Category Archives: அக்னி நட்சத்திரம்

அக்னி நட்சத்திரம் – Agni Natchathiram (1988)

ரோஜாப்பூ

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ். ஜானகிஇளையராஜாஅக்னி நட்சத்திரம்

Roja Poo Adivanthathu Song Lyrics in Tamil


BGM

பெண் : ரோஜாப்பூ ஆடி வந்தது…
ராஜாவை தேடி வந்தது…

பெண் : பூவை கொஞ்சம் நீ சூடு…
பூவின் தேனில் நீராடு…
பேசி பேசி தீராது…
ஆசை என்றும் ஆறாது…

பெண் : லவ் லவ் என்பதா…
சொல் சொல் மன்மதா…
சொன்னால் போதுமா…
தாகம் தீருமா…

பெண் : ரோஜாப்பூ ஆடிவந்தது…
ராஜாவை தேடி வந்தது…

BGM

பெண் : நேற்று நீர்விட்டது…
இன்று வேர் விட்டது…
நெஞ்சில் அம்மாடியோ…
நூறு பூ பூத்தது…

பெண் : சின்னஞ்சிறு பருவம்…
இன்னும் கொதிப்பதோ…
சொல்லி சொல்லி பொழுதை…
இன்னும் கழிப்பதோ…

பெண் : தொடு தொடு தொடாமல்…
நிலாவின் மேனி நாளெல்லாம் தேடுதே…

பெண் : ரோஜாப்பூ ஆடி வந்தது…
ராஜாவை தேடி வந்தது…

BGM

பெண் : நீயும் அச்சம் விடு…
நூறு முத்தம் இடு…
மீதம் மிச்சம் எடு…
மேலும் சொல்லிக்கொடு…

பெண் : அந்தி பகல் இரவு சிந்தை துடிக்குது…
அந்தப்புர நினைவில் சிந்து படிக்குது…
இதோ இதோ உன்னாலே…
விடாமல் மோகம் வாட்டுது தாங்குமா…

பெண் : ரோஜாப்பூ ஆடி வந்தது…
ராஜாவை தேடி வந்தது…

பெண் : பூவை கொஞ்சம் நீ சூடு…
பூவின் தேனில் நீராடு…
பேசி பேசி தீராது…
ஆசை என்றும் ஆறாது…

பெண் : லவ் லவ் என்பதா…
சொல் சொல் மன்மதா…
சொன்னால் போதுமா தாகம் தீருமா…

பெண் : ரோஜாப்பூ ஆடி வந்தது…
ராஜாவை தேடி வந்தது…


Notes : Roja Poo Adivanthathu Song Lyrics in Tamil. This Song from Agni Natchathiram (1988). Song Lyrics penned by Vaali. ரோஜாப்பூ பாடல் வரிகள்.


தூங்காத விழிகள்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிகே.ஜே. யேசுதாஸ் & எஸ். ஜானகிஇளையராஜாஅக்னி நட்சத்திரம்

Thoongatha Vizhigal Song Lyrics in Tamil


BGM

பெண் : தூங்காத விழிகள் ரெண்டு…
உன் துணை தேடும் நெஞ்சம் ஒன்று…
செம்பூ மஞ்சம் விரித்தாலும்…
பன்னீரைத் தெளித்தாலும்…
ஆனந்தம் எனக்கேது அன்பே நீ இல்லாது…

பெண் : தூங்காத விழிகள் ரெண்டு…
உன் துணை தேடும் நெஞ்சம் ஒன்று…

BGM

ஆண் : மாமர இலை மேலே… ஆஆ ஆஆ…
மாமர இலை மேலே மார்கழி பனிப்போலே…
பூமகள் மடி மீது நான் தூங்கவோ…
மாமர இலை மேலே மார்கழி பனிப்போலே…
பூமகள் மடி மீது நான் தூங்கவோ…

பெண் : ராத்திரி பகலாக ஒருப்போதும் விலகாமல்…
ராஜனை கையேந்தி தாலாட்டவோ…

ஆண் : நாளும் நாளும் ராகம் தாளம்…
சேரும் நேரம் தீரும் பாரம்…

BGM

ஆண் : தூங்காத விழிகள் ரெண்டு…
உன் துணை தேடும் நெஞ்சம் ஒன்று…
செம்பூ மஞ்சம் விரித்தாலும்…
பன்னீரைத் தெளித்தாலும்…
ஆனந்தம் எனக்கேது அன்பே நீ இல்லாது…

ஆண் : தூங்காத விழிகள் ரெண்டு…
உன் துணை தேடும் நெஞ்சம் ஒன்று…

BGM

பெண் : ஆளில்லை சிவப்பாக அங்கமும் நெருப்பாக…
நூலிடை கொதிப்பெறும் நிலை என்னவோ…

ஆண் : ஆதியும் புரியாமல் அந்தமும் தெரியாமல்…
காதலில் அரங்கேறும் கதை அல்லவோ…

பெண் : மாதுளம் கனியாட மலராட கொடியாட…
மாருதம் உறவாடும் கலை என்னவோ…

ஆண் : வாலிபம் தடுமாற ஒரு போதை தலைக்கேற…
வார்த்தையில் விளங்காத சுவையல்லவோ…

பெண் : மேலும் மேலும் மோகம் கூடும்…
ஆண் : தேகம் யாவும் கீதம் பாடும்…

BGM

பெண் : தூங்காத விழிகள் ரெண்டு…
ஆண் : உன் துணை தேடும் நெஞ்சம் ஒன்று…
பெண் : செம்பூ மஞ்சம் விரித்தாலும்…
பன்னீரைத் தெளித்தாலும்…
ஆண் : ஆனந்தம் எனக்கேது அன்பே நீ இல்லாது…

பெண் & ஆண் : தூங்காத விழிகள் ரெண்டு…
உன் துணை தேடும் நெஞ்சம் ஒன்று…


Notes : Thoongatha Vizhigal Song Lyrics in Tamil. This Song from Agni Natchathiram (1988). Song Lyrics penned by Vaali. தூங்காத விழிகள் பாடல் வரிகள்.


Raja Rajathi Rajan Song Lyrics in Tamil

ராஜா ராஜாதி ராஜன்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஇளையராஜாஇளையராஜாஅக்னி நட்சத்திரம்

Raja Rajathi Rajan Song Lyrics in Tamil


BGM

ஆண் : ராஜா ராஜாதி ராஜன் இந்த ராஜா…
கூஜா தூக்காதே வேறு எங்கும் கூஜா…
ராஜா ராஜாதி ராஜன் இந்த ராஜா…
கூஜா தூக்காதே வேறு எங்கும் கூஜா…

ஆண் : நேற்று இல்லே நாளை இல்லே…
எப்பவும் நான் ராஜா…
நேற்று இல்லே நாளை இல்லே…
எப்பவும் நான் ராஜா…
கோட்டையில்லே கொடியுமில்லே…
அப்பவும் நான் ராஜா…

ஆண் : ராஜா ராஜாதி ராஜன் இந்த ராஜா…
கூஜா தூக்காதே வேறு எங்கும் கூஜா…

BGM

ஆண் : வரவும் செலவும் இரண்டும் இன்றி…
வரவும் செலவும் உண்டு…
உறவும் பகையும் உலகில் இன்றி…
உறவும் பகையும் உண்டு…

ஆண் : வரவும் செலவும் இரண்டும் இன்றி…
வரவும் செலவும் உண்டு…
உறவும் பகையும் உலகில் இன்றி…
உறவும் பகையும் உண்டு…

ஆண் : நெஞ்சம் விளையாடுது நித்தம் இசைபாடுது…
எங்கும் சுகமானது எங்கள் வசமானது…

ஆண் : விழியில் தெரியும் அழகு…
எதுவும் இனிமேல் நமது…
விடியும் வரையில் கொண்டாட்டம்தான்…

ஆண் : விழியில் தெரியும் அழகு…
எதுவும் இனிமேல் நமது…
விடியும் வரையில் கொண்டாட்டம்தான்…

ஆண் : நிலவும் மலரும் செடியும் கொடியும்…
கடலும் நதியும் கவிதை சொல்லும்…

ஆண் : ராஜா ராஜாதி ராஜன் இந்த ராஜா…
கூஜா தூக்காதே வேறு எங்கும் கூஜா…
ராஜா ராஜாதி ராஜன் இந்த ராஜா…
கூஜா தூக்காதே வேறு எங்கும் கூஜா…

ஆண் : நேற்று இல்லே நாளை இல்லே…
எப்பவும் நான் ராஜா…
நேற்று இல்லே நாளை இல்லே…
எப்பவும் நான் ராஜா…
கோட்டையில்லே கொடியுமில்லே…
அப்பவும் நான் ராஜா…

ஆண் : ராஜா ராஜாதி ராஜன் இந்த ராஜா…
கூஜா தூக்காதே வேறு எங்கும் கூஜா…

BGM

ஆண் : இடையும் உடையும் இரண்டும் இன்றி…
இடையும் உடையும் உண்டு…
மானும் மீனும் இரண்டும் இன்றி…
மானும் மீனும் உண்டு…

ஆண் : இடையும் உடையும் இரண்டும் இன்றி…
இடையும் உடையும் உண்டு…
மானும் மீனும் இரண்டும் இன்றி…
மானும் மீனும் உண்டு…

ஆண் : உள்ளம் அலைபாயுது எண்ணம் அசைபோடுது…
கண்கள் வலைவீசுது காதல் விலை பேசுது…

ஆண் : விழியில் பொங்கும் அருவி…
மழலை கொஞ்சும் குருவி…
தெருவில் சென்றால் தேரோட்டம்தான்…

ஆண் : விழியில் பொங்கும் அருவி…
மழலை கொஞ்சும் குருவி…
தெருவில் சென்றால் தேரோட்டம்தான்…

ஆண் : நிலவும் மலரும் செடியும் கொடியும்…
கடலும் நதியும் கவிதை சொல்லும்…

ஆண் : ராஜா ராஜாதி ராஜன் இந்த ராஜா…
கூஜா தூக்காதே வேறு எங்கும் கூஜா…
ராஜா ராஜாதி ராஜன் இந்த ராஜா…
கூஜா தூக்காதே வேறு எங்கும் கூஜா…

ஆண் : நேற்று இல்லே நாளை இல்லே…
எப்பவும் நான் ராஜா…
நேற்று இல்லே நாளை இல்லே…
எப்பவும் நான் ராஜா…
கோட்டையில்லே கொடியுமில்லே…
அப்பவும் நான் ராஜா…

ஆண் : ராஜா ராஜாதி ராஜன் இந்த ராஜா…
கூஜா தூக்காதே வேறு எங்கும் கூஜா…
ராஜா ராஜாதி ராஜன் இந்த ராஜா…
கூஜா தூக்காதே வேறு எங்கும் கூஜா…


Notes : Raja Rajathi Rajan Song Lyrics in Tamil. This Song from Agni Natchathiram (1988). Song Lyrics penned by Vaali. ராஜா ராஜாதி ராஜன் பாடல் வரிகள்.


வா வா அன்பே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிகே.ஜே. யேசுதாஸ் & கே.எஸ். சித்ராஇளையராஜாஅக்னி நட்சத்திரம்

Va Va Anbe Song Lyrics in Tamil


BGM

ஆண் : வா வா அன்பே அன்பே…
காதல் நெஞ்சே நெஞ்சே…

ஆண் : உன் வண்ணம் உன் எண்ணம்…
எல்லாமே என் சொந்தம்…
இதயம் முழுதும் எனது வசம்…

பெண் : வா வா அன்பே அன்பே…
காதல் நெஞ்சே நெஞ்சே…

BGM

ஆண் : நீலம் கொண்ட கண்ணும்…
நேசம் கொண்ட நெஞ்சும்…
காலம்தோறும் என்னை சேரும் கண்மணி…

ஆண் : பூவை இங்கு சூடும்…
பூவும் பொட்டும் யாவும்…
மன்னன் எந்தன் பேரை கூறும் பொன்மணி…

பெண் : காலை மாலை ராத்திரி…
காதல் கொண்ட பூங்கொடி…
ஆணை போடலாம்…
அதில் நீயும் ஆடலாம்…

பெண் : காலை மாலை ராத்திரி…
காதல் கொண்ட பூங்கொடி…
ஆணை போடலாம்…
அதில் நீயும் ஆடலாம்…

ஆண் : நீ வாழத்தானே வாழ்கின்றேன் நானே…
பெண் : நீ இன்றி ஏது பூ வைத்த மானே…
ஆண் : இதயம் முழுதும் எனது வசம்…

பெண் : வா வா அன்பே அன்பே…
ஆண் : காதல் நெஞ்சே நெஞ்சே…

BGM

பெண் : கண்ணன் வந்து துஞ்சும்…
கட்டில் இந்த நெஞ்சம்…
கானல் அல்ல காதல் என்னும் காவியம்…

பெண் : அன்றும் இன்றும் என்றும்…
உந்தன் கையில் தஞ்சம்…
பாவை அல்ல பார்வை பேசும் ஓவியம்…

ஆண் : காற்றில் வாங்கும் மூச்சிலும்…
கன்னி பேசும் பேச்சிலும்…
நெஞ்சமானது உந்தன் தஞ்சமானது…

ஆண் : காற்றில் வாங்கும் மூச்சிலும்…
கன்னி பேசும் பேச்சிலும்…
நெஞ்சமானது உந்தன் தஞ்சமானது…

பெண் : உன் தோளில்தானே பூமாலை நானே…
ஆண் : சூடாமல் போனால் வாடாதோ மானே…
பெண் : இதயம் முழுதும் எனது வசம்…

ஆண் : வா வா அன்பே அன்பே…
பெண் : காதல் நெஞ்சே நெஞ்சே…

ஆண் : உன் வண்ணம் உன் எண்ணம்…
பெண் : எல்லாமே என் சொந்தம்…
ஆண் : இதயம் முழுதும் எனது வசம்…

பெண் : வா வா அன்பே அன்பே…
ஆண் : காதல் நெஞ்சே நெஞ்சே…


Notes : Va Va Anbe Song Lyrics in Tamil. This Song from Agni Natchathiram (1988). Song Lyrics penned by Vaali. வா வா அன்பே பாடல் வரிகள்.


ஒரு பூங்காவனம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ். ஜானகிஇளையராஜாஅக்னி நட்சத்திரம்

Oru Poongavanam Song Lyrics in Tamil


BGM

பெண் : ஒரு பூங்காவனம் புதுமணம்…
அதில் ரோமாஞ்சனம் தினம்தினம்…
உலாவரும் கனாக்கள் கண்ணிலே…
ஓராயிரம் வினாக்கள் நெஞ்சிலே…

பெண் : ஒரு பூங்காவனம் புதுமணம்…

BGM

பெண் : நான் காலை நேரத் தாமரை…
என் கானம் யாவும் தேன்மழை…
நான் கால் நடக்கும் தேவதை…
என் கோவில் இந்த மாளிகை…

பெண் : எந்நாளும் தென்றல் வந்து வீசிடும்…
என்னோடு தோழி போலப் பேசிடும்…
உலாவரும் கனாக்கள் கண்ணிலே…
ஓராயிரம் வினாக்கள் நெஞ்சிலே…

பெண் : ஒரு பூங்காவனம் புதுமணம்…

BGM

பெண் : நான் வானவில்லை வேண்டினால்…
ஓர் விலை கொடுத்து வாங்குவேன்…
வெண் மேகக் கூட்டம் யாவையும்…
என் மெத்தையாக்கி தூங்குவேன்…

பெண் : சந்தோஷப் பூக்கள் எந்தன் சோலையில்…
சங்கீதம் பாடும் அந்தி மாலையில்…
உலா வரும் கனாக்கள் கண்ணிலே…
ஓராயிரம் வினாக்கள் நெஞ்சிலே…

பெண் : ஒரு பூங்காவனம் புதுமணம்…
உலாவரும் கனாக்கள் கண்ணிலே…
ஓராயிரம் வினாக்கள் நெஞ்சிலே…

பெண் : ஒரு பூங்காவனம் புதுமணம்…


Notes : Oru Poongavanam Song Lyrics in Tamil. This Song from Agni Natchathiram (1988). Song Lyrics penned by Vaali. ஒரு பூங்காவனம் பாடல் வரிகள்.


நின்னுக்கோரி வர்ணம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிகே.எஸ். சித்ராஇளையராஜாஅக்னி நட்சத்திரம்

Ninnukkori Song Lyrics in Tamil


BGM

பெண் : நின்னுக்கோரி வர்ணம் வர்ணம்…
இசைத்திட என்னைத்தேடி வரணும் வரணும்…

பெண் : ஒரு கிளி தனித்திருக்க…
உனக்கெனத் தவமிருக்க…
இரு விழி சிவந்திருக்க…
இதழ் மட்டும் வெளுத்திருக்க…
அழகிய ரகுவரனே அனுதினமும்…

பெண் : நின்னுக்கோரி வர்ணம் வர்ணம்…
இசைத்திட என்னைத்தேடி வரணும் வரணும்…

BGM

பெண் : உன்னைத்தான் சின்னப்பெண் ஏதோ கேட்க…
உள்ளுக்குள் அங்கங்கே ஏக்கம் தாக்க…
மொட்டுத்தான் மெல்லத்தான் பூப்போல் பூக்க…
தொட்டுப்பார் கட்டிப்பார் தேகம் வேர்க்க…

பெண் : பூஜைக்காக வாடுது…
தேவன் உன்னைத் தேடுது…
ஆசை நெஞ்சம் ஏங்குது…
ஆட்டம் போட்டுத் தூங்குது…

பெண் : உன்னோடு நான் ஓயாமல்…
தேனாற்றிலே நீராட நினைக்கையில்…

பெண் : நின்னுக்கோரி வர்ணம் வர்ணம்…
இசைத்திட என்னைத்தேடி வரணும் வரணும்…

பெண் : ஒரு கிளி தனித்திருக்க…
உனக்கெனத் தவமிருக்க…
இரு விழி சிவந்திருக்க…
இதழ் மட்டும் வெளுத்திருக்க…
அழகிய ரகுவரனே அனுதினமும்…

பெண் : நின்னுக்கோரி வர்ணம் வர்ணம்…
இசைத்திட என்னைத்தேடி வரணும் வரணும்…

BGM

பெண் : பெண்ணல்ல வீணை நான் நீதான் மீட்டு…
என்னென்ன ராகங்கள் நீதான் காட்டு…
இன்றல்ல நேற்றல்ல காலம்தோறும்…
உன்னோடு பின்னோடும் காதல் நெஞ்சம்…

பெண் : வண்ணப்பாவை மோகனம்…
வாடிப்போன காரணம்…
கன்னித்தோகை மேனியில்…
மின்னல் பாய்ச்சும் வாலிபம்…

பெண் : உன் ஞாபகம் நீங்காமல்…
என் நெஞ்சிலே தீயாக கொதிக்குது…

பெண் : நின்னுக்கோரி வர்ணம் வர்ணம்…
இசைத்திட என்னைத்தேடி வரணும் வரணும்…

பெண் : ஒரு கிளி தனித்திருக்க…
உனக்கெனத் தவமிருக்க…
இரு விழி சிவந்திருக்க…
இதழ் மட்டும் வெளுத்திருக்க
அழகிய ரகுவரனே அனுதினமும்…

பெண் : நின்னுக்கோரி வர்ணம் வர்ணம்…
இசைத்திட என்னைத்தேடி வரணும் வரணும்…


Notes : Ninnukkori Song Lyrics in Tamil. This Song from Agni Natchathiram (1988). Song Lyrics penned by Vaali. நின்னுக்கோரி வர்ணம் பாடல் வரிகள்.