பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
புலமைப்பித்தன் | எஸ். பி. பாலசுப்ரமணியம் & கே.எஸ். சித்ரா | இளையராஜா | சிவா |
Iruvizhiyin Song Lyrics in Tamil
—BGM—
பெண் : இரு விழியின் வழியே நீயா வந்து போனது…
இனி விடியும் வரையில் தூக்கம் என்ன ஆவது…
பெண் : இரு பார்வைகள் பரிமாறிடும்…
மன ஆசைகள் அணை மீறும்…
அணை மீறும் போது காவல் ஏது…
ஆண் : இரு விழியின் வழியே நீயா வந்து போனது…
இனி விடியும் வரையில் தூக்கம் என்ன ஆவது…
—BGM—
ஆண் : தொட்டில் இடும் இரு தேமாங்கனி…
என் தோளில் ஆட வேண்டுமே…
பெண் : கட்டில் இடும் உன் காமன் கிளி…
மலர் மாலை சூட வேண்டுமே…
ஆண் : கொஞ்சம் பொறு கொஞ்சம் பொறு…
தேதி ஒன்று பார்க்கிறேன்…
பெண் : கொஞ்சும் கிளி மஞ்சம் இடும்…
தேதி சொல்ல போகிறேன்…
ஆண் : கார் கால மேகம் வரும்…
பெண் : கல்யாண ராகம் தரும்…
ஆண் : பாடட்டும் நாதஸ்வரம்…
பெண் : பார்க்கட்டும் நாளும் சுகம்…
ஆண் : விடிகாலையும் இளமாலையும்…
இடை வேளையின்றி இன்ப தரிசனம்…
பெண் : விழியின் வழியே நீயா வந்து போனது…
இனி விடியும் வரையில் தூக்கம் என்ன ஆவது…
ஆண் : இரு பார்வைகள் பரிமாறிடும்…
மன ஆசைகள் அணை மீறிடும்…
அணை மீறும் போது காவல் ஏது…
பெண் : விழியின் வழியே நீயா வந்து போனது…
ஆண் : இனி விடியும் வரையில் தூக்கம் என்ன ஆவது…
—BGM—
ஆண் : உன் மேனியும் நிலைக்கண்ணாடியும்…
ரசம் பூச என்ன காரணம்…
—BGM—
பெண் : ஒவ்வொன்றிலும் உனை நீ காணலாம்…
இதை கேட்பதென்ன நாடகம்…
ஆண் : எங்கே எங்கே ஒரே தரம்…
என்னை உன்னில் பார்க்கிறேன்…
பெண் : இதோ இதோ ஒரே சுகம்…
நானும் இன்று பார்க்கிறேன்…
ஆண் : தென்பாண்டி முத்துக்களா…
பெண் : நீ சிந்தும் முத்தங்களா…
ஆண் : நோகாமல் கொஞ்சம் கொடு…
பெண் : உன் மார்பில் மஞ்சம் இடு…
பெண் : இரு தோள்களில் ஒரு வானவில்…
அது பூமி தேடி வந்த அதிசயம்…
ஆண் : விழியின் வழியே நீயா வந்து போனது…
இனி விடியும் வரையில் தூக்கம் என்ன ஆவது…
பெண் : இரு பார்வைகள் பரிமாறிடும்…
மன ஆசைகள் அணை மீறிடும்…
அணை மீறும் போது காவல் ஏது…
—BGM—
Notes : Iruvizhiyin Song Lyrics in Tamil. This Song from Siva (1989). Song Lyrics penned by Pulamaipithan. இரு விழியின் வழியே பாடல் வரிகள்.