yaaro-en-nenjai-song-lyrics-in-tamil

யாரோ என் நெஞ்சை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைசாகர் & சுமங்காதேவி ஸ்ரீ பிரசாத்குட்டி

Yaaro En Nenjai Song Lyrics in Tamil


BGM

ஆண் : யாரோ என் நெஞ்சை தீண்டியது…
ஒரு விரலாலே…
தூங்கும் என் உயிரை தூண்டியது…

ஆண் : யாரோ என் கனவில் பேசியது…
இரு விழியாலே…
வாசம் வரும் பூக்கள் வீசியது…

ஆண் : தூரத்தில் நீ வந்தால்…
என் நெஞ்சில் பூகம்பம்…
மேகங்கள் இல்லாமல்… மழை
சாரல் ஆரம்பம்…

ஆண் : முதலும் ஒரு முடிவும்…
என் வாழ்வில் நீதானே…

ஆண் : நிலவாக உன்னை வானில் பார்த்தேன்…
அலையாக உன்னை கடலில் பார்த்தேன்…
சிலையாக கருங்கல்லில் கூட உன்னை பார்த்தேனே…

ஆண் : மானாக உன்னை மலையில் பார்த்தேன்…
தேனாக உன்னை மலரில் பார்த்தேன்…
மயிலாக உன்னை வேடந்தாங்கல் காட்டில் பார்த்தேனே…

BGM

ஆண் : ஹோ… பேச சொல்கிறேன் உன்னை…
நீ ஏசி செல்கிறாய் என்னை…
வீணை தன்னையே மீட்டிக் கொண்டதாய்…
எண்ணி கொள்கிறேன் அன்பே…

ஆண் : காலம் என்பது மாறும்…
வலி தந்த காயங்கள் ஆறும்…

ஆண் : மேற்கு சூரியன் மீண்டும் காலையில்…
கிழக்கில் தோன்றி தான் தீரும்…

ஆண் : நதியோடு போகின்ற…
படகு என்றால் ஆடாதா…
ஆனாலும் அழகாக…
கரை சென்று சேராதா…

ஆண் : உயிரே என் உயிரே…
ஒரு வாய்ப்பை தருவாயா…

ஆண் : நிலவாக உன்னை வானில் பார்த்தேன்…
அலையாக உன்னை கடலில் பார்த்தேன்…
சிலையாக கருங்கல்லில் கூட உன்னை பார்த்தேனே…

ஆண் : மானாக உன்னை மலையில் பார்த்தேன்…
தேனாக உன்னை மலரில் பார்த்தேன்…
மயிலாக உன்னை வேடந்தாங்கல் காட்டில் பார்த்தேனே…

BGM

ஆண் : ஹோ… பாதி கண்களால் தூங்கி…
என் மீதி கண்களால் ஏங்கி…
எங்கு வேண்டுமோ அங்கு உன்னையே…
கொண்டு சேர்க்கிறேன் தாங்கி…
நேசம் என்பது போதை…

ஆண் : ஒரு தூக்கம் தாக்கிடும் பாதை…
என்ற போதிலும்…
அந்த துன்பத்தை ஏற்று கொள்பவன் மேதை…

ஆண் : உன்னோடு நான் வாழும்…
இந்நேரம் போதாதா…
எந்நாளும் மறவாத…
நாளாகி போகாதா…

ஆண் : இன்றே இறந்தாலும்…
அது இன்பம் ஆகாதா…

ஆண் : நிலவாக உன்னை வானில் பார்த்தேன்…
அலையாக உன்னை கடலில் பார்த்தேன்…
சிலையாக கருங்கல்லில் கூட உன்னை பார்த்தேனே…

ஆண் : மானாக உன்னை மலையில் பார்த்தேன்…
தேனாக உன்னை மலரில் பார்த்தேன்…
மயிலாக உன்னை வேடந்தாங்கல் காட்டில் பார்த்தேனே…

BGM


Notes : Yaaro En Nenjai Song Lyrics in Tamil. This Song from Kutty (2010). Song Lyrics penned by Thamarai. யாரோ என் நெஞ்சை பாடல் வரிகள்.