Category Archives: நடிகன்

நடிகன்

அடி வெளுத்து

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ். பி. பாலசுப்ரமணியம் & கே. எஸ். சித்ராஇளையராஜாநடிகன்

Adi Veluthu Song Lyrics in Tamil


குழு : வாத்தியாரே பாட்டு வாத்தியாரே…
சூட்டு கோட்டு மட்டும் மாட்டுவாரே…
சரிகம போய் படிப்போமா…
சங்கதியில் போய் குளீப்போமா…
யய்யய்யா யய்யாய்யா… ஆஆஆ…

BGM

பெண் : அடி வெளுத்துப் போச்சு தாடி…
ரொம்ப உளுத்துப் போச்சு பாடி…
இப்ப சுருங்கிப் போச்சு நாடி…
இவர் ஜெயிக்கப் போறார் பாடி…

பெண் : பார்ப்போமா உங்க எட்டுக் கட்டை சாரீரம்…
கேட்போமா உங்க தட்டுக் கெட்ட சங்கீதம்…

குழு : ஆத்தாடி அப்படி போடு வீராப்பு காட்டி…
இந்த தாத்தாதான் பொண்ணுங்களோடு போட்டாரே போட்டி…

பெண் : அடி வெளுத்துப் போச்சு தாடி…
ரொம்ப உளுத்துப் போச்சு பாடி…
இப்ப சுருங்கிப் போச்சு நாடி…
இவர் ஜெயிக்கப் போறார் பாடி…

BGM

ஆண் : வீரம் சங்கீதம் என் பாட்டன் சொத்து…
ஞானம் உண்டாகும் என் வீட்டை சுத்து…

BGM

பெண் : போதும் உன் பாட்டு நிப்பாட்டு இப்போ…
ஆந்தை செம்மாங்குயில் ஆவதெப்போ…

ஆண் : பைரவி ரஞ்சனி செஞ்ருட்டி…
என்னிடம் நின்றிடும் கையக்கட்டி…

பெண் : வச்சிக்க வச்சிக்க மூட்டைக்கட்டி…
உன்னிடம் உள்ளது ஓட்டச்சட்டி…

ஆண் : பணக்காரன் பெத்துப் போட்ட சீமாட்டியே…
வரலாமா நம்மகிட்ட வாலாட்டியே…
அடியே நீ கேட்டுப் பாரேன் ஆலாபனை…
கழுதைக்கு தெரியாதம்மா பூ வாசனை…

ஆண் : பாம கபமக ரிகமகரி…
மாம ரிமகரி ஸகரிஸரி…
ஸாஸஸாஸஸஸ ரிரிரிரிரி…
காககாககக மபமகரிஸ…

ஆண் : குதிரை வாலு கொண்டை…
இது கிட்டப்பாவின் தொண்டை…
நீங்க வச்சுக்காதே சண்டை…
அடி வீங்கிப் போகும் மண்டை…

ஆண் : கூவாதே வெறும் கூச்சல் வேணாம் இப்போது…
தாவாதே எதிர் நீச்சல் போடு என்னோடு…
ஆத்தாடி அப்படி போடு வீராப்பைக் காட்டி…
அடி கூத்தாடி குப்புற சாய்ஞ்சி போடாதே போட்டி…

BGM

ஆண் : மூக்கும் புல்லாக்கும் ஏன் மோதுதடி…
மோகம் உண்டாகும் என் பாட்டுபடி…

பெண் : மாட்டுப் புண்ணாக்கு உன் பாட்டுகள்தான்…
போடு உன் வாய்க்கு நீ பூட்டுகள்தான்…

ஆண் : முட்டையை விக்குற கோழிகளா…
முட்டிட என்னிடம் வாரீகளா…

பெண் : பட்டதும் சுட்டதும் பத்தலையா…
புத்தியும் இன்னமும் முத்தலையா…

ஆண் : பியூசி பிஎஸ்சிதான் என்னாச்சுடி…
ஏபிசி தெரியாமதான் நின்னாச்சுடி அடி…
மரவட்டை ரெயிலப் போல ஓடாதடி… ஹ்ஹூ…
கொசுவெல்லாம் குயிலப் போல பாடாதடி…

ஆண் : பாம கபமக ரிகமகரி…
மாம ரிமகரி ஸகரிஸரி…
ஸாஸஸாஸஸஸ ரிரிரிரிரி…
காககாககக மபமகரிஸ…

ஆண் : குதிரை வாலு கொண்டை…
இது கிட்டப்பாவின் தொண்டை…
நீங்க வெச்சுக்காதே சண்டை…
அடி வீங்கிப் போகும் மண்டை…

ஆண் : கூவாதே வெறும் கூச்சல் வேணாம் இப்போது…
தாவாதே எதிர் நீச்சல் போடு என்னோடு…
ஆத்தாடி அப்படி போடு வீராப்பைக் காட்டி…
அடி கூத்தாடி குப்புற சாய்ஞ்சி போடாதே போட்டி…

ஆண் : அடி குதிரை வாலு கொண்டை…
இது கிட்டப்பாவின் தொண்டை…
நீங்க வெச்சுக்காதே சண்டை…
அடி வீங்கிப் போகும் மண்டை…


Notes : Adi Veluthu Song Lyrics in Tamil. This Song from Nadigan (1990). Song Lyrics penned by Vaali. அடி வெளுத்து பாடல் வரிகள்.


ஆட்டமா பாட்டமா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ். பி. பாலசுப்ரமணியம்இளையராஜாநடிகன்

Aattama Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஆட்டமா பாட்டமா பாத்துக்கோ…
வேஷம் ஆரம்பம்…
கூட்டமா கும்பலா சேந்துக்கோ…
போடு தம் தம் தம்…

ஆண் : பாத்தா நான் தாத்தாதான்…
படிப்பேன் நான் பாட்டாதான்…

ஆண் : ஒரு நடிகன் என்று மாறியாச்சு…
பௌடர் பூசி பூசி கூச்சம் போச்சி…
ஒரு நடிகன் என்று மாறியாச்சு…
பௌடர் பூசி பூசி கூச்சம் போச்சி…

ஆண் : ஆட்டமா பாட்டமா பாத்துக்கோ…
வேஷம் ஆரம்பம்…
கூட்டமா கும்பலா சேந்துக்கோ…
போடு தம் தம் தம்…

BGM

ஆண் : நாடினேன் தேடினேன்…
நானொரு வாத்தியார் வேலை…
மாட்டினால் மாட்டலாம்…
யாரடா கண்டது நாளை… ஹோய் ஹோய் ஹோய்…

ஆண் : என்னடா செய்வது யாவுமே ஆண்டவன் லீலை…
நல்லதை எண்ணினேன் சூடலாம் வெற்றியின் மாலை…

ஆண் : நடக்க தத்தளிச்சு கால் நடக்கும்…
எனக்கு சின்னப் பெண்கள் கை கொடுக்கும்…
மதிச்சு என்னை இந்த ஊர் நடத்தும்…
கிழட்டு வேஷம் நல்ல பேரெடுக்கும்…
யாரை நான் தொட்டாலும் குத்தமில்லை…

ஆண் : நடிகன் என்று மாறியாச்சு…
பௌடர் பூசி பூசி கூச்சம் போச்சி…
ஹான் நடிகன் என்று மாறியாச்சு…
பௌடர் பூசி பூசி கூச்சம் போச்சி…

BGM

ஆண் : பொய்களை மெய்களாய் எப்பவும் நம்பிடும் பூமி…
உண்மையை பேசிடும் உத்தமன் யாரடா காமி… ஹாங்ஹாங்ஹாங்…

ஆண் : தப்புதான் காரணம் தப்புதான் செய்திட யாரும்…
உள்ளவன் யாரையும் நல்லவன் ஆக்குமே ஊரும்… ஹோய் ஹோய் ஹோய்…

ஆண் : குறத்தி வள்ளி என்னும் மானைக் கண்டு…
துரத்தி வந்து நின்ற வேலன் அன்று…
எடுத்த வேஷம் போல வேஷம் இல்லே…
எனக்கும் வாழ்க்கைதானா தோஷம் இல்லே…
யாரை நான் தொட்டாலும் குத்தமில்லை…

ஆண் : நடிகன் என்று மாறியாச்சு…
பௌடர் பூசி பூசி கூச்சம் போச்சி…
நடிகன் என்று மாறியாச்சு…
பௌடர் பூசி பூசி கூச்சம் போச்சி…

ஆண் : ஆட்டமா பாட்டமா பாத்துக்கோ…
வேஷம் ஆரம்பம்…
கூட்டமா கும்பலா சேந்துக்கோ…
போடு தம் தம் தம்…

ஆண் : பாத்தா நான் தாத்தாதான்…
படிப்பேன் நான் பாட்டாதான்…

ஆண் : ஒரு நடிகன் என்று மாறியாச்சு…
பௌடர் பூசி பூசி கூச்சம் போச்சி…
ஒரு நடிகன் என்று மாறியாச்சு…
பௌடர் பூசி பூசி கூச்சம் போச்சி…

BGM


Notes : Aattama Song Lyrics in Tamil. This Song from Nadigan (1990). Song Lyrics penned by Vaali. ஆட்டமா பாட்டமா பாடல் வரிகள்.


தேவமல்லிகை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
புலமைப்பித்தன்எஸ். பி. பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகிஇளையராஜாநடிகன்

Deva Malligai Song Lyrics in Tamil


BGM

ஆண் : தேவமல்லிகை பூவே பூவே…
தேனில் ஊறிடும் தீவே…

பெண் : பூவில் ஆடிடும் காற்றே காற்றே…
சிந்து செந்தமிழ் பாட்டே…

ஆண் : நீ காதல் சித்திரமா…
என் கண்ணின் சொப்பனமா…

பெண் : இது மோக மந்திரமா…
எனை ஏய்க்கும் தந்திரமா…

ஆண் : அடி மானே மானே ஆசை தேனே…
வா என் விழிகளின் வழியே…

பெண் : பூவில் ஆடிடும் காற்றே காற்றே…
சிந்து செந்தமிழ் பாட்டே…

ஆண் : தேவமல்லிகை பூவே பூவே…
தேனில் ஊறிடும் தீவே…

BGM

ஆண் : தென்றல் ஒரு புறம் மின்னல் ஒரு புறம்…
பெண்ணில் தெரிகிறதே…

பெண் : திங்கள் ஒருபுறம் வெய்யில் ஒரு புறம்…
கண்ணில் வருகிறதே…

ஆண் : அள்ளும் ஒரு புறம் துள்ளும் ஒரு புறம்…
இன்பம் வழிகிறதே…

பெண் : அச்சம் ஒரு புறம் வெட்கம் ஒரு புறம்…
நெஞ்சில் எழுகிறதே…

ஆண் : ஆடைக்கட்டி ஆட வந்த வானவில்லே…
ஆசை என்னும் மாலை கட்டி வாடி இங்கே…

பெண் : காதல் என்னும் நாடகத்தின் மேடை இங்கே…
காண வந்த இன்பம் என்னும் காட்சி எங்கே…

ஆண் : இனி நானும் நீயும் நாளும் கூட…
அடி மானே மானே ஆசை தேனே…
வா என் விழிகளின் வழியே…

பெண் : பூவில் ஆடிடும் காற்றே காற்றே…
சிந்து செந்தமிழ் பாட்டே…

ஆண் : தேவமல்லிகை பூவே பூவே…
தேனில் ஊறிடும் தீவே…

பெண் : இது மோக மந்திரமா…
எனை ஏய்க்கும் தந்திரமா…

ஆண் : நீ காதல் சித்திரமா…
என் கண்ணின் சொப்பனமா…

பெண் : இம்மானின் மானின் ஆசை தேனே…
வா என் விழிகளின் வழியே…

ஆண் : தேவமல்லிகை பூவே பூவே…
தேனில் ஊறிடும் தீவே…

பெண் : பூவில் ஆடிடும் காற்றே காற்றே…
சிந்து செந்தமிழ் பாட்டே…

BGM

பெண் : அள்ளிக் கொடுத்ததை சொல்லிக் கொடு…
என அன்னக்கிளி வருமே…

ஆண் : அந்திக் கதையிது சிந்தைக்கினியது…
ஆசை பனி வருமே…

பெண் : எட்டிப்பிடி எனைக் கட்டிப்பிடி என…
அஞ்சும் இடை வருமே…

ஆண் : என்றும் புதுசுகம் பொங்கும் வழியென…
கொஞ்சம் கிளி வருமே…

பெண் : காமன் அம்பை கண்ணிரெண்டில் பூட்டுகின்றாய்…
காதல் என்னும் தீயை நெஞ்சில் மூட்டுகின்றாய்…

ஆண் : வாடை தன்னில் நீயும் என்னை வாட்டுகின்றாய்…
வாலிபத்தின் ஆசை தன்னை மீட்டுகின்றாய்…

பெண் : என் ராஜா சூடும் ரோஜா பூவோ…
இம்மானின் மானின் ஆசை தேனே…
வா என் விழிகளின் வழியே…

ஆண் : தேவமல்லிகை பூவே பூவே…
தேனில் ஊறிடும் தீவே…

பெண் : பூவில் ஆடிடும் காற்றே காற்றே…
சிந்து செந்தமிழ் பாட்டே…

ஆண் : நீ காதல் சித்திரமா…
என் கண்ணின் சொப்பனமா…

பெண் : இது மோக மந்திரமா…
எனை ஏய்க்கும் தந்திரமா…

ஆண் : அடி மானே மானே ஆசை தேனே…
வா என் விழிகளின் வழியே…

பெண் : பூவில் ஆடிடும் காற்றே காற்றே…
சிந்து செந்தமிழ் பாட்டே…

ஆண் : தேவமல்லிகை பூவே பூவே…
தேனில் ஊறிடும் தீவே…


Notes : Deva Malligai Song Lyrics in Tamil. This Song from Nadigan (1990). Song Lyrics penned by Pulamaipithan. தேவமல்லிகை பாடல் வரிகள்.


எங்கே நிம்மதி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
இளையராஜாஎஸ். பி. பாலசுப்ரமணியம்இளையராஜாநடிகன்

Enge Nimmadhi Song Lyrics in Tamil


ஆண் : எங்கே நிம்மதி நிம்மதி என்று…
தேடிப் பார்த்தேன் அது எங்கேயும் இல்ல…
எங்கே நிம்மதி நிம்மதி என்று…
தேடிப் பார்த்தேன் அது எங்கேயும் இல்ல…

ஆண் : யாராரோ வந்தாங்க…
என்னென்னவோ சொன்னாங்க…
என்ன சொல்லி என்னத்த பண்ண நிம்மதி இல்லே…
மனுசனுக்கு நிம்மதி இல்லே…

ஆண் : எங்கே நிம்மதி நிம்மதி என்று…
தேடிப் பார்த்தேன் அது எங்கேயும் இல்ல…
எங்கே நிம்மதி நிம்மதி என்று…
தேடிப் பார்த்தேன் அது எங்கேயும் இல்ல…

BGM

ஆண் : பள்ளிக்கூடம் படிக்கும் போது…
பாடத்திலே நிம்மதி இல்லே…

BGM

ஆண் : பாடமின்றி விடுமுறை என்றால்…
காசு இன்றி நிம்மதி இல்லே…

BGM

ஆண் : காசுக்காக மேலே படிக்க…
கல்லூரியில் சீட்டும் இல்ல…
சீட்டும் கிடைச்சு பட்டமும் கிடைச்சா…
வேலையின்றி நிம்மதி இல்லே…

ஆண் : துன்பம் மறக்க வெளியே சென்றால்…
பெண்ணைக் கண்டு நிம்மதி இல்லே…
பெண்ணை நினைத்து படுப்போம் என்றால்…
கனவினிலும் நிம்மதி இல்லே…
அலைப்போல அலைந்தாடும் மனதுக்கு இங்கே…
கொஞ்சம் நிம்மதி வருமா…

ஆண் : எங்கே நிம்மதி நிம்மதி என்று…
தேடிப் பார்த்தேன் அது எங்கேயும் இல்ல…
எங்கே நிம்மதி நிம்மதி என்று…
தேடிப் பார்த்தேன் அது எங்கேயும் இல்ல…

BGM

ஆண் : தாயின் துன்பம் தீர்ப்போம் என்று…
வேலைக்காக வேஷம் போட்டேன்…

BGM

ஆண் : வாயில் வந்த பொய்யைச் சொல்லி…
நல்ல பேரும் வாங்கிக் கொண்டேன்…

BGM

ஆண் : வந்த இடத்தில் வாலிப வயது…
வழக்கம் போல வேலையைக் காட்ட…
மந்தகாசப் புன்னகையாலே…
கன்னியவளும் காதலைச் சொல்ல…

ஆண் : நொந்து போன மனதுக்குள்ளே…
வந்து வந்து போகும் கிழவி…
இந்த நிலையில் எவன் இருந்தாலும்…
ஆக வேண்டும் அவனே துறவி…
இருந்தாலும் போனாலும் நிம்மதி வருமா…
மனுசனுக்கு நிம்மதி வருமா…

ஆண் : எங்கே நிம்மதி நிம்மதி என்று…
தேடிப் பார்த்தேன் அது எங்கேயும் இல்ல…
எங்கே நிம்மதி நிம்மதி என்று…
தேடிப் பார்த்தேன் அது எங்கேயும் இல்ல…

ஆண் : யாராரோ வந்தாங்க…
என்னென்னவோ சொன்னாங்க…
என்ன சொல்லி என்னத்த பண்ண நிம்மதி இல்லே…
மனுசனுக்கு நிம்மதி இல்லே…

ஆண் : எங்கே நிம்மதி நிம்மதி என்று…
தேடிப் பார்த்தேன் அது எங்கேயும் இல்ல…
எங்கே நிம்மதி நிம்மதி என்று…
தேடிப் பார்த்தேன் அது எங்கேயும் இல்ல…


Notes : Enge Nimmadhi Song Lyrics in Tamil. This Song from Nadigan (1990). Song Lyrics penned by Illaiyaraja. எங்கே நிம்மதி பாடல் வரிகள்.