Category Archives: புன்னகை மன்னன்

புன்னகை மன்னன்

Yedhedho Ennam Valarthen Song Lyrics in Tamil

ஏதேதோ எண்ணம் வளர்த்தேன்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துகே.எஸ். சித்ராஇளையராஜாபுன்னகை மன்னன்

Yedhedho Ennam Valarthen Song Lyrics in Tamil


BGM

பெண் : ஏதேதோ எண்ணம் வளர்த்தேன்…
உன் கையில் என்னை கொடுத்தேன்…

பெண் : நீதானே புன்னகை மன்னன்…
உன் ராணி நானே…
பண்பாடும் பாடகன் நீயே…
உன் ராகம் நானே…

பெண் : ஏதேதோ எண்ணம் வளர்த்தேன்…

BGM

பெண் : சில காலமாய் நானும் சிறை வாழ்கிறேன்…
உன்னை பார்த்ததால்தானே உயிர் வாழ்கிறேன்…
தூக்கம் விழிக்கிறேன்…
பூக்கள் வளர்க்கிறேன்…

பெண் : சில பூக்கள்தானே மலர்கின்றது…
பல பூக்கள் ஏனோ உதிர்கின்றது…
பதில் என்ன கூறு…
பூவும் நானும் வேறு…

பெண் : ஏதேதோ எண்ணம் வளர்த்தேன்…
உன் கையில் என்னை கொடுத்தேன்…

BGM

பெண் : குலதெய்வமே எந்தன் குறை தீர்க்கவா…
கை நீட்டினேன் என்னை கரை சேர்க்கவா…
நீயே அணைக்க வா…
தீயை அணைக்க வா…

பெண் : நீ பார்க்கும் போது பணியாகிறேன்…
உன் மார்பில் சாய்ந்து குளிர் காய்கிறேன்…
எது வந்த போதும் இந்த அன்பு போதும்…

பெண் : ஏதேதோ எண்ணம் வளர்த்தேன்…
உன் கையில் என்னை கொடுத்தேன்…

பெண் : நீதானே புன்னகை மன்னன்…
உன் ராணி நானே…
பண்பாடும் பாடகன் நீயே…
உன் ராகம் நானே…

பெண் : ஏதேதோ எண்ணம் வளர்த்தேன்…
உன் கையில் என்னை கொடுத்தேன்…


Notes : Yedhedho Ennam Valarthen Song Lyrics in Tamil. This Song from Punnagai Mannan (1986). Song Lyrics penned by Vairamuthu. ஏதேதோ எண்ணம் வளர்த்தேன் பாடல் வரிகள்.


சிங்களத்து சின்னக் குயிலே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஎஸ். பி. பாலசுப்ரமணியம் & கே.எஸ். சித்ராஇளையராஜாபுன்னகை மன்னன்

Singalathu Chinnakuyile Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஜிங்கள ஜிங்கள ஜிங்கள…
ஜிங்கள ஜிங்கள ஜிங்கள ஜிங்கள…

பெண் : ஜிங்கள ஜிங்கா ஜீபூம்பா ஜிங்கள ஜிங்கா…
கன்னம் வலிக்கும் கிள்ளாதே கல்லுளி மங்கா… ஹோ…

ஆண் : சிங்களத்து சின்னக் குயிலே…
எனக்கு ஒரு மந்திரத்தை சொல்லு மயிலே…
சிங்களத்து சின்னக் குயிலே…
எனக்கு ஒரு மந்திரத்தை சொல்லு மயிலே…

ஆண் : ஜிங்கள ஜிங்கா ஜீபூம்பா ஜிங்கள ஜிங்கா…
ஜிங்கள ஜிங்கா ஜீபூம்பா ஜிங்கள ஜிங்கா… ஹோ…

BGM

ஆண் : அன்பே நீ இன்றி அலைகள் ஆடாது…
கண்கள் சாய்ந்தாலும் இமைகள் மூடாது…
பூவே நீ இன்றி பொழுதும் போகாது…
காதல் இல்லாமல் கவிதை வாழாது…

பெண் : ஆதரிக்க நல்ல இளைஞன்…
மனம் விட்டு காதலிக்க நல்ல கவிஞன்…

ஆண் : காதலிக்க வந்த கலைஞன்…
இவன் என்றும் தாவணிக்கு நல்ல தலைவன்…

பெண் : தடை ஏது தலைவா…
இடை மேலே உடை நீயே…
பூ மஞ்சம் நீ போட வா…

பெண் : எனக்கென்ன சிங்களத்து சின்னக் குயில் நான்…
உனக்கொரு மந்திரத்த சொல்லும் மயில் நான்…
சிங்களத்து சின்னக் குயில் நான்…
உனக்கொரு மந்திரத்த சொல்லும் மயில் நான்…

ஆண் : ஜிங்கள ஜிங்கா ஜீபூம்பா ஜிங்கள ஜிங்கா…
ஜிங்கள ஜிங்கா ஜீபூம்பா ஜிங்கள ஜிங்கா… ஹோ…

BGM

பெண் : நிலவே நான் தானா நிஜமா வீண் கேலி…
உந்தன் மடி தானே நிலவின் நாற்காலி…
ஒரு நாள் அமர்ந்தாலும் உலகில் நான் ராணி…
காமன் பூச்சூடும் கலையில் நீ ஞானி…

ஆண் : ஆத்திரத்தில் தொட்டு வைக்கிறேன்…
இருக்கட்டும் ராத்திரிக்கு விட்டு வைக்கிறேன்…

பெண் : விட்டு விடு தத்தளிக்கிறேன்…
என்னை விட்டு எட்டி நில்லு எச்சரிக்கிறேன்…

ஆண் : பிடிவாதம் தகுமா…
கொடி ஒன்று கனி ரெண்டு…
வாங்காமல் தாங்காதம்மா…

ஆண் : சிங்களத்து சின்னக் குயிலே…
எனக்கு ஒரு மந்திரத்த சொல்லு மயிலே…
சிங்களத்து சின்னக் குயிலே…
எனக்கு ஒரு மந்திரத்த சொல்லு மயிலே…

பெண் : ஜிங்கள ஜிங்கா ஜீபூம்பா ஜிங்கள ஜிங்கா…
கன்னம் வலிக்கும் கிள்ளாதே கல்லுளி மங்கா… ஹோ…

ஆண் : ஜிங்கள ஜிங்கா ஜீபூம்பா ஜிங்கள ஜிங்கா…
ஜிங்கள ஜிங்கா ஜீபூம்பா ஜிங்கள ஜிங்கா… ஹோ…


Notes : Singalathu Chinnakuyile Song Lyrics in Tamil. This Song from Punnagai Mannan (1986). Song Lyrics penned by Vairamuthu. சிங்களத்து சின்னக் குயிலே பாடல் வரிகள்.


என்ன சத்தம் இந்த நேரம்

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஎஸ். பி. பாலசுப்ரமணியம்இளையராஜாபுன்னகை மன்னன்

Enna Satham Intha Neram Song Lyrics in Tamil


ஆண் : என்ன சத்தம் இந்த நேரம்…
குயிலின் ஒலியா…
என்ன சத்தம் இந்த நேரம்…
நதியின் ஒலியா…
கிளிகள் முத்தம் தருதா…
அதனால் சத்தம் வருதா அடடா… ஆ…

ஆண் : என்ன சத்தம் இந்த நேரம்…
குயிலின் ஒலியா…
என்ன சத்தம் இந்த நேரம்…
நதியின் ஒலியா…

BGM

ஆண் : கன்னத்தில் முத்தத்தின் ஈரம்…
அது காயவில்லையே…
கண்களில் ஏன் அந்த கண்ணீர்…
அது யாராலே…

ஆண் : கன்னியின் கழுத்தை பார்த்தால்…
மணமாகவில்லையே…
காதலன் மடியில் பூத்தாள்…
ஒரு பூ போலே…

ஆண் : மன்னவனே உன் விழியால்…
பெண் விழியை மூடு…
ஆதரவாய் சாய்ந்து விட்டால்…
ஆரிராரோ பாடு…
ஆரிராரோ இவர் யார் எவரோ…
பதில் சொல்வார் யாரோ…

ஆண் : என்ன சத்தம் இந்த நேரம்…
குயிலின் ஒலியா…
என்ன சத்தம் இந்த நேரம்…
நதியின் ஒலியா…
கிளிகள் முத்தம் தருதா…
அதனால் சத்தம் வருதா அடடா… ஆ…

ஆண் : என்ன சத்தம் இந்த நேரம்…
குயிலின் ஒலியா…
என்ன சத்தம் இந்த நேரம்…
நதியின் ஒலியா…

BGM

ஆண் : கூந்தலில் நுழைந்த கைகள்…
ஒரு கோலம் போடுதோ…
தன்னிலை மறந்த பெண்மை…
அதை தாங்காதோ…

ஆண் : உதட்டில் துடிக்கும் வார்த்தை…
அது உலர்ந்து போனதோ…
உள்ளங்கள் துடிக்கும் ஓசை…
இசை ஆகாதோ…

ஆண் : மங்கையிவள் வாய் திறந்தால்…
மல்லிகை பூ வாசம்…
ஓடையெல்லாம் பெண் பெயரை…
உச்சரித்தே பேசும்…
யார் இவர்கள் இரு பூங்குயில்கள்…
இளம் காதல் மான்கள்…

ஆண் : என்ன சத்தம் இந்த நேரம்…
குயிலின் ஒலியா…
என்ன சத்தம் இந்த நேரம்…
நதியின் ஒலியா…
கிளிகள் முத்தம் தருதா…
அதனால் சத்தம் வருதா அடடா… ஆ…

ஆண் : என்ன சத்தம் இந்த நேரம்…
குயிலின் ஒலியா…
என்ன சத்தம் இந்த நேரம்…
நதியின் ஒலியா…


Notes : Enna Satham Intha Neram Song Lyrics in Tamil. This Song from Punnagai Mannan (1986). Song Lyrics penned by Vairamuthu. என்ன சத்தம் இந்த நேரம் பாடல் வரிகள்.