Category Archives: சிவா

சிவா – Siva (1989)

இரு விழியின் வழியே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
புலமைப்பித்தன்எஸ். பி. பாலசுப்ரமணியம் & கே.எஸ். சித்ராஇளையராஜாசிவா

Iruvizhiyin Song Lyrics in Tamil


BGM

பெண் : இரு விழியின் வழியே நீயா வந்து போனது…
இனி விடியும் வரையில் தூக்கம் என்ன ஆவது…

பெண் : இரு பார்வைகள் பரிமாறிடும்…
மன ஆசைகள் அணை மீறும்…
அணை மீறும் போது காவல் ஏது…

ஆண் : இரு விழியின் வழியே நீயா வந்து போனது…
இனி விடியும் வரையில் தூக்கம் என்ன ஆவது…

BGM

ஆண் : தொட்டில் இடும் இரு தேமாங்கனி…
என் தோளில் ஆட வேண்டுமே…

பெண் : கட்டில் இடும் உன் காமன் கிளி…
மலர் மாலை சூட வேண்டுமே…

ஆண் : கொஞ்சம் பொறு கொஞ்சம் பொறு…
தேதி ஒன்று பார்க்கிறேன்…

பெண் : கொஞ்சும் கிளி மஞ்சம் இடும்…
தேதி சொல்ல போகிறேன்…

ஆண் : கார் கால மேகம் வரும்…
பெண் : கல்யாண ராகம் தரும்…
ஆண் : பாடட்டும் நாதஸ்வரம்…
பெண் : பார்க்கட்டும் நாளும் சுகம்…

ஆண் : விடிகாலையும் இளமாலையும்…
இடை வேளையின்றி இன்ப தரிசனம்…

பெண் : விழியின் வழியே நீயா வந்து போனது…
இனி விடியும் வரையில் தூக்கம் என்ன ஆவது…

ஆண் : இரு பார்வைகள் பரிமாறிடும்…
மன ஆசைகள் அணை மீறிடும்…
அணை மீறும் போது காவல் ஏது…

பெண் : விழியின் வழியே நீயா வந்து போனது…
ஆண் : இனி விடியும் வரையில் தூக்கம் என்ன ஆவது…

BGM

ஆண் : உன் மேனியும் நிலைக்கண்ணாடியும்…
ரசம் பூச என்ன காரணம்…

BGM

பெண் : ஒவ்வொன்றிலும் உனை நீ காணலாம்…
இதை கேட்பதென்ன நாடகம்…

ஆண் : எங்கே எங்கே ஒரே தரம்…
என்னை உன்னில் பார்க்கிறேன்…

பெண் : இதோ இதோ ஒரே சுகம்…
நானும் இன்று பார்க்கிறேன்…

ஆண் : தென்பாண்டி முத்துக்களா…
பெண் : நீ சிந்தும் முத்தங்களா…
ஆண் : நோகாமல் கொஞ்சம் கொடு…
பெண் : உன் மார்பில் மஞ்சம் இடு…

பெண் : இரு தோள்களில் ஒரு வானவில்…
அது பூமி தேடி வந்த அதிசயம்…

ஆண் : விழியின் வழியே நீயா வந்து போனது…
இனி விடியும் வரையில் தூக்கம் என்ன ஆவது…

பெண் : இரு பார்வைகள் பரிமாறிடும்…
மன ஆசைகள் அணை மீறிடும்…
அணை மீறும் போது காவல் ஏது…

BGM


Notes : Iruvizhiyin Song Lyrics in Tamil. This Song from Siva (1989). Song Lyrics penned by Pulamaipithan. இரு விழியின் வழியே பாடல் வரிகள்.


Adi Vaanmathi Song Lyrics in Tamil

அடி வான்மதி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
புலமைப்பித்தன்எஸ். பி. பாலசுப்ரமணியம் & கே.எஸ். சித்ராஇளையராஜாசிவா

Adi Vaanmathi Song Lyrics in Tamil


ஆண் : அடி வான்மதி என் பார்வதி…

BGM

ஆண் : காதலி கண் பாரடி…

BGM

ஆண் : அடி வான்மதி என் பார்வதி…
காதலி கண் பாரடி…
தேடி வந்த தேவதாசை காண ஓடிவா…
அடி பார்வதி என் பார்வதி…

ஆண் : பாரு பாரு என்றேன் பார்த்தால் ஆகாதா…
பாடும் பாடல் அங்கே கேட்காதா…

ஆண் : அடி வான்மதி என் பார்வதி…

BGM

ஆண் : சின்ன ரோஜா இதழ்…
அது கன்னம் நான் என்றது…

பெண் : பாடும் புல்லாங்குழல்…
உன் பாஷை நான் என்று கூறும்…

ஆண் : கூந்தல் அல்ல தொங்கும் தோட்டம்…
தோளில் சாய்ந்தால் ஊஞ்சல் ஆட்டும்…

பெண் : தேன் தர வேண்டும்…
நீ வர வேண்டும்…
கண்வாசல் பார்த்தாடு வா… ஆஆ…

பெண் : ஒரு வான்மதி உன் பார்வதி…
காதலி என்னை காதலி…
தேவன் எந்தன் தேவதாசை காண ஏங்கினேன்…
என் தேவதாஸ் என் தேவதாஸ்…

பெண் : பாரு பாரு என்னும் பாடல் கேட்டேனே…
பாரு நானும் உன்னை பார்த்தேனே…

பெண் : ஒரு வான்மதி உன் பார்வதி…

BGM

பெண் : கோடை காலங்களில்…
குளிர் காற்று நீயாகிறாய்…

ஆண் : வாடை நேரங்களில்…
ஒரு போர்வை நீயாக வந்தாய்…

பெண் : கண்கள் நாலும் பேசும் நேரம்…
நானும் நீயும் ஊமை ஆனோம்…

ஆண் : மைவிழி ஆசை கைவளையோசை…
என்னென்று நான் சொல்லவா…

ஆண் : அடி வான்மதி என் பார்வதி…
காதலி கண் பாரடி…
தேடி வந்த தேவதாசை காண ஓடிவா…

பெண் : என் தேவதாஸ் என் தேவதாஸ்…

பெண் : பாரு பாரு என்னும் பாடல் கேட்டேனே…
பாரு நானும் உன்னை பார்த்தேனே…

ஆண் : அடி வான்மதி என் பார்வதி…
பெண் : தேவதாஸ் என் தேவதாஸ்…


Notes : Adi Vaanmathi Song Lyrics in Tamil. This Song from Siva (1989). Song Lyrics penned by Pulamaipithan.அடி வான்மதி பாடல் வரிகள்.