Vilagathey Song Lyrics in Tamil

விலகாதே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
சூரியவேலன்ஸ்டீபன் சகரியா & ரக்ஷிதா சுரேஷ்ஸ்டீபன் சகரியாஆல்பம் சாங்ஸ்

Vilagathey Song Lyrics in Tamil


BGM

ஆண் : நீரில்லா நிலமாகி போனேன்…
வேரில்லா மரமாகி போனேன்…
காற்றில்லா தீயாகி போனேனே…

ஆண் : நீரில்லா நிலமாகி போனேன்…
வேரில்லா மரமாகி போனேன்…
காற்றில்லா தீயாகி போனேனே…

ஆண் : மயங்குகிறேன் உன் விழியில்…
நீ போதும் என் வழியில்…
சேர்ந்துவிடு என் உயிரில்…
நீதானே என் விடியல்…

ஆண் : விலகாதே அன்பே நீயும்…
நீதான் என் நிஜமுமடி…
உன்னுடைய நிழலாய் இருந்தும்…
தனியாக நிக்குறேன்டி…

ஆண் : தலைக்கோதும் உந்தன் மடியில்…
நான் சாய வேண்டுமடி…
உன்னருகில் வாழ்ந்தால் போதும்…
என் சாபம் தீருமடி…

BGM

ஆண் : ஹ்ம்ம்… என்னை பார்த்து மறையும் நிலவு…
கலையாத நீ என் கனவு…
விழிமூடி தூங்கும் முன்னே வலி சேருதே…

பெண் : எனக்காக எரியும் கதிரே…
என் வாழ்வில் ஒளி தந்தாயே…
நீ இன்றி என் பூமி இருளானதே…

ஆண் : மண் சேரும் மழை கூட…
வான் சேர வேண்டுமே…
ஒரு துளி நாம் சேர…
கடல் வேண்டுமே…

ஆண் : காதல் பொய்யில்லையே…
காலம் நீ இல்லையே…
உன்னை தாங்கும் வரை…
உண்மை இங்கில்லையே…

பெண் : ஒரு குரல் அலைக்குதோ…
அது உன்னை கேட்குதோ…

ஆண் : ஒரு குரல் அலைக்குதோ…
அது நீ என்று என் உயிர் சொல்லுதோ…

பெண் : விலகாதே அன்பே நீயும்…
நீதான் என் நிஜமுமடா…
உன்னுடைய நிழலாய் இருந்தும்…
தனியாக நிக்குறேன்டா…

பெண் : தலைக்கோதும் உந்தன் மடியில்…
நான் சாய வேண்டுமடா…
உன்னருகில் வாழ்ந்தால் போதும்…
என் சாபம் தீருமடா…

ஆண் : நீரில்லா நிலமாகி போனேன்…
வேரில்லா மரமாகி போனேன்…
காற்றில்லா தீயாகி போனேனே…

BGM

ஆண் : புரியாத கவிதையில் பிழையா…
தவறுக்கு காதல் விலையா…
பிழை இல்லா மனிதன் என்றால்…
இறைவன் இல்லையா…

பெண் : கரைவந்து சேர அலையா…
தேவதையின் இதயம் சிலையா…
கல்லை கூட காதல் என்று கரைப்பதில்லையா…

பெண் : பிரளயத்தில் நிலம் கூட…
நிலை மாறி போகுமே…
நான் அதில் இருந்தாலும்…
உன்னை சேருவேன்…

ஆண் : கருவுற்ற கணமே நான்…
உன் உயிர் தேடினேன்…
உயிரே பிரியாதே…

பெண் : வா அருகிலே…
தாயை போல் தாங்கவா…

ஆண் : உன் மடியிலே…
மழலை போல் தவிழவா…

பெண் : மயங்கிவிட்டேன் உன் விழியில்…
நான் வருவேன் உன் வழியில்…
கலந்துவிட்டேன் உன் உயிரில்…
நீதானே கடலினை மலையினை…
தாண்டியும் வருவாயா…

ஆண் : விலகாதே அன்பே நீயும்…
நீதான் என் நிஜமுமடி…
உன்னுடைய நிழலாய் இருந்தும்…
தனியாக நிக்குறேன்டி…

ஆண் : தலைக்கோதும் உந்தன் மடியில்…
நான் சாய வேண்டுமடி…
உன்னருகில் வாழ்ந்தால் போதும்…
என் சாபம் தீருமடி…

ஆண் : விலகாத விட்டு விலகாத…
என்னை பிரியாதே அன்பே…
விலகாத விட்டு விலகாத…
என்னை பிரியாதே அன்பே…

ஆண் : விலகாத விட்டு விலகாத…
என்னை பிரியாதே அன்பே…
விலகாத விட்டு விலகாத…
என்னை பிரியாதே அன்பே…


Notes : Vilagathey Song Lyrics in Tamil. This Song from Album Songs (2019). Song Lyrics penned by Suriavelan. விலகாதே பாடல் வரிகள்.