அகரமுதல

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கண்ணதாசன்டி.எம். சௌந்தரராஜன்கே.வி. மகாதேவன்சரஸ்வதி சபதம்

Agaramuthala Song Lyrics in Tamil


ஆண் : அகரமுதல எழுத்தெல்லாம் அறியவைத்தாய் தேவி…
ஆதி பகவன் முதலென்றே உணர வைத்தாய் தேவி…

ஆண் : இயல் இசை நாடக தீபம் ஏற்றி வைத்தாய் நீயே…
ஈன்றவர் நெஞ்சை இன்று குளிர வைத்தாய் தாயே…

BGM

ஆண் : அகரமுதல எழுத்தெல்லாம் அறியவைத்தாய் தேவி…
அகரமுதல எழுத்தெல்லாம் அறியவைத்தாய் தேவி…

BGM

ஆண் : ஆதி பகவன் முதலென்றே உணர வைத்தாய் தேவி…
ஆதி பகவன் முதலென்றே உணர வைத்தாய் தேவி…

ஆண் : அகரமுதல எழுத்தெல்லாம் அறியவைத்தாய் தேவி…

BGM

ஆண் : இயல் இசை நாடக தீபம் ஏற்றி வைத்தாய்…
இயல் இசை நாடக தீபம் ஏற்றி வைத்தாய்…

ஆண் : ஈன்றவர் நெஞ்சை இன்று குளிர வைத்தாய்…
ஈன்றவர் நெஞ்சை இன்று குளிர வைத்தாய்…

ஆண் : உயிர் மெய் எழுத்தெல்லாம் தெரிய வைத்தாய்…
உயிர் மெய் எழுத்தெல்லாம் தெரிய வைத்தாய்…

ஆண் : ஊமையின் வாய் திறந்து பேச வைத்தாய்…
அம்மா பேசவைத்தாய்…

ஆண் : அகரமுதல எழுத்தெல்லாம் அறியவைத்தாய் தேவி…

BGM

ஆண் : எண்ணும் எழுத்து எண்ணும் கண் திறந்தாய்…
எண்ணும் எழுத்து எண்ணும் கண் திறந்தாய்…

ஆண் : ஏற்றம் தரும் புலமை ஆற்றல் தந்தாய்…
ஏற்றம் தரும் புலமை ஆற்றல் தந்தாய்…

ஆண் : ஐயம் தெளிய வைத்து அறிவு தந்தாய்…
ஐயம் தெளிய வைத்து அறிவு தந்தாய்…

ஆண் : ஒளி தந்து மொழி தந்து குரல் தந்தாய்…
ஒளி தந்து மொழி தந்து குரல் தந்தாய்…

ஆண் : ஓம்கார இசை தந்து உயர வைத்தாய் தேவி…

BGM

ஆண் : போற்றவைத்து புகழ் சாற்றவைத்து…
அறிவூற்றினோடு உயர் ஆற்றல் தந்து என்னை…
அறிஞன் கவிஞன் கலைஞன் இவன் என…
அருளும் தமிழும் திகழும் கடல் என…

BGM

ஆண் : கற்றவரும் கொற்றவரும் முற்றுமே அறிந்தவரும்…
நித்தம் நித்தம் புகழ்ந்திட நின்னருளை தந்து அருள்வாய்…

ஆண் : உற்றார் சுற்றம் உறவினர் மாந்தரை…
யானை சேனை படையுடை வேந்தரு…

BGM

ஆண் : பற்றும் பற்றை நீக்கிய ஞானி…
பலரும் புகழ்ந்திட ஆக்கிய வாணி…

BGM

ஆண் : தாய் இல்லாத பிள்ளை என்று…
வாய் இல்லாத ஊமை என்று…
ஆயிரங்கள் ஆன கல்வி…
வாய் திறந்து தந்த செல்வி…

ஆண் : அன்னை உன்னை சரணம் அடைந்தேன்…
தேவி…


Notes : Agaramuthala Song Lyrics in Tamil. This Song from Saraswathi Sabatham (1966). Song Lyrics penned by Kannadasan. அகரமுதல பாடல் வரிகள்.