Category Archives: வசந்த மாளிகை

Mayakkam Enna Song Lyrics in Tamil

மயக்கமென்ன

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கண்ணதாசன்டி.எம்.சௌந்தரராஜன் & பி. சுசீலாகே.வி. மகாதேவன்வசந்த மாளிகை

Mayakkam Enna Song Lyrics in Tamil


BGM

ஆண் : மயக்கமென்ன…
இந்த மௌனம் என்ன…
மணி மாளிகைதான் கண்ணே…

ஆண் : மயக்கமென்ன…
இந்த மௌனம் என்ன…
மணி மாளிகைதான் கண்ணே…

ஆண் : தயக்கமென்ன…
இந்த சலனமென்ன…
அன்பு காணிக்கைதான் கண்ணே…

பெண் : கற்பனையில் வரும் கதைகளிலே…
நான் கேட்டதுண்டு கண்ணா…
என் காதலுக்கே வரும் காணிக்கை என்றே…
நினைத்ததில்லை கண்ணா…

BGM

ஆண் : தேர் போலே ஒரு பொன்னூஞ்சல்…
அதில் தேவதை போலே நீ ஆட…

பெண் : பூவாடை வரும் மேனியிலே…
உன் புன்னகை இதழ்கள் விளையாட…

ஆண் : கார்காலம் என விரிந்த கூந்தல்…
கன்னத்தின் மீதே கோலமிட…

பெண் : கை வளையும் மை விழியும்…
கட்டி அணைத்து கவி பாட…

ஆண் : மயக்கமென்ன…
பெண் : ம்ம் ஹ்ம்ம்…
ஆண் : இந்த மௌனம் என்ன…
பெண் : ஆஹா…
ஆண் : மணி மாளிகைதான் கண்ணே…

BGM

ஆண் : பாடி வரும் வண்ண நீரோடை…
உன்னை பாத பூஜை செய்து வர…

பெண் : ஓடி வரும் அந்த ஓடையிலே…
உன் உள்ளமும் சேர்ந்து மிதந்து வர…

ஆண் : மல்லிகை காற்று மெல்லிடை மீது…
மந்திரம் போட்டு தாலாட்ட…

பெண் : வள்ளி மலைத்தேன் அள்ளி எழுந்த…
வண்ண இதழ் உன்னை நீராட்ட…

ஆண் : மயக்கமென்ன…
பெண் : ஆஹா…
ஆண் : இந்த மௌனம் என்ன…
பெண் : ஆஆஆ…
ஆண் : மணி மாளிகைதான் கண்ணே…

BGM

ஆண் : அன்னத்தை தொட்ட கைகளினால்…
மது கிண்ணத்தை இனி நான் தொடமாட்டேன்…

பெண் : கன்னத்தில் இருக்கும் கிண்ணத்தை எடுத்து…
மது அருந்தாமல் விடமாட்டேன்…

ஆண் : உன்னையல்லால் ஒரு பெண்ணை இனி நான்…
உள்ளத்தினாலும் தொடமாட்டேன்…

பெண் : உன் உள்ளம் இருப்பது என்னிடமே…
அதை உயிர் போனாலும் தர மாட்டேன்…

ஆண் : மயக்கமென்ன…
பெண் : ஆஹா…
ஆண் : இந்த மௌனம் என்ன…
பெண் : ஆஆஆ…
ஆண் : மணி மாளிகைதான் கண்ணே…
பெண் : ஆஆஆ…

ஆண் : தயக்கமென்ன…
பெண் : ஆஹாஹா…
ஆண் : இந்த சலனமென்ன…
பெண் : ஆஹாஹா…
ஆண் : அன்பு காணிக்கைதான் கண்ணே…
அன்பு காணிக்கைதான் கண்ணே…
பெண் : ஆஹாஹா ஹாஆ…


Notes : Mayakkam Enna Song Lyrics in Tamil. This Song from Vasantha Maligai (1972). Song Lyrics penned by Kannadasan. மயக்கமென்ன பாடல் வரிகள்.


யாருக்காக

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கண்ணதாசன்டி.எம்.சௌந்தரராஜன்கே.வி.மகாதேவன்வசந்த மாளிகை

Yarukkaga Song Lyrics in Tamil


ஆண் : யாருக்காக…
இது யாருக்காக…
இந்த மாளிகை வசந்த மாளிகை…
காதல் ஓவியம் கலைந்த மாளிகை…

ஆண் : யாருக்காக…
இது யாருக்காக…
இந்த மாளிகை வசந்த மாளிகை…
காதல் ஓவியம் கலைந்த மாளிகை…

ஆண் : யாருக்காக…
இது யாருக்காக…
காதலே போ போ…
சாதலே வா வா…

BGM

ஆண் : மரணம் என்னும் தூது வந்தது…
அது மங்கை என்னும் வடிவில் வந்தது…
மரணம் என்னும் தூது வந்தது…
அது மங்கை என்னும் வடிவில் வந்தது…

ஆண் : சொர்கமாக நான் நினைத்தது…
இன்று நரகமாக மாறிவிட்டது…

ஆண் : யாருக்காக…
இது யாருக்காக…

BGM

ஆண் : மலரைதானே நான் பறித்தது…
கை முள்ளின் மீது ஏன் விழுந்தது…
உறவைதானே நான் நினைத்தது…
என்னை பிரிவு வந்து ஏன் அழைத்தது…

BGM

ஆண் : எழுதுங்கள் என் கல்லறையில்…
அவள் இரக்கமில்லாதவள் என்று…
பாடுங்கள் என் கல்லறையில்…
இவன் பைத்தியக்காரன் என்று…

ஆண் : கண்கள் தீட்டும் காதல் என்பது…
அது கண்ணில் நீரை வர வழைப்பது…
பெண்கள் காட்டும் அன்பு என்பது…
நம்மை பித்தனாக்கி அலைய வைப்பது…

ஆண் : யாருக்காக…

BGM

ஆண் : எங்கிருந்து சொந்தம் வந்தது…
இன்று எங்கிருந்து நஞ்சு வந்தது…
எங்கிருந்து சொந்தம் வந்தது…
இன்று எங்கிருந்து நஞ்சு வந்தது…

ஆண் : அங்கிருந்து ஆட்டுகின்றவன்…
தினம் ஆடுகின்ற நாடகம் இது…

ஆண் : யாருக்காக…
இது யாருக்காக…
இந்த மாளிகை வசந்த மாளிகை…
காதல் ஓவியம் கலைந்த மாளிகை…

ஆண் : யாருக்காக…
இது யாருக்காக…
யாருக்காக… யாருக்காக…


Notes : Yarukkaga Song Lyrics in Tamil. This Song from Vasantha Maligai (1972). Song Lyrics penned by Kannadasan. யாருக்காக பாடல் வரிகள்.


ஒரு கிண்ணத்தை ஏந்துகின்றேன்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கண்ணதாசன்டி.எம்.சௌந்தரராஜன், L. R. ஈஸ்வரி & பி.வசந்தாகே.வி.மகாதேவன்வசந்த மாளிகை

Oru Kinnathai Song Lyrics in Tamil


ஆண் : ஏன்… ஏன்… ஏன்…
ஒரு கிண்ணத்தை ஏந்துகின்றேன்…
ஏன் ஏன் ஏன்…
பல எண்ணத்தில் நீந்துகின்றேன்… ஏன்…

ஆண் : ஒரு கிண்ணத்தை ஏந்துகின்றேன்…
ஏன் ஏன் ஏன்…
பல எண்ணத்தில் நீந்துகின்றேன்… ஏன்…
ஒரு கிண்ணத்தை ஏந்துகின்றேன்…
ஏன் ஏன் ஏன்…

BGM

பெண் : தக்க தக்க திமி தாளம் ஜதியோடு…
கயல் நடமாட…
அவள் மையல் உறவாட…

ஆண் : தக்க தக்க திமி தாளம் ஜதியோடு…
கயல் நடமாட…
அவள் மையல் உறவாட…

ஆண் : இரு பக்கத்திலே சிலர்…
பட்டு முகத்தினர்…
தொட்டு விளையாட…
கை கட்டு வளையாட… ஹா ஹா…

ஆண் : ஒரு கிண்ணத்தை ஏந்துகின்றேன்…
பல எண்ணத்தில் நீந்துகின்றேன்… ஏன்…
ஒரு கிண்ணத்தை ஏந்துகின்றேன்…
ஏன் ஏன் ஏன்…

BGM

பெண் : சொர்கம் இருப்பது உண்மை என்றால்…
அது பக்கத்தில் நிர்க்கட்டுமே…
வெறும் வெட்கங்கள் ஒடட்டுமே…

ஆண் : சொர்கம் இருப்பது உண்மை என்றால்…
அது பக்கத்தில் நிர்க்கட்டுமே…
வெறும் வெட்கங்கள் ஒடட்டுமே…

ஆண் : இந்த கொக்குக்கு தேவை கூரிய மூக்கினுள்…
சிக்கிடும் மீன்மட்டுமே…
இதன் தேவைகள் வாழட்டுமே… ஹே ஹே…

ஆண் : ஒரு கிண்ணத்தை ஏந்துகின்றேன்…
பல எண்ணத்தில் நீந்துகின்றேன்… ஏன்…
ஒரு கிண்ணத்தை ஏந்துகின்றேன்…
ஏன் ஏன் ஏன்…

BGM

பெண் : ஆஆஆ… கட்டழகானதோர் கற்பனை ராஜ்யம்…
கட்டி முடிந்ததடா…
அதில் கட்டில் அமைந்ததடா…

ஆண் : கட்டழகானதோர் கற்பனை ராஜ்யம்…
கட்டி முடிந்ததடா…
அதில் கட்டில் அமைந்ததடா…

ஆண் : கொடும் சட்டங்கள் தர்மங்கள் ஏதும் இல்லை…
இன்ப சக்கரம் சுத்துதடா… ஹா ஹா ஹா…
அதில் நான் சக்ரவத்தியடா… ஹே ஹே…

ஆண் : ஒரு கிண்ணத்தை ஏந்துகின்றேன்…
பல எண்ணத்தில் நீந்துகின்றேன்… ஏன்…
ஒரு கிண்ணத்தை ஏந்துகின்றேன்…
ஏன் ஏன் ஏன்…

ஆண் : டா டா டா… லா லா லா…
ஆ ஆ ஆ… லா லா லா…
டா டா டா… லா லா லா…
ஆ ஆ ஆ… ஓ ஓ ஓ…
ஆ ஆ ஆ… ம் ம் ம்…
ஆ ஆ ஆ… ஓ ஹோ…


Notes : Oru Kinnathai Song Lyrics in Tamil. This Song from Vasantha Maligai (1972). Song Lyrics penned by Kannadasan. ஒரு கிண்ணத்தை ஏந்துகின்றேன் பாடல் வரிகள்.