை மொட்டும்…
வந்து வந்து வாட்டுது என்னை…

ஆண் : கனவுகள் போலே கண்ணில் நீயே வரும் நேரம்…
மனதினில் பாலும் இன்பத் தேனும் கலந்தோடும்…

பெண் : ஆடிப் பாடத்தான் வரும் ஆசைத் தேரும் நீ…

பெண் : மல்லிகையே மல்லிகையே தூதாகப் போ…
ஆண் : துள்ளி வரும் தென்றலையே நீ சேர்த்துப் போ…
பெண் : நோய் கொண்டு நான் சிறு நூலாகினேன்…
ஆண் : தேயாமலே பிறை போல் ஆகிறேன்…
ஆண் & பெண் : தாங்காது இனி தாங்காது…

ஆண் & பெண் : மல்லிகையே மல்லிகையே தூதாகப் போ…
துள்ளி வரும் தென்றலையே நீ சேர்த்துப் போ…


Notes : Malligaiye Malligaiye Song Lyrics in Tamil. This Song from Periya Veetu Pannakkaran (1990). Song Lyrics penned by Na. Kamarasan. மல்லிகையே மல்லிகையே பாடல் வரிகள்.