பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
கண்ணதாசன் | டி.எம்.சௌந்தரராஜன் & பி. சுசீலா | கே.வி. மகாதேவன் | வசந்த மாளிகை |
Mayakkam Enna Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : மயக்கமென்ன…
இந்த மௌனம் என்ன…
மணி மாளிகைதான் கண்ணே…
ஆண் : மயக்கமென்ன…
இந்த மௌனம் என்ன…
மணி மாளிகைதான் கண்ணே…
ஆண் : தயக்கமென்ன…
இந்த சலனமென்ன…
அன்பு காணிக்கைதான் கண்ணே…
பெண் : கற்பனையில் வரும் கதைகளிலே…
நான் கேட்டதுண்டு கண்ணா…
என் காதலுக்கே வரும் காணிக்கை என்றே…
நினைத்ததில்லை கண்ணா…
—BGM—
ஆண் : தேர் போலே ஒரு பொன்னூஞ்சல்…
அதில் தேவதை போலே நீ ஆட…
பெண் : பூவாடை வரும் மேனியிலே…
உன் புன்னகை இதழ்கள் விளையாட…
ஆண் : கார்காலம் என விரிந்த கூந்தல்…
கன்னத்தின் மீதே கோலமிட…
பெண் : கை வளையும் மை விழியும்…
கட்டி அணைத்து கவி பாட…
ஆண் : மயக்கமென்ன…
பெண் : ம்ம் ஹ்ம்ம்…
ஆண் : இந்த மௌனம் என்ன…
பெண் : ஆஹா…
ஆண் : மணி மாளிகைதான் கண்ணே…
—BGM—
ஆண் : பாடி வரும் வண்ண நீரோடை…
உன்னை பாத பூஜை செய்து வர…
பெண் : ஓடி வரும் அந்த ஓடையிலே…
உன் உள்ளமும் சேர்ந்து மிதந்து வர…
ஆண் : மல்லிகை காற்று மெல்லிடை மீது…
மந்திரம் போட்டு தாலாட்ட…
பெண் : வள்ளி மலைத்தேன் அள்ளி எழுந்த…
வண்ண இதழ் உன்னை நீராட்ட…
ஆண் : மயக்கமென்ன…
பெண் : ஆஹா…
ஆண் : இந்த மௌனம் என்ன…
பெண் : ஆஆஆ…
ஆண் : மணி மாளிகைதான் கண்ணே…
—BGM—
ஆண் : அன்னத்தை தொட்ட கைகளினால்…
மது கிண்ணத்தை இனி நான் தொடமாட்டேன்…
பெண் : கன்னத்தில் இருக்கும் கிண்ணத்தை எடுத்து…
மது அருந்தாமல் விடமாட்டேன்…
ஆண் : உன்னையல்லால் ஒரு பெண்ணை இனி நான்…
உள்ளத்தினாலும் தொடமாட்டேன்…
பெண் : உன் உள்ளம் இருப்பது என்னிடமே…
அதை உயிர் போனாலும் தர மாட்டேன்…
ஆண் : மயக்கமென்ன…
பெண் : ஆஹா…
ஆண் : இந்த மௌனம் என்ன…
பெண் : ஆஆஆ…
ஆண் : மணி மாளிகைதான் கண்ணே…
பெண் : ஆஆஆ…
ஆண் : தயக்கமென்ன…
பெண் : ஆஹாஹா…
ஆண் : இந்த சலனமென்ன…
பெண் : ஆஹாஹா…
ஆண் : அன்பு காணிக்கைதான் கண்ணே…
அன்பு காணிக்கைதான் கண்ணே…
பெண் : ஆஹாஹா ஹாஆ…
Notes : Mayakkam Enna Song Lyrics in Tamil. This Song from Vasantha Maligai (1972). Song Lyrics penned by Kannadasan. மயக்கமென்ன பாடல் வரிகள்.